126 ஆண்டுகளுக்கு பிறகு வரும் அபூர்வ சனி பிரதோஷம் இன்று. இன்றைய வழிபாட்டால் கிடைக்கும் பலன்கள்

sivan-2
- Advertisement -

கிட்டத்தட்ட 126 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று 9/11/2019 சனிப்பிரதோஷம் நடைபெறுகிறது. இது ஒரு அபூர்வ சனி பிரதோஷம் ஆகும் ஏன் அப்படி கூறுகிறோம் என்றால் சரியாக 126 ஆண்டுகளுக்கு முன்பு இதே போன்ற சனி பிரதேசம் ரேவதி நட்சத்திரத்தில் வந்தது. அதற்கு அடுத்து தற்போது தான் இந்த நிகழ்வு நடைபெறுகிறது. சனி பிரதோஷம் என்பது யாதெனில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு குரு இடம்பெறுவதை குரு பெயர்ச்சி என்போம் அவ்வாறு குருப்பெயர்ச்சிக்குப் பின்பு வரும் முதல் பிரதோசம் சனிப்பிரதோசம் என்றும் அழைக்கப்படும்.

sani-bhagavan

அதேபோன்று கிருஷ்ண பரமாத்மா நரகாசுரனை வதம் செய்த தீபாவளி தினத்திற்கு பிறகு வரும் பிரதோஷம் சனி பிரதோஷம் இதுவாகும். இவை மட்டுமன்றி முருகப்பெருமான் சூரனை வதம் செய்த சூரசம்ஹாரம் பிறகு வரும் பிரதோஷம் சனி மகா பிரதோஷம் ஆகும் இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து வந்த நிகழ்வே ரேவதி நட்சத்திரத்தில் வந்த சனி பிரதோஷம் ஆகும். அந்த அரிய நிகழ்வு தற்போது இன்று வந்துள்ளது எனவே இன்று சனிபகவானை சிவாலயங்கள் சென்று அனைத்து ராசிக்காரர்களும் வழிபட்டால் அவர்களுக்கு கிடைக்கும் நன்மைகளை இந்த பதிவில் காண்போம் வாருங்கள்.

- Advertisement -

சனிப்பிரதோஷம் ஆன இன்று நாம் சிவனை எவ்வாறு வணங்க வேண்டும் என்றால் பிரதோஷ தினமான இன்று பசுவின் கறந்த பாலைக் கொண்டு சிவனையும், சிவன் அருகில் உள்ள நந்தி பகவானையும் அபிஷேகம் செய்து வில்வ இலை மற்றும் சங்குப்பூ வைத்து வழிபட்டால் பூர்வ ஜென்ம பாவங்கள் அனைத்தும் நீங்கி உங்களுக்கு நன்மை கிடைக்கும். மேலும் உலக நன்மையை கருத்தில் கொண்டு தீமையான விஷத்தை சிவன் ஏற்றுக்கொண்டு உங்களுக்கு நன்மையை தரும் அருளை வழங்குவார்.

sivan1-1

பிரதோஷ தினமான இன்று அதிகாலையில் நீராடி குளித்து முடித்த பின்னர் திருநீர் இட்டு சிவநாமம் ஆன நமச்சிவாய என்ற வாசகத்தை ஓதி உங்களது வேண்டுதலை துவங்கலாம். இன்று காலை முதல் பிரதோஷம் முடியும் வரை உணவினை தவிர்த்து விரதமிருந்து பிரதோஷத்தை முடித்த பின்னர் உணவை உட்கொள்ளவேண்டும். பின்னர் நீங்கள் இரவு உணவு சாப்பிடலாம் இப்படி பதினொரு பிரதோஷங்கள் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் சிவனுடைய அருள் உங்களுக்கு கிடைக்கும்.

- Advertisement -

sivan1-2

மேலும் ஒரு சனி பிரதோஷமான இன்று ஒருநாள் நீங்கள் சிவன் கோவிலுக்கு சென்று வந்தால் ஐந்து வருடங்கள் தினமும் நீங்கள் சிவன் கோயிலுக்கு சென்று வந்த புண்ணியம் உங்களுக்கு கிடைக்கும். இந்த பிரதோஷம் வேண்டுதல் மூலம் உங்களுக்கு கிடைக்கும் பலன்கள் யாதெனில் : திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும் , ஏழ்மையில் வாடுபவர்களுக்கு வறுமை நீங்கும், நோய்களால் அவதிப்பட்டு துன்புற்று இருக்கும் நபர்களுக்கு நோய்கள் நீங்கும், எடுத்த காரியங்கள் நிறைவேறாமல் பாதியிலேயே தடங்கலுடன் இருக்கும் அனைவருக்கும் சகல காரியங்களிலும் நீங்கள் நினைத்த வெற்றி கிடைக்கும்.

sivan-3

மேலும் இந்த பிரதோஷ தினத்தில் விரதம் இருந்து சிவனை வழிபடுவர்களுக்கு சிவன் அருளும் கிடைக்கும். பிரதோஷ தினத்தில் சிவாலயம் சென்று பூஜையில் கலந்து கொண்டு சிவபெருமானை அனைவருடனும் வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். இதே தினத்தில் நந்தியையும் சேர்த்து வழிபாடு செய்தால் இந்திரனுக்கு சமமான பெயரும் புகழும் செல்வாக்கும் உங்களுக்கு கிடைக்கும். இன்றைய தினத்தில் நீங்கள் செய்யும் தானங்கள் எண்ணிலடங்கா பலனை கொடுக்கும் என்பதால் நீங்கள் உங்களால் முடிந்த தானங்களை இன்று செய்யலாம்.

- Advertisement -

ஓம் நமச்சிவாய… ஓம் நமச்சிவாய…

இதையும் படிக்கலாமே:
துளசி செழிப்பாக வளர மிக எளிய வழிகள்

இது போன்ற ஆன்மீக தகவல்கள் பலவற்றை படிக்க எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -