அடுத்த மாதம் சம்பளம் வாங்கியவுடன் முதல் செலவாக இதை செய்து பாருங்கள். அதற்கு அடுத்த மாத சம்பளம் அப்படியே இரட்டிப்பாகும்.

amman3
- Advertisement -

மாத சம்பளம் வாங்கக்கூடிய ஒவ்வொருவரும் பட்ஜெட் போட்டு தான் குடும்பம் நடத்துவோம். எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் சரி, அவரவர் தேவைக்கு அது குறைவாகத்தான் இருக்கிறது. பத்தாயிரம் ரூபாய் சம்பளம் வாங்குபவன் கூட, ஒரு ஐந்தாயிரம் கூட கிடைத்தால் நன்றாக இருக்குமே என்று யோசிப்பது இயற்கை. ஒரு லட்ச ரூபாய் சம்பளம் வாங்குபவர் கூட, இன்னும் 25 ஆயிரம் சேர்த்து கிடைத்தால் நன்றாக தான் இருக்கும் என்று நினைப்பதுவும் உணடு. அவரவர் தகுதிக்கு என்றவாறு அவரவருடைய செலவு அதிகரித்துக் கொண்டே தான் இருக்கும்.

வருமானம் உயர வாங்க வேண்டிய பொருள்:
வாங்க கூடிய சம்பளத்திலிருந்து கொஞ்சம் கூடுதலான சம்பளத்தை பெற வேண்டும் என்றால், நாம் என்ன செய்வது. கூடுதலான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கூடுதலான உழைப்பை போட வேண்டும். சில பேர் ஓவர் டைம் செய்வார்கள். சில பேர் செய்யக்கூடிய வேலையை விட, இன்னும் கொஞ்சம் நல்ல வேலையாக உயர்ந்த சம்பளத்தில் வேலையை தேடுவார்கள். இந்த விஷயத்தில் எல்லாம், அதாவது நீங்கள் செய்யக்கூடிய இந்த முயற்சிகள் எல்லாம் உங்களுக்கு வெற்றியை தர வேண்டும் என்றால் தற்போது வாங்க கூடிய சம்பளப் பணத்தில் முதல் செலவாக என்ன செய்யலாம்.

- Advertisement -

நீங்கள் வாங்கக்கூடிய முதல் சம்பளத்தில் ஒரு பாட்டில் சுத்தமான பசு நெய் வாங்கி குழந்தைகள் அனாதை ஆசிரமத்திற்கு தானமாக கொடுக்கலாம். இதை செய்தால் உங்களுடைய வருமானம் இரட்டிப்பாவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது. நெய் லட்சுமி கடாட்சம் நிறைந்த பொருள். நெய் வாங்க எவ்வளவு செலவு செய்கிறீர்களோ, அவ்வளவு பணம் திரும்பவும் உங்கள் கைக்கு கிடைக்கும்.

அதேபோல குலதெய்வ கோவிலுக்கு வஸ்திர தானம் வழங்க வேண்டும். உங்கள் குலதெய்வம் அம்மனாக இருந்தால் தரமான ஒரு நல்ல புடவையை வாங்கி தாம்புல தட்டில் வைத்து, மாலை, வெற்றிலை, பாக்கு, பழம், பூ வலையிலோடு சேர்த்து இந்த புடவையை அம்மனுக்கு கொடுத்து அலங்காரம் செய்து அபிஷேகம் செய்து வைக்க வேண்டும்.

- Advertisement -

உங்களுடைய குலதெய்வம் ஆண் குலதெய்வம் ஆக இருந்தால் அந்த குலதெய்வத்திற்கு கொஞ்சம் தரமான வேட்டி, அங்க வஸ்திரம், பூ பழம் மாலை இவைகளை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். சம்பளம் வாங்கியவுடன் சம்பளப் பணத்திலிருந்தும் ஒரு மாதம் முதல் செலவை இப்படி செய்து பாருங்கள். நிச்சயமாக அடுத்தடுத்து வரக்கூடிய மாத சம்பளத்தில் நல்ல வித்தியாசம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வியாபாரம் பன்மடங்கு பெருகி, லாபம் அதிகரித்து வியாபாரத்தில் நீங்களும் ஒரு பெரும் புள்ளியாக மாற வாரத்தில் ஒரு நாள் மட்டும் இந்த தீபத்தை ஏற்றி வாருங்கள்.

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு அடுத்து வரக்கூடிய, மாத சம்பளம் உங்களுக்கு உயர்ந்தது என்றால், உயர்ந்த சம்பளத்திலிருந்து ஒரு தொகையை முடியாதவர்களுக்கு தானமாக கொடுத்து வாருங்கள். அதாவது கஷ்டப்படுபவர்களுக்கு உதவி செய்யலாம். இதை ஒரு மாதம் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வாழ்நாள் முழுவதும் உங்கள் சம்பள தொங்கையில் இருந்து ஒரு தொகையை இல்லாதவர்களுக்கு தானமாக கொடுத்து உதவி வரும்போது, மேலும் உங்கள் வருமானம் உயர்ந்து கொண்டே தான் செல்லும். மனதார மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த விஷயத்தை பின்பற்றி பாருங்கள். உங்களுடைய வருமானத்தில் வரும் மாற்றத்தை பார்த்து நீங்களே வியப்பீர்கள். நல்லது நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -