உப்பு பரிகாரம்

salt pariharam in tamil
- Advertisement -

நம் உண்ணும் உணவில் தவறாமல் இடம் பிடிப்பது உப்பு. இந்த உப்பு பலவகை பட்டாலும் நாம் எல்லோரும் அதிகம் பயன்படுத்துவது கல் உப்பு தான். எனினும் ஒரு சில காரணங்களுக்காக பாறை உப்பு போன்ற இயற்கை உப்புகளையும் நாம் பயன்படுத்துகிறோம். அந்த வகையில் பல வகையான உப்புகளைக் கொண்டு நமக்கு வாழ்வில் மிகவும் பயனுள்ளவை கிடைக்கச் செய்ய வேண்டிய உப்பு பரிகாரங்கள் என்னென்ன என்பது குறித்து இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

சால்ட் பரிகாரம்

கல்லுப்பு என்பது மிகவும் தூய்மையான ஒரு இயற்கை பொருளாகும். மகாலட்சுமி அம்சம் நிறைந்த இந்த கல் உப்பை கொண்டு செய்யும் ஒரு பரிகாரம் குறித்து இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம். ஏதாவது ஒரு வளர்ப்பிறை முகூர்த்த தினத்தில் அதிகாலை 4.30 மணி முதல் 6:00 மணிக்குள்ளாக எழுந்து குளித்து முடித்து விட வேண்டும் அல்லது முகம், கை, கால், வாய் போன்றவற்றை மட்டுமாவது அலம்பி கொள்ள வேண்டும்.

- Advertisement -

இதன் பிறகு சுத்தமான கல்லுப்பை, உங்கள் இரு கைகளிலும் எடுத்துக் கொண்டு கிழக்கு திசையை நோக்கியவாறு தரையில் அமர்ந்து கொள்ள வேண்டும். கல்லுப்பை வைத்திருக்கும் இரண்டு கைகளையும் உங்கள் இரண்டு தொடைகளின் மீது வைத்துக் கொண்டு, கைகளை இறுக்கமாக மூடி உங்கள் மனதிற்குள்ளாகவே உங்களுக்கு என்ன தேவையோ, அதை நினைத்து வேண்டிக்கொள்ள வேண்டும். இப்படி வழிபட்டு முடித்ததும் அந்த கல்லுப்பை ஓடும் ஆற்று நீரில் போட்டு விடலாம். அல்லது நீங்கள் குளிக்கின்ற நீரில் போட்டு கரைத்து குளிக்க வேண்டும். இப்படி தினந்தோறும் தொடர்ந்து செய்துபவர்களுக்கு கூடிய விரைவிலேயே அவர்கள் வேண்டியது கிடைக்கும் என்பது இந்த தாந்திரீக பரிகாரத்தின் விதியாகும்.

வீட்டில் நேர்மறை சக்தி அதிகரித்து, அதன் மூலம் செல்வ சேர்க்கை பெருக வேண்டும் என நினைப்பவர்கள் சிறிதளவு கல் உப்பு எடுத்துக்கொண்டு, அதை உங்கள் வீட்டின் நான்கு மூலைகளிலும் சிறிதளவு போட்டு வைக்க வேண்டும். உங்கள் வீட்டின் வாயிற் படியிலும், பின்வாயிற்படியினும் சிறிதளவு கல் உப்பு வைக்க வேண்டும். இப்படி கல்லுப்பை வீட்டில் வைப்பதால் வீட்டிற்குள் எத்தகைய எதிர்மறை ஆற்றல்களும் நுழைய முடியாது. மேலும் கல் உப்பு என்பது செல்வத்தின் தெய்வமான மகாலட்சுமியின் அம்சம் கொண்டது என்பதால் வீட்டிற்குள் செல்வத்தை ஈர்க்கும். வீண் விரயங்கள் ஏற்படாமல் தடுக்கும். மறக்காமல் கல்லுப்பை ஒவ்வொரு 10 நாட்களுக்கு ஒரு முறை புதிதாக மாற்றி வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுக்கு செல்வ ரீதியிலான அதிர்ஷ்டம் ஏற்பட ஒரு மிகச் சிறிய பிளாஸ்டிக் கவரில் சிறிதளவு கல் உப்பை போட்டு, அதை உங்கள் மணி பர்ஸ்சில் வைத்து வெளியில் செல்லங்கள் அல்லது உங்கள் வீட்டில் அல்லது தொழிற் கூடங்களில் பணம் வைக்கும் பெட்டியில் வைத்துக் விடுங்கள். இப்படி செய்வதால் அந்தக் கல்லுப்பு பணத்தை ஈர்க்கும் ஒரு கருவியாக செயல்பட்டு உங்களுக்கு தனவரவை உண்டாக்கும். இந்த கல்லுப்பையும் பத்து நாட்களுக்கு ஒரு முறை புதிதாக மாற்ற வேண்டும்.

உப்புகளில் பல வகை உண்டு. அதில் பாறை உப்பு ஒரு வகை. தற்போது பல அங்காடிகளில் இந்த பாறை உப்பு கிடைக்கின்றது. உங்களுக்குத் தேவையான அளவு பாறை உப்பை வாங்கி வீட்டில் வைத்துக் கொள்ளுங்கள். ஒவ்வொரு வாரமும் உங்கள் வீட்டை தண்ணீர் ஊற்றி கழுவும் பொழுது, அந்த தண்ணீரில் சிறிதளவு இந்த பாறை உப்பை போட்டு நன்கு கலந்து, அதன் பிறகு இந்த தண்ணீரைக் கொண்டு வீட்டை கழுவி சுத்தம் செய்வதால் உங்களுக்கு எதிரிகளால் செய்யப்பட்ட மாந்திரீக ரீதியிலான தாக்குதல்கள், எதிர்மறையான அதிர்வலைகளின் பாதிப்புகள் போன்றவற்றிலிருந்து இந்தப் பாறை உப்பு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் காக்கும்.

இதையும் படிக்கலாமே: ஏழரை சனி பரிகாரம்

நீங்கள் தினமும் குளிக்கின்ற பொழுது, குளிக்க பயன்படுத்தும் தண்ணீரில் சிறிதளவு இந்த பாறை உப்பை போட்டு நன்கு கலந்து, அந்த நீரில் குளிப்பதால் உங்களின் உடலை சுற்றி உள்ள கண்ணுக்குத் தெரியாத சக்தி சக்தி உடல்களில் இருக்கின்ற எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி, உங்களின் உடல் மற்றும் மனதிற்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் கொடுக்கும். மனதில் நேர்மறையான சிந்தனைகள் அதிகம் ஏற்பட உதவும்.

- Advertisement -