விநாயகர் என்றாலே நம்முடைய சங்கடங்களை தீர்த்து நல்ல முறையில் வாழ வைப்பவர். அப்படியான விநாயகருக்கு உகந்த சங்கடகர சதுர்த்தியில் அவரை வழிபடும் போது நம்முடைய வினைகளை தீர்ப்பது மட்டுமின்றி நம்மை செல்வ வளத்துடன் வாழ வைப்பார் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.
அப்படி வழிபடும் வேளையில் விநாயகருக்கு பிடித்த ஒரு பொருளை அவருக்கு நெய்வேத்தியமாக படைத்து அதை தானமாக கொடுக்கும் போதும் எப்பேர்பட்ட வறுமையில் இருப்பவர்களும் நல்ல நிலைமைக்கு மாற முடியும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன பொருள் என்பதையும் அதை வைத்து எப்படி வணங்க வேண்டும் என்பதை பற்றியும் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
சங்கடஹர சதுர்த்தி வழிபாடு
தெய்வங்களிலே எளிமையான தெய்வம் எனில் விநாயகர் பெருமான். வெறும் அவல் பொறி கடலை மட்டும் நெய்வேத்தியமாக வைத்தால் கூட ஆவலாக அதை ஏற்றுக் கொண்டு நமக்கு அருள் புரியும் அற்புதமான தெய்வம். அத்தகைய எளிமையான தெய்வத்திற்கும் உகந்த பொருளாக சில உள்ளது. அந்த பொருட்களை வைத்து நெய்வேத்தியம் செய்யும் போது இன்னும் பலன் கிடைக்கும்.
அப்படி விநாயகருக்கு மிகவும் பிடித்தமான பொருட்களில் ஒன்று தான் இந்த கொழுக்கட்டை. இதை சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு வைத்து வழிபட்டால் நம்முடைய வாழ்க்கை நலம் பெறும் என்பது ஐதீகம். இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று இப்போது தெரிந்து கொள்ளலாம்.
சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகருக்கு பூஜை மாலை வேளையில் செய்வது தான் உகந்தது. அந்த நேரத்தில் உங்கள் வீட்டிற்கு அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு சென்று விநாயகருக்கு அருகம் புல் வைத்து வெற்றிலை பாக்கு பழம் வழங்க வேண்டும் விநாயகர் பற்றி வழிபட வேண்டும். பிறகு அவருக்கு பிடித்த கொழுக்கட்டை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும்.
இந்தக் கொழுக்கட்டை குறைந்தது 8 என்ற எண்ணிக்கையில் வைத்து வணங்க வேண்டும். இதற்கு மேலும் வைக்கலாம் அது அவரவர் விருப்பம். ஆனால் எட்டு எண்ணிக்கை என்பது ஒரு கணக்கு. இதை வைத்து வணங்கிய பிறகு ஆலயத்திற்கு வருபவர்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும்.
இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நிறைவேற ராமர் வழிபாடு
இந்த முறையில் விநாயகரை சங்கடஹர சதுர்த்தி நாளில் விநாயகர் வழிபடும் போது நம்முடைய வறுமையை போக்கி செல்வ நலத்துடன் வாழ வைப்பார் இந்த வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்