தினமும் இதை மட்டும் நெற்றியில் இட்டுக் கொண்டால் போதும். உங்களுக்கு ஒவ்வொரு நிமிஷமும், ஒவ்வொரு நொடியும் நல்லது மட்டுமே நடக்கும். எந்த கெடுதலும் உங்கள் பக்கம் கூட நெருங்க முடியாது.

thilagam
- Advertisement -

நாமும் நன்றாக இருக்க வேண்டும் நம்மை சுற்றி இருப்பவர்களும் நன்றாக இருக்க வேண்டும். இந்த எண்ணத்தை கொண்டவர்கள் நிச்சயமாக வாழ்க்கையில் நன்றாகத்தான் இருப்பவர்கள். அவர்களுக்கு லட்சுமி கடாட்சத்தில் எந்த ஒரு குறைபாடும் ஏற்படாது. அதே சமயம் அவர்களை எந்த ஒரு கெட்டதும் நெருங்கவும் முடியாது. ஆனால் பெரும்பாலும் மனிதர்களுடைய இந்த மூளை இருக்கிறதே, அது எப்போதும் தனக்குள்ளே எதிர்மறை ஆற்றலை உள்வாங்கிக் கொள்ளக்கூடிய சக்தி கொண்டது. அப்படி என்றால், நாம் நேர்மறையாக இருக்கக்கூடிய சில விஷயங்களை கவனிப்பதே இல்லை‌. ஆனால் எதிர்மறையாக இருக்கக்கூடிய விஷயங்களை கூர்ந்து கவனிப்போம். எதிர்மறையான விஷயங்கள் நம்முடைய மனதிற்கு உள்ளேயும் மூளைக்கு உள்ளேயும் சென்று ஆழமாக பதிந்துவிடும்.

சரிதானே, நாள் மொத்தமும் சந்தோஷமாக இருப்போம். அதையெல்லாம் நம் நினைவில் வைத்துக் கொள்ளவே மாட்டோம். ஆனால், இடையே ஒரு மணி நேரத்தில் சாலையில் செல்லும் போது நடந்த விபத்து சம்பவம் மட்டும் நம்முடைய மனதில் ஆழமாகப் பதிந்திருக்கும்.

- Advertisement -

இப்படி எதிர்மறையான பிரச்சனையில் இருந்து நம்முடைய மூளையையும், நம்முடைய மனதையும் பாதுகாக்க வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதைப்பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

sandhanam

உங்களுக்கு நெற்றியில் விபூதி குங்குமம், பச்சை குங்குமம் இப்படி எதை வைக்கும் பழக்கம் இருந்தாலும் அதோடு சேர்த்து இந்த சந்தனத்தையும் கொஞ்சம் வைத்து தான் பாருங்களேன். ‘சந்தனம்’ இதை நெற்றியில் இட்டுக்கொண்டால் நம்முடைய மூளை எதிர்மறை எண்ணங்களை உள் வாங்கிக் கொள்ளாது என்று சொல்லப்பட்டுள்ளது. மங்களகரமான நிகழ்ச்சிகள் நடக்கும் இடத்தில் இந்த சந்தானத்திற்கு முன்னுரிமை உண்டு. கோவில்களிலும் சந்தானத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. சந்தனம் இருக்குமிடமெல்லாம் நேர்மறை ஆற்றல் நிறைவாக இருக்கும்.

- Advertisement -

மற்ற பொருட்களை எல்லாம் யார் நெற்றியில் வைத்து கொள்கிறார்களோ, அதன் மூலம் அவர்களுக்கு மட்டும்தான் நன்மை நடக்கும். ஆனால் இந்த சந்தனத்தை நீங்கள் நெற்றியில் வைத்து விட்டீர்கள். உங்களை சுற்றி நாலு பேர் இருக்கிறார்கள் என்றால், உங்களிடம் இருக்கும் அந்த பாசிடிவ் எனர்ஜி உங்களை சுற்றி இருப்பவர்களையும் போய் சேரும். அந்த அளவிற்கு நேர்மறை ஆற்றலை பரப்ப கூடிய சக்தி இந்த சந்தானத்திற்கு உண்டு.

குறிப்பாக இந்த சந்தனத்தை மோதிர விரலால் தொட்டு நம்முடைய நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது நம்முடைய உடம்பில் இருக்கக்கூடிய சக்கரங்கள் சீராக செயல்படத் தொடங்குகின்றன. குளிர்ச்சியான இந்த சந்தனப்பொட்டு நம்முடைய நெற்றி பகுதியை பாதுகாக்கின்றது. பொதுவாகவே எந்த ஒரு எதிர்மறை ஆற்றல் நம் உடம்பில் ஊடுருவுவதாக இருந்தாலும், அது நம் நெற்றிப்பொட்டின் வழியாகத்தான் நம் உடம்புக்குள் செல்லும். அந்த நெற்றிப் பொட்டை பாதுகாக்கும் இந்த சந்தனத்தை எப்போதுமே நெற்றியில் இட்டுக் கொண்டே இருந்தால் உங்களுக்குள் ஒரு நல்ல மாற்றம் தெரியும்.

sandhanam

எவர் ஒருவர் தினமும் தன்னுடைய நெற்றியில் சந்தனப்பொட்டு வைத்து வருகிறார்களோ, அவர்கள் எப்போதுமே லட்சுமி கடாட்சத்தோடு இருப்பார்கள். அவரைச்சுற்றி நேர்மறை ஆற்றல் பரவியிருக்கும். கெட்ட எண்ணம் கொண்டவர்கள் சந்தனப்பொட்டு வைத்திருப்பவர்களை நெருங்க கூட முடியாது. கண் திருஷ்டியோடும் பொறாமை மனதோடும் குறுகுறுவென பார்ப்பவர்களின் பார்வையும் சந்தனப்பொட்டு வைத்து இருப்பவர்களை ஒன்றுமே செய்ய முடியாது. பிறகு உங்களுக்கு நல்லது மட்டும்தான் நடக்கும்.

thilagam1

இன்னைக்கு சந்தன பொட்டை நெற்றியில் இட்டுக்கொண்டு நாளைக்கு எனக்கு நல்லது நடக்கவில்லை என்று கூறி விடாதீர்கள். தினந்தோறும் இந்த பழக்கத்தை செய்து வாருங்கள். நிச்சயமாக உங்கள் வாழ்க்கையில் நீங்களே நம்பவே முடியாத பல நன்மைகள் உங்களை தேடி வரும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம் ‌

- Advertisement -