ஒவ்வொரு ராசிக்கும் கடன் தீர பரிகாரம்.

kadan pariharam
- Advertisement -

கடன் என்று சொன்னாலே அதனால் நமக்கு பிரச்சனைகள் என்பதுதான் ஏற்படும். கடன் கொடுத்தாலும் பிரச்சினைதான் கடன் வாங்கினாலும் பிரச்சினை தான். பிரச்சனை என்று தெரிந்தும் நம்முடைய இக்கட்டான சூழ்நிலைக்கு நாம் பிறரிடம் கடனை வாங்குவோம். அந்த கடனை திருப்பி அடைப்பதற்காக பலமுறை முயற்சியும் செய்வோம். அந்த முயற்சிகள் வெற்றி அடையாமல் கடைசிவரை கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் தங்களுடைய ராசிக்கு ஏற்ப எந்த பரிகாரத்தை செய்தால் விரைவிலேயே கடன் அடையும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

மேஷ ராசிக்காரர்கள் தயிரை வைத்து மஞ்சள் நிறத்தில் ஏதாவது ஒரு இனிப்பு செய்து வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் பசுவிற்கு தானம் தருவதன் மூலம் கடன் சுமை குறைய ஆரம்பிக்கும். ரிஷப ராசிக்காரர்கள் ஜவ்வரிசியை வைத்து ஏதாவது ஒரு இனிப்பு செய்து வெள்ளிக்கிழமை மாலை நேரத்தில் தானம் தருவதன் மூலம் அவர்களின் கடன் பிரச்சனை குறைய ஆரம்பிக்கும்.

- Advertisement -

மிதுன ராசிக்காரர்கள் தினமும் குளிக்கும் பொழுது சிறிது தயிரை தேய்த்து குளிப்பதன் மூலம் அவர்களின் கடன் சுமை குறையும். கடக ராசிக்காரர்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் வெல்லத்தை ஓடும் நீரில் கரைத்து விட வேண்டும். மேலும் அச்சு வெல்லத்தை குரங்கிற்கு தானமாக தருவதன் மூலமும் கடன் சுமை குறையும்.

சிம்ம ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று அரச மரத்தடியில் எட்டு மண் அகல் விளக்கில் கருப்பு திரி போட்டு தீபம் ஏற்றி வழிபட்டு வர கடன் சுமை தீரும். கன்னி ராசிக்காரர்கள் சனிக்கிழமை தோறும் உளுந்த வடையை செய்து தானமாக தர வேண்டும். எக்காரணம் கொண்டும் உளுந்த வடையை தாங்கள் உண்ணக்கூடாது. மேலும் துளசி செடிக்கு தினமும் நீர் ஊற்றி அகலில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட கடன் பிரச்சனை தீரும்.

- Advertisement -

துலாம் ராசிக்காரர்கள் வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஹோரையில் பசும்பாலை வில்வ மரத்திற்கு ஊற்ற வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 24 வெள்ளிக்கிழமைகள் செய்துவர கடன் பிரச்சினை தீரும். மேலும் வெள்ளிக்கிழமை அன்று அரச மரத்தடி விநாயகருக்கு 11 தீபங்கள் ஏற்றி வைத்து 11 முறை வலம் வந்தாலும் கடன் பிரச்சனை தீரும். விருச்சிக ராசிக்காரர்கள் லஷ்மி நரசிம்மருக்கு பசும்பால் மற்றும் பானகத்தை நெய்வேத்தியமாக படைத்து பிரசாதமாக வழங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்து வர அவர்களின் கடன் பிரச்சனை தீரும்.

தனுசு ராசிக்காரர்கள் வீடு இல்லாமல் கஷ்டப்படுபவர்களுக்கு வீடு கட்டுவதற்காக செங்கல் கல்லை வாங்கி தானமாக தருவதன் மூலம் அவர்களின் கடன் சுமை தீரும். மேலும் இந்த தானத்தை செவ்வாய்க்கிழமை அன்று செய்ய வேண்டும். மகர ராசிக்காரர்கள் சனிக்கிழமை அன்று எள்ளுருண்டை தயார் செய்து தானம் தர அவர்களின் கடன் சுமை தீரும்.

- Advertisement -

கும்ப ராசிக்காரர்கள் வியாழக்கிழமை மாலை ஐந்தில் இருந்து ஆறு மணிக்குள் குங்குமப்பூ கலந்த பாதாம் கீரை மகாவிஷ்ணுவிற்கு நெய்வேத்தியமாக படைத்து தானும் உண்டு பிறருக்கும் பிரசாதமாக தர கடன் பிரச்சனை தீரும். மீன ராசிக்காரர்கள் தொழு நோயாளிகளுக்கு செவ்வாய்க்கிழமை செவ்வாய் ஹோரையில் சப்பாத்தியை தானம் செய்வதன் மூலம் அவர்களின் கடன் சுமையிலிருந்து வெளிவர முடியும்.

இதையும் படிக்கலாமே: தீபாவளி 2023 வழிபடும் முறையும் நேரமும்

இந்த எளிமையான பரிகாரத்தை தங்களின் ராசிக்கு ஏற்ப செய்து கடன் பிரச்சினைகள் இருந்து விடுபடலாம்.

- Advertisement -