வசீகர தோற்றத்தை பெற பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

rathi
- Advertisement -

புராண கதைகளின் படி தேவலோகத்து வாசிகளான ரம்பை, ஊர்வசி, திலோதமா, மேனகை, ரதி தேவி, இவர்கள் எல்லாம் தேவதைகளின் வரிசையில் இருப்பவர்கள். இவர்கள் கடவுள்கள் அல்ல. இருப்பினும் இவர்கள் நல்ல தேவதைகள் என்பதால் இவர்களையும் நாம் பூஜித்து வணங்கலாம். அதில் எந்த ஒரு தவறும் கிடையாது.

குறிப்பாக வசீகரத் தோற்றத்தை பெற வேண்டும் என்றால் இந்த தேவதைகளின் வழிபாடு நமக்கு சிறப்பான பலனை கொடுக்கும். அழகாக மாற வேண்டும் என்று நினைக்கும் பெண்கள், அழகு சம்பந்தப்பட்ட துறையில் சாதிக்க வேண்டும் என்று நினைக்கக் கூடிய பெண்கள் செய்ய வேண்டிய ஒரு ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

சில பெண்கள் அழகு துறை சார்ந்த விஷயத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்று நினைப்பார்கள். உதாரணத்திற்கு பியூட்டி பார்லர், டிவி, ஆங்கர், நடிப்புத்துறை, இதில் எல்லாம் சாதிக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு வசீகரத் தோற்றமும், ஒரு கவர்ச்சியும் அழகும் தேவை. இதையெல்லாம் பெறவும் பெண்கள் இந்த வழிபாட்டை செய்யலாம்.

அது மட்டும் இல்லாமல் ஆண் பெண் வசியமும் இந்த பூலோகத்துக்கு தேவையான ஒரு விஷயம். மனைவி, கணவனை தன்பக்கம் ஈர்க்க, வசீகர தோற்றத்தை பெற வேண்டும் என்று நினைத்தாலும் ஆன்மீகம் சார்ந்த வழிபாட்டை செய்யலாம். தவிர வேறு எந்த தவறான காரியத்திற்கும் இந்த மந்திரத்தை சொல்லக்கூடாது, இந்த வழிபாட்டை மேற்கொள்ளக்கூடாது. நல்லதுக்காக மட்டுமே ஆன்மீகத்தில் சொல்லப்பட்டுள்ள ஒரு வழிபாட்டு முறை இது.

- Advertisement -

வசீகரத் தோற்றத்தைப் பெற பெண்கள் சொல்ல வேண்டிய மந்திரம்

இந்த மந்திரம் ரதிதேவிக்கு உரியது. தொடர்ந்து 108 நாட்கள் பெண்கள் இந்த மந்திரத்தை சொல்ல வேண்டும். காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து ரதிதேவியை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். ‘ஓம் ஹ்ரீம் ரதிதேவியை நமஹ’ என்ற இந்த மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்.

இதனால் உங்களுடைய வெளிப்புறத் தோற்றத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது. ஆனால் உங்களுடைய தேஜஸ் கூடும். சர்வ லட்சணமும் இருக்கக்கூடிய பெண்கள் என்று சொல்லுவார்கள் அல்லவா, அந்த லட்சணம் உங்களுக்கு கூடும். நிறைய பெண்கள் அழகு சார்ந்த துறையில் சாதிக்க நிறைய போராடி கொண்டு இருப்பார்கள். அவர்களுக்கு அழகும் இருக்கும். அறிவும் இருக்கும். திறமையும் இருக்கும். ஆனால் ஏதோ ஒரு காரணத்தினால் வாய்ப்புகள் கைநழுவி செல்லும்.

இதையும் படிக்கலாமே: தை கிருத்திகை அன்று சொல்ல வேண்டிய மந்திரம்

அப்படிப்பட்டவர்கள் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நீங்கள் நினைத்தபடி அழகு சார்ந்த துறையில் ஒரு சாதனையாளர்களாக மாறலாம். அந்த அளவுக்கு ஒரு பவர் உங்களுக்குள் வந்துவிடும். அதற்கு உண்டான சக்தி இந்த எளிமையான சின்ன மந்திரத்திற்குள் அடக்கி இருக்கிறது. இந்த மந்திரத்தை நீங்களும் உச்சரித்து பாருங்கள். உங்களுக்கான பிரச்சனைகளை தீர்த்து வைக்க இந்த பிரபஞ்சம் நல்லதொரு வழியை காட்டித் தரும் என்ற நம்பிக்கையில் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -