வற்றாத பணவரவை பெற மாதம் ஒரே ஒருநாள் பிள்ளையாரை இப்படி மட்டும் வழிபட்டால் போதும். உங்கள் ஜாதக தோஷங்கள் விலகி நீங்க எதிர்பார்க்கும் அளவு பணம் உங்கள் கைக்கு வரும்.

vinayagar
- Advertisement -

மனிதனின் வாழ்வில் கோரிக்கைகள் பல இருக்கின்றன. அவற்றுள் அனைத்து மக்களாலும் வைக்கப்படும் கோரிக்கையாக கருதப்படுவது பண தேவை மட்டுமே. பணத்தேவையை பூர்த்தி செய்வதற்கு பல பரிகாரங்கள் இருந்து வருகின்றன. இருப்பினும் இந்த பதிவில் நாம் வற்றாத பணத்தை பெறுவதற்கு செய்யக்கூடிய விரத முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

நமக்கு பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடிய கிரகங்கள் என்று பார்த்தால் அவை ராகு, கேது மற்றும் சனி பகவான் ஆவர். இவர்கள் மூவரில் யாராவது ஒருவர் நமக்கு பாதிப்பான சூழ்நிலையில் இருக்கும் பொழுது நாம் பல கஷ்டங்களை அனுபவிப்போம். அந்த சூழ்நிலைகளில் நம்முடைய கஷ்டங்களை தீர்ப்பதற்கு வரக்கூடிய தெய்வமாக கருதப்படுபவர் விநாயகப் பெருமானே.

- Advertisement -

பொதுவாக நாம் ஒரு செயலை செய்ய தொடங்குவதற்கு முன் விநாயகரை வணங்குவோம். காரணம், அந்த செயல் எந்த தடங்கல்களும் இன்றி நடைபெற வேண்டும் என்பதற்காக. அதைப்போல் ராகு கேது மற்றும் சனியால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து விலகுவதற்கும் நாம் விநாயகர் பெருமானை வழிபடுவது மிகவும் சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது.

விநாயகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான விரதங்களில் ஒன்றுதான் சங்கடஹர சதுர்த்தி விரதமாகும். பொதுவாக சங்கடஹர சதுர்த்தி என்பது நம்முடைய சங்கடங்களை அகற்றுவது என்று பொருள்படக்கூடியது. இந்த சங்கடஹர சதுர்த்தியில் நாம் விரதம் மேற்கொண்டு விநாயகரை வழிபடுவதன் மூலம் நம் சங்கடங்கள் மட்டும் தவிர்க்கப்படுவது இல்லாமல், நமக்கு சகல செல்வங்களையும் அந்த விநாயகப் பெருமான் அருள் புரிவார்.

- Advertisement -

இந்த வற்றாத பண வரவை ஏற்படுத்தி தருவதற்கு சங்கடஹர சதுர்த்தி அன்று நாம் ஒரு வேலையாவது விரதம் இருந்து, மாலை பொழுதில் அருகம்புல்லையும் அதனுடன் மிளகையும் சேர்த்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றை விநாயகப் பெருமானுக்கு நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அதோடு ஒரு அகல் விளக்கில் தீபம் ஏற்றி வைத்து “ஓம் கம் கணபதியே நமஹ” என்று 21 முறை அல்லது 33 முறை சொல்லி நாம் மனதார வழிபட்டு வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டு வரவேற்பறையில் இந்த பொருள்கள் எல்லாம் இருந்தால் திடீர் அதிஷ்டங்கள் உண்டாகி, ராஜ யோக வாழ்க்கை உங்களை தேடி வரும்.

நம்முடைய வழிபாட்டு முறைகளை முடித்த பிறகு அந்த அருகம்புல் சாற்றை பிரசாதமாக அருந்த வேண்டும். இவ்வாறு நாம் செய்து வர, நமக்கு வற்றாத பணவரவு ஏற்படும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -