பொருளாதார தடை நீங்க சமையலறை பரிகாரம்

kitchen pariharam
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் பணம் என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாக திகழ்கிறது. அந்த பணத்தை சம்பாதிப்பதற்காக பல வழிகளையும் முயற்சி செய்கிறார்கள். அப்படி முயற்சி செய்தாலும் பலரால் பணத்தை சம்பாதிக்க முடியாத சூழ்நிலை உண்டாகிறது. அதையும் மீறி சம்பாதித்தாலும் அதை சேமித்து வைக்க கூடிய நிலை உருவாவது கிடையாது. இதைத்தான் பொருளாதார தடை என்று கூறுகிறோம். அப்படிப்பட்ட பொருளாதார தடையை நீக்குவதற்கு சமையல் அறையில் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

ஒரு வீட்டில் இருக்கக்கூடிய முக்கியமான ஒரு இடமாக தான் சமையலறை திகழ்கிறது. சமையலறை எந்த அளவிற்கு சுத்தமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு வீடும் சுத்தமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் மகாலட்சுமி தாயார் வாசம் செய்யக்கூடிய இடமாக சமையலறை திகழ்வதால் சமையலறை தூய்மையாக இருக்கும் பட்சத்தில் மகாலட்சுமி தாயார் மனமகிழ்ந்து நமக்கு அருள்புரிவார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சமையலறையில் இருக்கக்கூடிய பல பொருட்கள் தாந்திரீக ரீதியாக பரிகாரம் செய்வதற்குரிய பொருட்களாக கருதப்படுகிறது. மேலும் மகாலட்சுமி தாயாரை வசியம் செய்யக்கூடிய பொருட்களாகவும் திகழ்கின்றன.

- Advertisement -

பொருளாதார தடை விலக சமையலறை பரிகாரம்
இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை அன்றுதான் செய்ய வேண்டும். அதுவும் காலையில் சுக்கிர ஹோரையில்தான் செய்ய வேண்டும். இதற்கு ஒரு சிறிய அளவில் இருக்கக்கூடிய டம்ளரை எடுத்துக் கொள்ளுங்கள். இது சாதாரண டம்ளராக இருந்தாலே போதும். நம்முடைய கட்டைவிரல், ஆள்காட்டி விரல் மற்றும் நடுவிரல் இவை மூன்றும் சேர்ந்து எடுக்கக்கூடிய அளவாக மூன்று முறை கல் உப்பை எடுத்து அந்த டம்ளரில் போட வேண்டும்.

அதற்கு மேல் அதாவது கல் உப்பிற்கு மேல் இதே போல் மூன்று முறை பச்சரிசியை எடுத்துப் போட வேண்டும். பச்சரிசிக்கும் மேல் இதே போல் மூன்று முறை வெள்ளை சர்க்கரையை எடுத்துப் போட வேண்டும். பிறகு இதற்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தையோ அல்லது இரும்பு துண்டு ஏதாவது ஒன்றையோ வைக்க வேண்டும். இப்பொழுது இந்த டம்ளரை சமையலறையின் தென்கிழக்கு மூலையில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

வாரத்திற்கு ஒருமுறை இந்த டம்ளரில் இருக்கக்கூடிய உப்பு, சர்க்கரை மற்றும் பச்சரிசியை ஓடும் நீரில் போட்டு விட வேண்டும். மறுபடியும் புதிதாக மாற்ற வேண்டும். நாணயம் மற்றும் இரும்பு துண்டை மறுபடியும் நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முறையில் வாராவாரம் நாம் செய்து வரும்போது நம்முடைய வீட்டில் பொருளாதாரத்தில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். பணவரவு என்பது அதிகரிக்கும்.

இதையும் படிக்கலாமே: மங்களங்கள் உண்டாக மஞ்சள் பிள்ளையார்

அனைவரின் வீட்டிலும் கிடைக்கக்கூடிய எளிமையான இந்த பொருட்களை வைத்தே நம்முடைய பொருளாதார தடையை நீக்கி பணவரவை அதிகரிக்க முடியும்.

- Advertisement -