ஞாயிற்றுக்கிழமை இந்த புகையை போட்டு விட்டால், குடும்பத்தில் சண்டை சச்சரவு என்பதே இருக்காது. வீட்டிற்குள் நுழைந்தாலே அடிதடியோடு சண்டை வருமா? இந்த பரிகாரம் உங்களுக்காக.

dhupam
- Advertisement -

நம்முடைய மனது சொல்லும். நாம இன்னைக்கு வீட்டுக்கு போனால் சண்டை போடவே கூடாது என்று. வீட்டில் இருப்பவர்களுடன் சண்டை போடக்கூடாது என்றுதான் வீட்டிற்குள்ளும் நுழைவோம். ஆனால் நிலை வாசலை தாண்டி வீட்டிற்குள் காலை எடுத்து வைத்த உடன் நமக்கு திடீரென்று என்ன பிடித்துக் கொள்ளுமோ என்னமோ தெரியாது. பேய் பிடித்து ஆடுவது போல உடனே சண்டை போடக்கூடிய சூழ்நிலைக்கு நாம் தள்ளப்படுவோம். மன இறுக்கம், மன அழுத்தம் ஏற்படும். வேலையை விட்டு வீட்டிற்குள் நுழைந்த உடனேயே அடிதடி சண்டைதான்.

குடும்பத்தோடு வெளியே செல்லுவோம். வெளியே சென்று சந்தோஷமாகத்தான் நேரத்தை கழித்துவிட்டு வீட்டிற்கு வருவோம். வீட்டிலிருந்து வெளியே போனால் சண்டை வருவது குறைவு. வீட்டிற்குள் வந்தால் மட்டும் இந்த பிரச்சனை தலை தூக்குவதற்கு என்ன காரணமாக இருக்கும். வீட்டில் இருக்கும் கெட்ட சக்தியும், கண் திருஷ்டியும் தான். உங்கள் வீட்டிற்குள் ஏதோ ஒன்று சரியில்லை. அதை சரி செய்வது எப்படி. ஒரு அருமையான புகைபோடும் முறை உள்ளது. இந்த மூன்று பொருட்களை சேர்த்து ஞாயிற்றுக்கிழமை இரவு புகைபோட்டால் குடும்பத்தில் சண்டை சச்சரவை இருக்காது. வீட்டை பிடித்த அந்த கெட்ட சக்தி வெளியேறிவிடும்.

- Advertisement -

குடும்ப ஒற்றுமைக்கு தூபம் போடும் முறை:
தூபக்கால் இருக்கும் அல்லவா. அதிலேயே இந்த புகையை போடலாம். ஒரு சிறிய துண்டு கற்பூரத்தை ஏற்றி வைத்து விடுங்கள். அந்த நெருப்பில் 3 தர்ப்பை புல், 1 ஸ்பூன் கடுகு, 1 ஸ்பூன் கல் உப்பை போட்டு, விட வேண்டும். அவ்வளவு தான்.

அந்த நெருப்பில் இந்த பொருட்கள் எல்லாம் பொசுங்கி புகை வரும். அந்தப் புகையை வீடு முழுவதும் காண்பிக்கவும். எல்லா பொருட்களும் எரிந்து கருகி புகை அடங்கி போன உடன் இதை கொண்டு போய் வீட்டிற்கு வெளியே கொட்டி விட்டு வரவும். உங்களால் வீட்டிற்கு வெளியே குப்பையை கொண்டு போய் போட முடியாது என்றால், குப்பை தொட்டியை நிலை வாசலுக்கு வெளியே எடுத்து வைத்துவிட்டு அதில் இந்த சாம்பலை கொட்டி விடுங்கள்.

- Advertisement -

ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருப்பவர்கள் எல்லாம் தூங்க செல்வதற்கு முன்பு, இந்த மூன்று பொருட்களையும் நெருப்பில் போட்டு இதிலிருந்து வரும் புகையை வீடு முழுவதும் காண்பித்து விட்டு பிறகு சாம்பலை வெளியே கொட்டி விட்டு, பரிகாரத்தை செய்தவர்கள் முகம் கை கால்களை கழுவி விட்டு உறங்கச் செல்ல வேண்டும்.

அவ்வளவு தான். இதை மூன்று வாரம் ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் குடும்பம் மன நிம்மதியை பெரும். வீட்டிற்குள் வந்தால் சண்டை என்ற நிலைமை படிப்படியாக மாறும். வீட்டிற்கு வந்தால் மன அழுத்தம் வருகிறது, மன நிம்மதியே இல்லை, சண்டை போடும் நிலைமைக்கு தள்ளப்படுகிறீர்கள் என்ற சூழ்நிலை இருக்குது அல்லவா அதை மாற்றி தரக்கூடிய சக்தி இந்த புகைக்கு உண்டு.

இதையும் படிக்கலாமே: சொந்த தொழிலில் கொடி கட்டி பறந்து, சொந்தமாக நிலம் வீடு எல்லாம் வாங்க வேண்டுமானால் இந்த வழிபாட்டை தான் செய்ய வேண்டும். வேண்டிய உடனே கை மேல் பலன் தரக் கூடிய குபேர சூட்டி வழிபாடு.

நம்பிக்கை உள்ளவர்கள், அடிக்கடி வீட்டில் சண்டை வருபவர்கள் நிச்சயம் இந்த ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பார்த்து பலன் பெறலாம் என்ற தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -