சாம்பிராணியுடன் இந்த ஒரு பொடியை போட்டு தூபம் போட்டால் வீட்டில் துஷ்ட சக்திகள் விலகி, நோய்கள் நீங்கி அதிர்ஷ்டம் வருமாம் தெரியுமா?

agathiyar-sambrani
- Advertisement -

வீட்டில் எப்பொழுதும் நறுமணத்துடன் இருந்தால் நமக்கே ஒரு விதமான எதிர்மறை ஆற்றல் நீங்கி நேர்மறை ஆற்றல் அதிகரிப்பது போல உணர முடியும். கற்பூர வாசம், மஞ்சள், குங்குமத்தின் வாசம், சாம்பிராணி போடும் வாசம் இவை எல்லாம் தெய்வீக ஆற்றலை அதிக அளவில் ஈர்க்கக்கூடிய ஒரு வாசனையாக இருந்து வருகிறது.

கோவிலுக்கு சென்றாலே இவ்விதமான வாசனைகளை நாம் உணர முடியும். அது போல வீட்டிலும் நாம் இந்த ஒரு தூபத்தை போட்டு வைத்தால் தெய்வீக சக்தியை உணர முடியும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்திகள் அகன்று, செய்வினை கோளாறுகள் அண்டாமல், அதிர்ஷ்டம் நம்மை நோக்கி வருமாம். அப்படியான ஒரு எளிய ஆன்மீக குறிப்பை தான் இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

- Advertisement -

பொதுவாக சாம்பிராணி போடுவது துஷ்ட சக்திகளை மட்டும் அல்லாமல் கண் திருஷ்டிகளையும் அகற்றும் ஒரு அற்புதமான எளிய பரிகாரமாக இருந்து வருகிறது. வாரம் ஒரு முறை வீடு முழுவதும் சாம்பிராணி புகையை எழுப்பினால் உங்களை சுற்றி இருக்கும் கண் திருஷ்டிகள், அக்கம் பக்கத்தினருடைய கெட்ட பார்வைகள், எதிரிகளின் சூழ்ச்சிகள், வஞ்சனைகள் அனைத்தும் உங்களை ஒன்றும் செய்யாமல் திரும்பி சென்று விடும்.

தேங்காய் சிரட்டையை எடுத்து ஸ்டவ்வில் இரண்டு நிமிடம் காண்பித்தாலே நன்கு பற்றி எரிய ஆரம்பித்து விடும். பின் இதை தூப காலில் போட்டால் சிறிது நேரத்தில் துண்டு துண்டாகி நெருப்பு அணைந்து தணல் எரிய ஆரம்பிக்கும். இந்த தணலில் நீங்கள் கொஞ்சம் போல சாம்பிராணி புகையை போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் ஒரு பொடியை சேர்த்து போடும் போது வீட்டில் நோய் நொடிகளும் அண்டாது. மூலிகைகளில் சிறந்த மூலிகையாக இருப்பது மிளகு, சுக்கு, திப்பிலி ஆகும். இம்மூன்றும் ஒருவருடைய வீட்டில் பயன்படுத்தி வந்தால் எந்த விதமான நோய் நொடிகளும் அவ்வளவு எளிதாக நெருங்காது என்பது நம்பிக்கையாகும்.

- Advertisement -

இந்த மூலிகையை உடலுக்கு உள்ளே மட்டுமல்லாமல் தூபம் போடும் போதும் பயன்படுத்தினால் நோய் நொடிகள் அண்டாமல் வீட்டில் நல்ல ஒரு எனர்ஜிடிக் வைப்ரேஷன் கிடைக்கும். ரெண்டு துண்டு சுக்குடன், கொஞ்சம் மிளகு, கொஞ்சம் திப்பிலி ஆகியவற்றை சேர்த்து நைசாக மிக்ஸியில் பவுடர் போல அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த ஒரு பவுடரை நீங்கள் சாம்பிராணி போடும் பொழுது கொஞ்சம் போல் தூவி விட வேண்டும். இதன் மூலம் வரக்கூடிய புகையானது வீடு முழுவதும் பரவி நல்ல ஒரு நறுமணத்தை ஏற்படுத்தும்.

இது தெய்வீக சக்தியை ஈர்த்து தரக்கூடிய அற்புதமான ஒரு பொடியாகவும் இருக்கிறது. அது மட்டும் அல்லாமல் ஆரோக்கியத்திலும் நற்பலன்களை அள்ளிக் கொடுக்கக்கூடிய இந்த ஒரு தூபத்தை நீங்கள் செவ்வாய் கிழமை அல்லது வெள்ளிக்கிழமையில் ஏற்றுவது ரொம்பவும் சிறப்பானது ஆகும். தூப புகையை எல்லா இடங்களிலும் நீங்கள் காண்பித்த பிறகு அதை நீங்கள் உங்களுடைய கட்டிலுக்கு அடியில் வைத்து விடுங்கள். அனல் முழுவதும் அடங்கியதும் அதை நீங்கள் வெளியில் போட்டுக் கொள்ளலாம். இதனால் தம்பதிகளுக்குள் பிரச்சனைகள் வராமல் இருக்கும் என்கிற நம்பிக்கையும் உண்டு.

- Advertisement -