நாளை 11/11/2022 சங்கடஹர சதுர்த்தியில் விநாயகருக்கு இந்த நைவேத்தியம் படைத்து இப்படி வழிபட்டு பாருங்கள் எப்பேர்பட்ட பிரச்சினைகளும் உடனடியாக தீரும்!

- Advertisement -

விநாயகர் ஒவ்வொரு ரூபமாக நமக்கு ஒவ்வொரு பிரச்சனைகளை தீர்க்கும் அற்புத கடவுளாக விளங்குகின்றார். பல்வேறு வடிவங்களில் அருள் பாலிக்கும் இந்த விநாயகரிடம் நாம் எதை வேண்டுகிறோமோ, அதற்குரிய கணபதியாக அவர் மாறி நமக்கு வேண்டுதல்களை நிறைவேற்றுவதாக சாத்திரங்கள் கூறுகிறது. அந்த வகையில் சங்கடஹர சதுர்த்தியில் நம் சங்கடங்களை தீர்ப்பதற்காக விநாயகர் சங்கடஹர மூர்த்தியாக அருள் பாலிக்கிறார். இவரிடம் நாம் எப்படி வேண்டுதல் வைத்து எளிய முறையில் வழிபட்டு, நம்முடைய துன்பங்களை போக்கிக் கொள்வது? என்கிற ஆன்மீக தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கல்வியில் சிறந்து விளங்க வித்தியா கணபதியை வழிபடுவார்கள். அது போல பணமும், செல்வமும் பெருக லக்ஷ்மி கணபதியை வழிபடுவார்கள். நோய் நீங்க ஜொரஹர கணபதியையும், கலையில் சிறந்து விளங்க நர்த்தன கணபதியையும் வழிபடுவார்கள். இப்படி ஒவ்வொரு ரூபமாக எடுத்து நமக்கு வேண்டிய வேண்டுதல்களை வேண்டிய படி நிறைவேற்றிக் கொடுக்கும் இந்த விநாயகர் சங்கடங்கள் தீர வழிபடுவதே சங்கடஹர சதுர்த்தியின் முக்கிய அம்சமாக கருதப்படுகிறது.

- Advertisement -

ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஒவ்வொரு விதமான துன்பங்கள் இருந்து கொண்டே இருக்கும். துன்பமில்லாத மனிதனே இல்லை என்று கூறலாம். இவர்கள் ஒவ்வொரு சங்கடஹர சதுர்த்தியிலும் விரதம் இருந்து விநாயகரை இந்த முறையில் வழிபட்டு வந்தால், அவர்களுக்கு வந்த துன்பங்கள் எல்லாம் வந்த வழியே திரும்பி சென்று விடும் என்பது பக்தர்கள் இடையே இருக்கும் அசைக்க முடியாத நம்பிக்கையாக இருக்கிறது.

சங்கடஹர சதுர்த்தியில் பிள்ளையாருக்கு படைக்க ரொம்பவே விசேஷமான ஒரு பிரசாதம் உண்டு. இந்த பிரசாதத்தை தயாரித்து நைவேத்தியம் படைத்து சதுர்த்தி விரதம் இருந்து விநாயகர் துதிகளை படித்து, அருகம்புல், எருக்கம் பூ மாலை சாற்றி, அர்ச்சித்து, வழிபட்டு வந்தால் தீராத துன்பமெல்லாம் தீரும் என்பது ஐதீகம்.

- Advertisement -

சங்கடஹர சதுர்த்தியில் படைக்க வேண்டிய நைவேத்திய பிரசாதம்:
அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் நெய் விட்டு உங்களுக்கு தேவையான அளவிற்கு பொடித்த முந்திரி மற்றும் திராட்சைகளை பொன்னிறமாக வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். அதே பாத்திரத்தில் முக்கால் கப் அளவிற்கு துருவி வைத்துள்ள வெல்லத்தை சேர்த்து, அதனுடன் கால் கப் அளவிற்கு தண்ணீர் ஊற்றி பாகு போல கரைத்துக் கொள்ளுங்கள். ஐந்து நிமிடம் நன்கு பாகு கொதித்து கெட்டி ஆனதும், ஒரு கப் அவலுடன் இந்த காய்ச்சிய பாகை சுத்தமாக வடிகட்டி சேர்த்து கலந்து விடுங்கள். இதனுடன் அரைக்கப் அளவிற்கு துருவிய தேங்காய் சேர்த்து ஏலக்காய் தூள் அரை ஸ்பூன் தூவி கொள்ளுங்கள்.

பின்பு நன்கு கலந்து சமமாக பரப்பி வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் மூடி போட்டு ஒரு ஐந்து நிமிடம் ஊற விட்டு விடுங்கள். நன்கு பாகுடன் அவல் ஊறியதும், அதனுடன் நீங்கள் நெயில் வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சைகளையும் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ள வேண்டும். அவ்வளவுதான், இந்த பிரசாதத்தை நீங்கள் சங்கடஹர சதுர்த்தி அன்று விநாயகருக்கு நைவேத்தியம் படைத்து வழிபட்டு வாருங்கள். விநாயகருக்கு ரொம்பவே பிடித்த இந்த அவல் நெய் பிரசாதம் ரொம்பவே பிரசித்தி பெற்றது எனவே இந்த சங்கடஹர சதுர்த்திக்கு இப்படி நெய் பிரசாதம் படைத்து சங்கடஹர சதுர்த்தியை வழிபட்டு தீராத சங்கடங்களை துரத்தலாமே!

- Advertisement -