உப்பு கொண்டு செய்யப்படும் உப்பு பரிகாரம்

- Advertisement -

உப்பு என்பது மனித குலத்திற்கு கிடைத்த ஒரு வரம் ஆகும். தினந்தோறும் நாம் உண்கிற உணவில் சுவையை தருவதோடு, நம் உடலின் சீரான இயக்கத்திற்கும் உப்பு அவசியமாகிறது. பாறை உப்பு, கல் உப்பு என பல வகைகளாக உப்பு இருக்கின்றது. இவை அனைத்துமே உணவு பயன்பாட்டிற்கு மட்டுமல்லாமல் தாந்திரிக பரிகாரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் நாம் வீட்டிலேயே செய்து கொள்ளக் கூடிய சில எளிய உப்பு பரிகாரம் குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

உப்பு பரிகாரம்

தங்களின் உடலளவிலும், மனதளவிலும் எதிர்மறையான விடயங்களால் பாதிக்கப்பட்டிருப்பதாக கருதுபவர்கள் “உப்பு குளியல்” மேற்கொள்வதால் உடலில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல்கள் வெளியேறி, நேர்மறையான சிந்தனைகளும், செயல்பாடுகளும் அவர்களுக்கு உண்டாகும். உப்பு குளியலை மேற்கொள்வதற்கு காலையில் நீங்கள் குளிக்கின்ற சமயத்தில், பக்கெட் நிறைய தண்ணீர் நிரப்பி கொள்ள வேண்டும். அதில் 2 ஸ்பூன் அளவிற்கு கல் உப்பை போட்டு நன்கு கலந்து விட வேண்டும். இந்த கல் உப்பு தண்ணீரில் நன்கு கரைந்த பிறகு ஒரு 20 நிமிடங்கள் கழித்து குளியலை மேற்கொள்ள வேண்டும். மனதில் நேர்மறையான எண்ணங்களை நினைத்தவாறு உங்களின் உடலில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல்கள் நீங்குவதாக மனதளவில் உணர்ந்து உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை இந்த உப்பு கலந்த நீரை ஊற்றி குளிக்க வேண்டும்.

- Advertisement -

தங்களுக்கு கண் திருஷ்டிகளால் பாதிப்பு ஏற்படுவதாக கருதுபவர்கள், கடைகளில் விற்கின்ற ராக் சால்ட் எனப்படும் பாறை உப்பை வாங்கி வந்து, அதை சிறிய அளவிலான இரண்டு பிளாஸ்டிக் பைகளில் போட்டு மூடி, தாங்கள் உறங்குகின்ற கட்டில் அல்லது பாயின் அடியில், தங்களின் தலை வைக்கும் பகுதிக்கு கீழாக வைத்து தூங்க வேண்டும். தினமும் இப்படி தூங்கி வரும் பொழுது, காலையில் எழுந்து அந்தப் பாறை உப்பு உள்ள பைகளை திறந்து பார்க்கும் பொழுது, அந்த பாறை உப்பு அடர் சிவப்பு நிறத்தில் மாறியிருந்தால் கண் திருஷ்டி ஏற்பட்டிருக்கிறது என பொருள். அந்த பாறை உப்பு திரிஷ்டி தோஷங்களை உள்வாங்கியதால் அதன் நிறம் மாறியதாக கருத்தில் கொண்டு, அந்த உப்பு இருக்கின்ற பிளாஸ்டிக் பைகளை ஏதேனும் ஒரு ஏரி குளத்தில் மூழ்கடித்து விட வேண்டும்.

உங்கள் வீட்டின் குறிப்பிட்ட அறைகளில் எதிர்மறை ஆற்றல்களின் தாக்கம் இருப்பதாக நீங்கள் உணரும் பட்சத்தில், சிறிதளவு கல்லுப்பை எடுத்து, அந்த அறையின் நான்கு மூலைகளிலும் வைத்து விட வேண்டும். வாரத்திற்கு ஒருமுறை இந்த கல்உப்பை எடுத்து வெளியில் திருஷ்டி கழிக்கும் பொழுது, அந்த நெருப்பில் போட்டு எரித்துவிட வேண்டும்.

- Advertisement -

பிறகு புது கல் உப்பை அந்த அறைகளின் நான்கு முறைகளும் வைக்க வேண்டும். இப்படி செய்வதால் ஏற்கனவே அந்த அருகில் இருக்கின்ற எதிர்மறையாற்றல்கள் வெளியேறுவதோடு, வேறு ஏதேனும் தீய ஆற்றல்கள் அந்த அறைக்குள் நுழையாமலும் தடுக்கும் கவசமாக அந்த கல் உப்பு செயல்படும்.

இதையும் படிக்கலாமே: செவ்வாய் தோஷம் பரிகாரம்

ஒரு சிறிய பீங்கான் கிண்ணம் நிறைய கல்லுப்பை போட்டு நிரப்பி, உங்கள் வீட்டு குளியலறையில் ஒரு ஓரத்தில் வைத்து விட வேண்டும். இப்படி செய்வதால் உங்கள் வீட்டில் எத்தகைய எதிர்மறை ஆற்றல்கள் இருந்தாலும் அது வெளியேறிவிடும். பிறரின் திருஷ்டி தோஷங்கள், மாந்திரீக ஏவல்கள் போன்றவை உங்களை பாதிக்காமல் இந்த பரிகாரம் உங்களை காக்கும்.

- Advertisement -