ரேஷன் அரிசியில், ஒரு முறை இப்படி மாவு அரைத்து, தோசை சுட்டுப் பாருங்கள்! ஹோட்டல் டேஸ்ட் ரோஸ்ட் ரெடி!

hotel-dosa
- Advertisement -

பொதுவாகவே மொறுமொறு தோசை என்றால் குழந்தைகளிலிருந்து பெரியவர்கள் வரை எல்லோருக்கும் பிடிக்கும். எல்லோராலும் சுலபமாக வீட்டில் மொறு மொறு தோசையை செய்ய முடியாது. ஹோட்டலுக்கு சென்றால், ஸ்பெஷல் தோசை வேண்டும் என்று கேட்டு சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருப்போம். ஹோட்டலில் சாப்பிடுவது போல, ஒரு ரோஸ்ட், உங்களுடைய வீட்டிலும், உங்களுடைய கைகளால் செய்து, உங்களுடைய பிள்ளைகளுக்குக் கொடுத்தால் எப்படி இருக்கும்? அதுவும் ரேஷன் அரிசியை வைத்து! ரேஷன் அரிசியில் ‘ஹோட்டல் ரோஸ்ட்’ எப்படி செய்வது என்று பார்த்து விடலாமா?

garlic-dosa

தோசை மாவு அரைக்க தேவையான பொருட்கள்:
ரேஷன் புழுங்கல் அரிசி – 3 கப், ரேஷன் பச்சரிசி – 1 கப், உளுத்தம் பருப்பு – 3/4 கப், துவரம் பருப்பு – 2 டேபில் ஸ்பூன், கடலைப் பருப்பு – 2 டேபிள் ஸ்பூன், வெந்தயம் – 1 ஸ்பூன்.

- Advertisement -

அதாவது 3 ஆழாக்கு ரேஷன் அரிசி எடுத்துக்கொண்டால், ஒரு அழகு பச்சரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். 1/4 கிலோ அளவு உளுத்தம்பருப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு கிலோ அரிசிக்கு 1/4 கிலோ உளுத்தம் பருப்பு.

rice-wash-water

முதலில் ரேஷன் அரிசியை நன்றாக சுத்தம் செய்து ஐந்திலிருந்து ஆறு முறை கழுவவேண்டும். இறுதியாக இரண்டு முறை, கல்லுப்பு சேர்த்து உராசி நன்றாக கழுவினால், ரேஷன் அரிசி வாடை தோசையில் அடிக்காது. இப்போது உளுந்து, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், அனைத்தையும் அரிசியோடு சேர்த்து, அகலமான பாத்திரத்தில் போட்டு, நல்ல தண்ணீர் ஊற்றி, நான்கிலிருந்து ஐந்து மணி நேரம் வரை ஊற வைக்க வேண்டும். உப்பு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

5 மணி நேரம் ஊற வைத்தபின் அரிசி பருப்பு வகைகளை ஒன்றாக, கிரைண்டரில் போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும். அதாவது சிறிய ரவை பதத்திற்கு. மொழு மொழுவென்று அழித்து விடக் கூடாது. தோசை மாவை அரைக்கும் போதும், இட்லி மாவு பதத்திற்கு தான் அரைக்க வேண்டும். தோசை ஊற்ற போகிறோம், என்பதற்காக தண்ணீர் ஊற்றி அரைத்தீர்கள். என்றால், சரியான முறையில் புளிக்காது.

idli-mavu

அரைத்த மாவை ஒரு பெரிய பாத்திரத்தில் வழித்து, தேவையான அளவு உப்பு போட்டு, கை போட்டு கரைத்து 8 மணி நேரம் வரை புளிக்க வைத்து விடுங்கள். அதன்பின்பு, புளித்து வந்த மாவை, கரண்டி போட்டு அடித்துக் கலக்க வேண்டும். புளித்த மாவு மொத்தமாக தயாராகிவிட்டது.

- Advertisement -

dosa-mavu

இப்போது உங்களுக்கு தேவையான அளவு மாவை, தனியாக பாத்திரத்தில் எடுத்து, அதில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஒரு ஸ்பூன் சர்க்கரை போட்டு, நன்றாக கலந்து, அதன் பின்புதான் தோசை ஊற்றவேண்டும். மீதமிருக்கும் கெட்டி மாவை  பிரிட்ஜில் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள். தேவைப்படும் போது தான் மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

dosai

சரி. சர்க்கரை போட்டு தண்ணீர் ஊற்றி கரைத்த மாவை எப்படி தோசைக்கல்லில் ஊற்றுவது? தோசை கல்லிலை நன்றாக காய வைத்து விட்டு, அதில் ஒரு ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, வெங்காயம் அல்லது உருளைக்கிழங்கு வைத்து நன்றாக தேய்க்க வேண்டும். அதன் பின்பாக, ஒரு குழி கரண்டி அளவு மாவை ஊற்றி, லேசாக தேய்க்க வேண்டும். தோசையை ஊற்றி 30 வினாடிகள் கழித்து தோசை கரண்டியை, தோசை மேல் வைத்து நன்றாக, சமமாக எல்லா மாவையும் தடவி விட வேண்டும். ஹோட்டல் மாஸ்டர், தோசை கல்லிலிருந்து அந்த மாவை எடுத்து விடுவார். நாம் அப்படியே சதுரமாக தேய்த்து விட்டால் போதும். அதன் பின்பு, தேவையான அளவு எண்ணெயோ அல்லது நெய்யோ ஊற்றி, தோசையை சிவக்க விட வேண்டும்.

dosa-master

இந்த தோசையை திருப்பிப் போட வேண்டாம். மேலே ஒரு இட்லி தட்டு போன்ற முடி இருந்தால், அதை தோசையை மூடி வேகவைத்து தோசையை எடுத்தீர்கள் என்றால், பேப்பர் ரோஸ்ட் போலவே இருக்கும். குறிப்பாக ஓட்டலில் செய்த பேப்பர் ரோஸ்ட் போலவே வரும் என்பது குறிப்பிடத்தக்கது.

dosakal

பின்குறிப்பு: தோசைக்கல் நன்றாக சூடு ஆன பின்பு, தோசைக்கல்லை, சிம்மில் வைத்து, தோசை ஊற்றவேண்டும். தோசையை ஊற்றி உடனே அடுப்பை வேகமாக வைத்துவிட வேண்டும். இல்லை என்றால் தோசை வறவற என்று வரும். தோசையை கல்லிலிருந்து, எடுத்த பின்பு, மீண்டும் அடுப்பை சிம்’மில் வைத்து விட்டு, தோசைக்கல்லில் சூட்டை தணித்து விட்டு, அதன் பின்புதான் அடுத்த தோசை ஊற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே
மீந்து போன சாதம் இருந்தா போதும் இரவு புதிய விதமான டிபன் 10 நிமிசத்துல தயார் செஞ்சி அசத்திரலாம்.

இது போன்ற மேலும் பல சமையல் சார்ந்த குறிப்புகளை அறிந்து கொள்ள எங்களோடு இணைந்திருங்கள்.

- Advertisement -