வராத பணமும் வர ரத்த சந்தன வழிபாடு

pana varavu
- Advertisement -

கோடிக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பவர்களுக்கும் நூற்றுக்கணக்கில் பணத்தை சம்பாதிப்பவர்களுக்கும் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளை தான் கொண்டிருப்பார்கள். அதில் எந்தவித மாற்று கருத்தும் இருக்காது. அப்படிப்பட்ட பணத்தை நாம் பெறுவதற்கு பல வழிகளில் முயற்சி செய்தாலும் ஒரு சிலருக்கு மட்டுமே அந்த முயற்சிகள் கை கொடுத்து பணவரவு என்பது அதிகரிக்கும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் எந்த ஒரு பொருளை வைத்து வழிபாடு செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைத்து பணவரவும் அதிகரிக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கடனாக கொடுத்த பணமாக இருந்தாலும் சரி கஷ்டப்பட்டு உழைத்த பணமாக இருந்தாலும் சரி அது நம் கைக்கு வரும் வரை அது நம் நமக்கு சொந்தமானதாக இருக்காது. அப்படி இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமிக்கு உகந்த இந்த பொருளை வைத்து வழிபடுவதன் மூலம் நமக்கு வரவேண்டிய பணம் அனைத்தும் வந்து சேரும் என்று கூறப்படுகிறது. அந்த பொருள்தான் ரத்த சந்தனம்.

- Advertisement -

ரத்த சந்தன வழிபாடு

நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான ரத்த சந்தன கட்டையை வாங்கிக் கொள்ள வேண்டும். அது சிறிய அளவில் இருந்தால் போதும். அந்த ரத்த சந்தன கட்டையை வீட்டிற்கு வாங்கி வந்து அதை சுத்தமான தண்ணீரை ஊற்றி கழுவிக்கொள்ள வேண்டும். பிறகு அதற்கு மேல் மஞ்சளை முழுமையாக தடவ வேண்டும். தடவிய பிறகு ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்து அந்த கட்டை மேல் வைக்க வேண்டும்.

அந்த கட்டையில் இருந்து நாணயம் கீழே விழுகாத அளவிற்கு மஞ்சள் நூலால் கட்ட வேண்டும். பிறகு இந்த சந்தன கட்டையை மகாலட்சுமி தாயாரின் பாதத்தில் வைத்துவிட்டு மல்லிகை பூக்களால் “ஓம் மகாலட்சுமியே போற்றி, ஓம் குபேர லட்சுமி போற்றி, ஓம் அஷ்டலக்ஷ்மியே போற்றி” என்ற மந்திரத்தை கூறி 108 முறை அர்ச்சனை செய்ய வேண்டும். இந்த அர்ச்சனையை தினமும் செய்ய வேண்டும். மல்லிகை பூ கிடைக்காதவர்கள் குங்குமத்தால் அர்ச்சனை செய்யலாம்.

- Advertisement -

15 நாட்களுக்கு ஒரு முறை இந்த சந்தன கட்டையை எடுத்து மறுபடியும் தண்ணீரை ஊற்றி கழுவி மஞ்சள் தடவி அதே ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து மஞ்சள் நிற நூலால் கட்டி தொடர்ந்து வழிபாடு செய்ய வேண்டும். இந்த வழிபாட்டை வீட்டிலும் மேற்கொள்ளலாம். தொழில் அல்லது வியாபாரம் செய்யும் இடங்களிலும் செய்யலாம். அர்ச்சனை செய்த மல்லிக பூவை கால் படாத இடத்திலும், துளசி செடியிலும் போட்டு விடலாம். இந்த முறையில் தொடர்ந்து மகாலட்சுமி தாயாரை வழிபாடு செய்தால் மகாலட்சுமி தாயாரின் அருளால் பணவரவு என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: மயில் தோகை ரகசியங்கள்

முழு நம்பிக்கையுடன் இந்த பூஜையை செய்து வழிபட்டு வருபவர்களின் வாழ்க்கையில் மகாலட்சுமி தாயாரின் அருள் பரிபூரணமாக கிடைத்து பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது.

- Advertisement -