பத்து நிமிசத்துல உங்க முகம் பளபளன்னு மில்கி ஒய்ட்டா மாறி கியூட்டா ஆக சூப்பர் ஃபேஸ் பேக். அட இது தெரியாம ஆயிரம் ஆயிரமா பார்லருக்கு செலவு பண்ணணோம்ன்னு நினைப்பீங்க.

rice face beauty toner
- Advertisement -

இப்போதெல்லாம் முகத்தை வெள்ளையாக மாற்ற பல்வேறு கிரீம்கள் டோனர்கள் வந்து விட்டது. இது ஒரு பக்கம் பெருகிக் கொண்டே செல்ல மற்றொரு பக்கம் அழகு நிலையத்தில் இதற்கென ஆயிரமாக பணத்தை செலவு செய்து தங்களின் நிறத்தை கூட்டிக் கொள்கிறார்கள். முகம் பளபளக்க தேவையற்ற கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தாமல், அதிக செலவும் செய்யாமல் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எப்படி நம்முடைய நிறத்தை அதிகரிப்பது என்று இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகத்தில் நிறத்தை அதிகரிக்க ஃபேஸ் பேக்
இந்த பேக் தயாரிக்க முதலில் அடுப்பில் ஒரு சில்வர் பாத்திரத்தை வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். இதில் இரண்டு டேபிள் ஸ்பூன் அரிசியை சேர்த்து வேகம் வரை காத்திருந்து அதன் பிறகு அடுப்பை அணைத்து விட்டு, இதை வடிகட்டி கொள்ளுங்கள.

- Advertisement -

இப்பொழுது இந்த சாதம் வடித்த தண்ணீர் தனியாகவும் சாதத்தை தனியாகவும் பிரித்து எடுத்துக் கொள்ளுங்கள். இந்த தண்ணீரை ஆற வைத்த பிறகு ரெண்டு டேபிள் ஸ்பூன் சுத்தமான ரோஸ் வாட்டர் கலந்து ஒரு ஸ்ப்ரே பாட்டில் ஊற்றிக் கொள்ளுங்கள் இது ஒரு நல்ல டோனராக செயல்படும்.

அடுத்து எடுத்து வைத்த அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நல்ல பைன் பேஸ்ட்டாக அரைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு இந்த பேஸ்ட்டில் இரண்டு டேபிள் ஸ்பூன் பீட்ரூட் சாற்றை கலந்து நன்றாக குழைத்த பிறகு உங்கள் முகத்தில் பேக் போட்டு பத்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். பத்து நிமிடம் கழித்து தண்ணீர் தொட்டு முகத்தை வட்ட வடிவில் மசாஜ் செய்த பிறகு சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள்.

- Advertisement -

முகத்தை துடைத்து சுத்தமாக காய்ந்த பிறகு நாம் ஏற்கனவே தயார் செய்து வைத்த டோனரை முகத்தில் ஸ்பிரே செய்து விடுங்கள். இந்த டோனரை கழுத்து, கை, கால், முட்டி என அனைத்து இடத்திலும் பயன்படுத்தலாம். இதைத் தொடர்ந்து பயன்படுத்தும் போது நம் முகத்தில் உள்ள ஓபன் போர்ஸ் எல்லாம் மூடி முகம் சைனிங் ஆக மாறி இளமை தோற்றத்துடன் இருப்பீர்கள்.

இதையும் படிக்கலாமே: கறுத்த தேகம் தக தகன்னு தங்கம் மாறி 10 நிமிடத்தில் ஜொலிக்க உங்க வீட்டில் இந்த 2 பொருள் இருந்தாலே போதுமே!

இந்த ஃபேஸ் பேக்கை நீங்கள் வெளியில் சென்று வந்ததும் உடனே போட்டு விட்டால் சண் டேன் வருவது முற்றிலுமாக தடுக்கப்பட்டு விடும். அதுமட்டுமின்றி இந்த பேக்கை வாரம் இரு முறை பயன்படுத்தும் போது ஜப்பனிய பெண்களைப் போல நல்ல ஷைனிங்கான முக அழகை பெறுவதுடன் முகம் எப்போதும் இளமையாக இருக்கும்.

- Advertisement -