நீங்கள் வேலை செய்யும் இடத்தில் சம்பள உயர்வு கிடைக்க, வீட்டில் பண வரவு அதிகரிக்க இந்த எளிய பரிகாரத்தை மட்டும் தவறாமல் செய்து பயன்பெறுங்கள்

job
- Advertisement -

அலுவலகத்தில் வேலை செய்பவர்கள் கடினமாக உழைத்து, நேர்மையாக இருந்தாலும் அவர்களுக்கு தகுந்த பதவியும் வருமான உயர்வும் கிடைப்பதில்லை. ஆனால் ஒரு சிலருக்கு வேலைக்கு சேர்ந்த சில நாட்களிலேயே முதலாளியிடம் நல்ல பெயர் வாங்கி, அவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு அனைத்தும் கிடைத்துவிடும். இப்போது இருக்கின்ற காலம் திறமைக்கு தகுந்த ஊதியம் கொடுப்பதாக இல்லை. ஒருவர் மற்றொருவரை புகழ்ந்து பேசி, அவர் சொல்படி கேட்கும் பொழுது அவருக்கு தேவைப்பட்ட அனைத்தும் கிடைத்து விடுகிறது. இவ்வாறு அனைத்து பிரச்சினைகளையும் சமாளித்து சம்பள உயர்வை பெறுவதற்கு அவதிப்பட்டு கொண்டிருப்பவர்கள், இந்த பூஜை பரிகாரத்தையும், இந்த மந்திரத்தையும் சரியாக உச்சரித்து வர நீங்கள் வேண்டிய பணத்தின் வரவு அதிகரிக்கும். வாருங்கள் இந்த பரிகாரத்தை எப்படி செய்ய வேண்டும் என்பதையும், அதற்கான மந்திரத்தையும் இந்த பதிவின் மூலம் தெளிவாக தெரிந்து கொள்வோம்.

பணக்கஷ்டத்தில் துன்பப்பட்டு கொண்டிருப்பவர்கள், வெளியில் கொடுத்த பணம் திரும்பி வராமல் வெகுநாட்களாக நிலுவையில் இருந்து கொண்டிருப்பவர்கள், கேட்ட இடத்தில் பணத்தின் வருகைக்காக காத்து இருப்பவர்கள் அனைவருமே இந்த பரிகாரத்தை செய்து பலன் பெற முடியும். இந்த பரிகாரத்தை சரியாக செய்து, இந்த மந்திரத்தை உச்சரித்து வரும்பொழுது பணவரவு அதிகரிக்கிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை தொடர்ந்து ஆறு வெள்ளிக்கிழமைகள் செய்ய வேண்டும். அதாவது காலை சுக்கிர ஓரையில் ஆறு மணியிலிருந்து 7 மணிக்குள் செய்ய வேண்டும். இதனை தவறவிட்டால் மதியம் ஒரு மணியிலிருந்து இரண்டு மணிக்குள் செய்ய வேண்டும். அப்படியும் செய்ய தவறினால் இரவு 8 மணி முதல் 9 மணிக்குள் செய்ய வேண்டும். இந்த பூஜையை சரியாக செய்யும் பொழுது பணத்தின் வரவு அதிகரிக்கிறது.

இந்தப் பரிகாரத்தை செய்வதற்கு முதலில் 20 மொச்சை பயிறை எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் ஒரு சதுரவடிவ வெள்ளை துண்டை எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இந்த மொச்சை பயிறுடன் ஒரு ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கலந்து, அவற்றை குக்கரில் சேர்த்து கொள்ள வேண்டும். பின்னர் இவற்றுடன் அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து, அடுப்பின் மீது வைத்து 2 விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.

- Advertisement -

மொச்சை பயறு குழையாமல் வேக வைக்க வேண்டும். பின்னர் மொச்சைப்பயிறு நன்றாக ஆறியதும், இதனை ஒரு வெள்ளை துணியில் வைத்து லேசாக ஒரு முடிச்சு போட்டுக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த மொச்சைப் பயிறு மூட்டையை கையில் வைத்துக் கொண்டு பூஜை அறையின் முன் அமர்ந்து இந்த மந்திரத்தை சொல்லி மனதார வேண்டிக் கொள்ள நல்ல பலன் கிடைக்கும்.

ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் கமலே கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத
ஸகல சௌபாக்யம் தேஹி தேஹி
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் ஓம் மஹாலக்ஷ்ம்யை நமஹ

- Advertisement -