சகல சௌபாக்கியத்தையும் அருளும் ஒரு வரி மந்திரம்

thathathiyar manthiram
- Advertisement -

குரு பார்க்கின் கோடி நன்மை இந்த பழமொழியை கேள்விப்படாதவர் யாரும் இருக்க முடியாது. அப்படியானால் என்ன ஒருவருக்கு குருவானவரின் அருள் கிடைத்து விட்டால் போதும். அவருடைய வாழ்க்கையில் எட்ட முடியாத உயரத்தை எட்டுவார் என்பதில் சந்தேகம் இல்லை என்பதே. அப்படியான குருவின் அருளைப் பெற ஒரு அருமையான மந்திர வழிபாட்டை பற்றி தான் மந்திரம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

குருவின் அருள் பெற மந்திரம்

குரு எனில் நாம் இதுவரையில் குரு பகவான் மட்டும் தான் என்று நினைத்து வழிபாடு செய்து வருகிறோம். குரு என்பது குருவின் ஸ்தானத்தை அடைந்த அனைவருமே குரு பகவானின் நிலையை அடைந்தவர்கள் என்று சொல்லப்படுகிறது. அப்படி குருவின் ஸ்தனத்தை அடைந்த மகான்கள் பலர் நம்முடன் வாழ்ந்து மறைந்து இருக்கிறார்கள். இன்னும் வாழ்ந்து கொண்டும் இருக்கிறார்கள்.

- Advertisement -

அந்த வகையில் குருமார்களான தத்தாத்ரேயர் சுவாமிகள், சாய்பாபா, ஸ்ரீ மஹா பெரியவா, ஆதிசங்கரர், ரமண மகரிஷி, விவேகானந்தர் போன்றவர் எல்லாம் இந்த குருவின் அம்சத்தில் நிறைந்திருப்பவர்கள். இவர்களை நினைத்து நாம் சொல்லும் இந்த மந்திரமானது நம்முடைய வாழ்க்கையில் நமக்கான அனைத்தையும் தரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

அதிலும் குறிப்பாக தத்தாத்ரேய சுவாமிகள் பிரம்மா, விஷ்ணு, சிவன் இவர்கள் மூவரின் அம்சமாகவே கருதப்படுகிறார். குரு என்ற உன்னத நிலையை அடைந்த இவர்களின் யாரேனும் ஒருவரை மனதில் நினைத்துக் கொண்டு வழிபட்டால் நம்முடைய தலையெழுத்தையே கூட மாற்றக் கூடிய சக்தி இவர்களுக்கு உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

திகம்பர திகம்பர ஸ்ரீபாத வல்லப திகம்பரா

என்ற குருவின் இந்த மந்திரத்தை தினமும் நாம் ஜெபித்துக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு நாளில் குறைந்தது 108 முறையாவது இந்த மந்திரத்தை தியான முறையில் அமர்ந்து ஜெபித்தால் நாம் நினைத்தவை யாவும் நம்மிடம் வந்து சேரும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

இந்த மந்திரத்தை ஜெபிக்க ஜெபிக்க நம்முடைய மனம் பக்குவம் அடைந்து பாவங்கள் செய்வதை அறவே தவிர்த்து விடும். பாவங்கள் செய்யாது போனாலே புண்ணிய பலன்களும் நன்மைகளும் நம்மை சேர்ந்து வரும். தோஷங்கள் எதுவும் அண்டாது. இதன் மூலம் நாம் நல்லதொரு வாழ்க்கையை செல்வ செழிப்புடன் வாழலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீடு தேடி வர பரிகாரம்

குருவின் இந்த மந்திர வழிபாட்டு முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருப்பின் இதுபோல தினமும் இந்த மந்திரத்தை உச்சரித்து வாருங்கள். இதனால் உங்களுடைய வாழ்க்கையில் அனைத்து சௌபாக்கியங்களும் பெற்று நல்ல முறையில் வாழ வழித் தேடி கொள்ளலாம் என்ற இந்த கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -