இந்த ஒரு பொருளை மட்டும் உங்கள் வீட்டில் அதிக அளவு பயன்படுத்தி வந்தால் அடகு வைத்த நகைக்கூட விரைவில் வீடு வந்து சேர்ந்து விடும்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

நாம் அனைவருமே ஏதோ ஒரு அவரச பணத் தேவை என்றால் முதலில் யோசிக்காமல் செய்யும் காரியம் நம் நகைகளை அடமானம் வைப்பது தான். அப்படி பலரும் தங்களின் தேவைக்காக தங்க நகைகளை அடமானம் வைத்து அதை திருப்ப முடியாமல் அவதிப்படுகின்றார்கள். இப்படி நாம் அடமானத்தில் வைத்த நகை திரும்ப வரவும், வீட்டில் இருக்கும் தங்கம் மேலும் மேலும் பெருகவும், இந்த ஒரு பொருளை மட்டும் தினந்தோறும் அதிக அளவு உபயோகித்து வந்தால் போதும் தங்கம் நம் வீடு தேடி வந்துவிடும்.

அது வேறு ஒன்றும் இல்லை. நாம் பூஜைக்கு பயன்படுத்தும் சந்தனம் தான். ஆனால் நாம் பெரும் அளவு பவுடர் சந்தனங்களை உபயோகித்து கொள்கிறோம். என்ன இருந்தாலும் சந்தன கட்டையில் இருக்கும் தெய்விக ஆற்றல் இந்த பவுடர்களில் குறைவுதான். இந்த பரிகாரத்திற்கு நிச்சயமாக சந்தன கட்டை தான் பயன்படுத்த வேண்டும். நாட்டு மருந்து கடைகளில் சுத்தமான சந்தன கட்டை கிடைக்கும். அதையே வாங்கி பயன் படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் எப்போதும் ஒரு சந்தன கட்டை உங்கள் பூஜை அறையில் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நிறைவான லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். பிறகு இந்த சந்தனத்தை பன்னீர் தெளித்து இழைத்து உங்கள் சுவாமி படங்களுக்கு பொட்டு வைக்கும் போது மஞ்சளுக்கு பதிலாக இதையே உபயோகப்படுத்தி வாருங்கள்.

பன்னீருடன் சந்தனம் சேர்த்து குழைத்து நிலை வாசலில் தெளித்து வாருங்கள். ஏன் என்றால் ஒரு வீட்டில் தெய்வம் வரும் வழியே இந்த நிலைவாசல் தான். நிலை வாசலில் நிலைத்திருக்கும் தேவதைகளின் அருளும் ஆசியும் உங்களுக்கு முழுவதுமாக கிடைத்தால் தான் நீங்கள் எடுக்கும் எந்த ஒரு முயற்சியும் முழுமையான பயன் பெறும். எனவே கட்டாயமாக இப்படி பன்னீர் உடன் சந்தனம் சேர்த்து தெளித்து வாருங்கள். அது மட்டும் இன்றி குளித்து முடித்து தினம் தோறும் நெற்றியில் சந்தன போட்டு வைக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ளுங்கள்.

- Advertisement -

அது மட்டும் இன்றி சந்தன சக்கைகளும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இந்த சந்தன சக்கையை நீங்கள் பணம் வைக்கும் இடத்திலும், அதே போல் நகை வைக்கும் பீரோவில், நகையில் படும் படியாகவும் சிறு சிறு சந்தன சக்கையை வைத்து விடுங்கள். நீங்கள் வியாபாரம் செய்பவராக இருந்தால் கல்லாப்பெட்டி வைக்கும் இடத்தில் பன்னீருடன் சந்தனம் சேர்த்து பொட்டு வைத்து, அதிலும் ஒரு சிறியத்துண்டு சந்தனத்தை வைத்து விடுங்கள்.

உங்கள் வீட்டில் ஒரு பொட்டு நகை இல்லை என்றாலும் கூட பரவாயில்லை. நகை அடமானம் வைத்த ரசிது இருந்தால் கூட போதும். அதன் மீது இந்த ஒரு சந்தன கட்டையை வைத்து விட்டுங்கள். அதன் பிறகு உங்கள் நகையை மீட்டுவதற்கான முயற்சியில் இறங்கிப் பாருங்கள். எத்தனை நாள் அடமானத்திலிருந்து வீடு திரும்பாத நகைகள் கூட உங்கள் வீடு தேடி வந்துவிடும். வந்த நகை மறுபடியும் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கும்.

- Advertisement -