வீடு, வியாபாரம்,அலுவலகம் என அனைத்து இடத்திலும் உங்களின் தேவைக்கு பணம் உங்களை தேடி வர அரிசியில் இதை ஒளித்து வைத்து விடுங்கள் போதும். வற்றாத பண வரவிற்கு எளிய வழி.

- Advertisement -

பணம் இல்லாத ஒரு வாழ்க்கை வாழ்க்கையே இல்லை. இன்று ஒரு சாதாரணமான வாழ்க்கை வாழ்வதற்கு கூட பணம் பெரிதளவில் தேவைப்படுகிறது. அப்படியான பணம் நமக்கு நினைத்த மாத்திரத்தில் கிடைக்க வேண்டுமென்றால் இந்த எளிய பரிகாரம் அதற்கு உதவி செய்யும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதையெல்லாம் இந்த ஆன்மீகம் குறித்து பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீடா கட்டும் தொழில் செய்யும் இடமாகட்டும் எந்த இடத்திலும் பணவரவு என்பது தாராளமாக இருந்தால் தான் அந்த இடம் ஒரு சமூகமான சூழ்நிலையில் இருக்கும். வியாபாரம் செய்யும் இடத்தில் தொழில் நன்றாக நடந்து வருமானம் அதிகரித்தால் தான் தொழிலும் நன்றாக இருக்கும்.  வீடும் நன்றாக இருக்கும். அதே போல் உழைத்துக் கொண்டு வரும் பணம் வீட்டில் பன்மடங்கு பெருங்கி இருந்தால் தான் வீடு சந்தோஷமாக இருக்கும்.

- Advertisement -

நினைத்தவுடன் பணம் வர செய்ய வேண்டிய பரிகாரம்:
வீட்டில் பண வரவு தாராளமாக இருக்க உங்களிடம் இருக்கும் பணத்தில் அதிகபட்சமான தொகை அதாவது உங்களிடம் அன்றைய தினம் நூறு ரூபாய் தான் இருக்கிறது என்றால் அந்த 100 ரூபாய் ஒரு சிகப்பு நிற மணி பர்ஸ் அல்லது கவர் இப்படி ஏதாவது ஒன்றில் போட்டு அதை அரிசி பானையின் அடியில் வைத்து அதன் மேல் அரிசியை கொட்டி வைத்து விடுங்கள். இந்த சிகப்பு நிறத்தில் இருக்கும் பணம் அரிசி பானையில் இருக்கும் போது அந்த இடத்தில் பண வரவு அதிகரிக்கும் என்று சொல்லப்படுகிறது. இதை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

அடுத்து வியாபாரம், தொழில் செய்யும் இடத்தில் பணவரவு அதிகரிக்கவும், வியாபாரம் நன்றாக நடந்து வாடிக்கையாளர்கள் பெருகவும் நீங்கள் தொழில் செய்யும் இடத்தில் பிரதானமான டேபிள் அதாவது கல்லாப்பெட்டி அல்லது அலுவலகமாக இருந்தால் அங்கு நீங்கள் அமரும் இடம். இந்த இடத்தில் ஒரு சிறிய கண்ணாடி பவுலில் வால்நட்டை நிரப்பி வைத்து விடுங்கள்.

- Advertisement -

வால்நட் ஆனது குரு கிரகத்தின் அனுகிரகம் பெற்றது. குரு பார்க்கின் கோடி நலம் உண்டு என்ற வார்த்தை அனைவரும் கேள்விப்பட்டு ஒன்று தான். குருவின் அனுகிரகம் பெற்ற இந்த வால்நட் நீங்கள் இருக்கும் இடத்தில் இருக்கும் பொழுது அங்கு பண வரவு தாராளமாக இருக்கும். வியாபாரம் பெருகும் வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். இந்த வால்நட்டை நீங்கள் அவ்வப்போது ஒவ்வொன்றாக எடுத்து சாப்பிடலாம். அதில் சுத்தமாக தீர்ந்த பிறகு மறுபடியும் வால்நட்டை நிரப்பி வைத்து விடுங்கள். இதையும் எப்போது வேண்டுமானாலும் செய்யலாம்.

நீங்கள் நினைத்த மாத்திரத்தில் பணம் உங்களைத் தேடி வர இந்த சின்ன எளிய தாந்திரீக பரிகாரத்தை செய்து வந்தால் நிச்சயம் அதற்கான பலன் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. எந்த ஒரு செயலையும் நம்பிக்கையோடு, விடாமுயற்சியுடன் செய்தால் நிச்சயம் அதில் வெற்றி கிடைக்கும். அத்துடன் இந்த சின்ன எளிய பரிகாரத்தையும் செய்து உங்களின் பண வரத்தை தாராளமாக பெருக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -