எந்தவித சாபமாக இருந்தாலும் அவை நம்மை விட்டு விலகி வாழ்க்கை சிறந்து விளங்க இந்த பரிகாரத்தை தொடர்ந்து எட்டு வாரங்கள் செய்திடுங்கள்

- Advertisement -

மண்ணில் பிறக்கும் பொழுது குழந்தைகள் அனைவரும் நல்லவர்களாக தான் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் வளருகின்ற சூழ்நிலையைப் பொறுத்து அவர்களின் குணநலன்கள் மாறுபடுகின்றன. அவ்வாறு மனித மனம் என்பது எந்த சூழ்நிலையில் எவ்வாறு இருக்கும் என்பதை எவராலும் கண்டறிய முடியாது. ஏதேனும் ஒரு பிரச்சினை வந்து விட்டால் அந்த சமயத்தில் கோபம் காரணமாக நமது வாயில் இருந்து நம்மை அறியாமலேயே சில வார்த்தைகள் வந்து விடும். அவ்வாறு ஒரு சிலர் மற்றவரை திட்டும் பொழுது அவர்கள் மனதார கோப வார்த்தைகளை வெளிப்படுத்துவதால் அதன் தாக்கம் மற்றவரை பாதிக்கிறது. இவ்வாறான சாபத்தினால் அவர்களின் வாழ்க்கையில் எந்தவித நல்ல காரியங்களும் நடப்பதற்கு பலவித தடைகள்ஏற்பட்டுககின்றன. இவ்வாறான சாபங்களை அகற்றி நலமான வாழ்க்கை பெற இந்த தேங்காய் பரிகாரத்தை தவறாமல் எட்டு வாரம் செய்திடுங்கள் போதும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எவ்வாறு முறையாக செய்வது என்பதை பற்றி இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

Baby names Tamil

நமது வீடுகளில் எப்பொழுதும் பூஜை செய்வது போல வெள்ளிக்கிழமை அன்று காலை வீட்டையும், பூஜை அறையையும் சுத்தம் செய்து, தலைக்கு குளித்துவிட்டு, பூஜை பாத்திரங்கள் மற்றும் சுவாமி படங்களுக்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, மலர் சூட்டி தயாராக வைத்துக்கொள்ளவேண்டும்.

- Advertisement -

அதன் பிறகு எந்தக் குறைபாடும் இல்லாத 8 மாவிலைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றை சுத்தமாக கழுவி பூஜை அறையின் முன்பு வரிசையாக அடுக்கி வைக்க வேண்டும். மாவிலையின் காம்பு பகுதி சுவாமி படத்தை நோக்கியும், நுனிப்பகுதி நம்மை நோக்கியும் இருக்குமாறு வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அவற்றின்நுனிப்பகுதிகளளில் மஞ்சள் குங்கும பொட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

maailai

பிறகு அரை மூடி தேங்காயை எடுத்து அதனை நன்றாக துருவிக் கொள்ள வேண்டும். பின்னர் அவற்றுடன் இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் சர்க்கரை சேர்த்து நைவேத்தியமாக செய்து கொள்ள வேண்டும். பின்னர் இந்த தேங்காய் துருவலை மாவிலைகளின் மீது வைத்து விட வேண்டும். பிறகு பூஜை அறையில் விளக்கு ஏற்றி சூடம் காண்பித்து இறைவனை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

நான் அறிந்தும் அறியாமலும் ஏதேனும் தவறு செய்திருந்தால் அவற்றை மன்னித்து எனக்கோ எனது முன்னோர்களுக்கோ ஏதேனும் சாபம் இருந்தாலும் அதனை தகர்த்தெறிந்து எனது வாழ்க்கை முன்னேற அருள்புரிய வேண்டும் என்று மனமுருக வேண்டிக் கொள்ள வேண்டும்.

தேங்காய்

இவ்வாறு தொடர்ந்து எட்டு வாரங்கள் இந்த மாவிலை தேங்காய் பூஜையை செய்து வர எவ்வித பாவமாக இருந்தாலும் எத்தனை ஜென்மத்து சாபமாக இருந்தாலும் அவை விலகி நமது வாழ்வு மேன்மை அடையும்.

அதுமட்டுமல்லாமல் மாதம் ஒருமுறை பௌர்ணமி தினம் அன்று அறுகம்புல்லை தலையில் வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் ஆவாரம் பொடியை வாங்கி வந்து அதில் ஒரு ஸ்பூன் எடுத்து தலையில் தடவி தலைக்கு குளிக்க வேண்டும். இவ்வாறு 11 பவுர்ணமிகள் செய்து வந்தால் கண்ணுக்கு தெரியாத பாவம் நம்மை விட்டு விலகி நன்மையே நடந்திடும்.

- Advertisement -