விஷ்ணு பகவானின் பரிபூரண ஆசீர்வாதத்தை பெற சங்கு வழிபாட்டை இப்படித்தான் செய்ய வேண்டும். 16 வகையான செல்வங்களும் வந்து குவியும். .

sangu
- Advertisement -

நம் முன்னோர்கள் ஆசிர்வாதம் செய்யும் பொழுது 16 பெற்று பெருவாழ்வு வாழ்க என்று கூறுவார்கள். அப்படி நாம் நம் வாழ்வில் நன்றாக இருப்பதற்கு தேவையான 16 செல்வங்களை பெறுவதற்க்கு மிக சுலபமான சூட்சும வழிபாடு ஒன்று உள்ளது என்றால் அது சங்கு வழிபாடு தான். அதிலும் அனைத்துவிதமான சங்கை காட்டிலும் வலம்புரி சங்குக்கென்று சில தனித்துவங்கள் உள்ளன. இந்த வலம்புரி சங்கை கொண்டு எப்படி வழிபாடு செய்து நற்பலன்களை பெறலாம் என்று பார்ப்போம் வாருங்கள்.

திருப்பாற்கடலை கடையும்போது தான் சங்கு தோன்றியது என்று கூறுகிறது புராணங்கள். இந்த சங்கு மகாவிஷ்ணுவின் அம்சமாக கருதப்படுகிறது. சங்கை நாம் காதில் வைத்து கேட்கும்பொழுது ஓம் என்ற ஒலி கேட்கும். ஆதலால் தான் சங்கிற்கு ஜீவ சக்தி உண்டு என்று கூறுகிறார்கள். ஜீவசக்தி இருப்பதால்தான் கோவில்களில் அபிஷேகம் செய்யும் பொழுதும், ஆராதனை காட்டும் பொழுதும் சங்கை ஒலிக்கிறார்கள். அதேசமயம் இறுதியாத்திரை செல்லும் பொழுதும் சங்கை ஒலிக்கிறார்கள்.

- Advertisement -

பொதுவாக தெய்வ காரியத்திற்கு உகந்ததாக கருதப்படுவது வலம்புரி சங்கு. வேறு எந்த சங்கையும் தெய்வ வழிபாட்டிற்கு உபயோகப்படுத்த கூடாது. இந்த வலம்புரி சங்கை சங்கை எவ்வாறு வழிபட்டால் சிறந்த பலனை பெறலாம் என்பதை இப்போது பார்ப்போம்.

வலம்புரி சங்கு வழிபாட்டு முறை:
முதலில் நாம் பூஜை அறைக்கு சென்று வலம்புரி சங்கை வடக்கு அல்லது கிழக்குப் பார்த்தவாறு கையில் வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு அதில் தண்ணீரை ஊற்றிக் கொள்ள வேண்டும். பிறகு நம் கண்களை மூடி “ஓம் சுதர்சனாய நமஹ” “ஓம் மகா விஷ்ணுவே நமஹ” என்று குறைந்தபட்சம் 108 முறை ஜெபிக்க வேண்டும். அதற்கு மேல் 1008, 10008 என்று கூட ஜெபிக்கலாம் (தங்களுக்கு இருக்கும் நேரத்தின் அடிப்படையில்).

- Advertisement -

அதற்குப் பிறகு அந்த சங்கில் உள்ள தண்ணீரை கையில் ஊற்றி, முதலில் தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். பிறகு தீர்த்தமாக அந்த தண்ணீரை அருந்த வேண்டும். அந்த தண்ணீரில் துளசியை போட்டால், அது மிகவும் சிறப்புக்குரியதாக இருக்கும். இவ்வாறு நாம் தினமும் காலையில் வீட்டிலிருந்து வெளியே செல்வதற்கு முன்பாக செய்து வர வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வ மழை பொழிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். இதை செய்பவர்கள் வீட்டை விட்டு மகாலட்சுமி தாயார் செல்லவே மாட்டார்.

இவ்வாறு செய்வதன் மூலம் நமக்குள் நேர்மறை சக்தி அதிகரிக்கும். நாம் செல்லும் இடங்களில் காரியங்கள் வெற்றி அடையும். மேலும் எதிர்பார்க்காத இடங்களில் இருந்து உதவிகள் வந்து நாம் செல்வதற்கு முன்பே அந்த காரியம் வெற்றிகரமாக முடிவடைந்து விடும். தெய்வ சக்தி கூடிவரும். பண சக்தி அதிகரிக்கும். ஆன்மீகம் பலன் தேடி வரும். எவ்வளவு பெரிய ஆபத்தாக இருந்தாலும் அது விலகி விடும். இந்த சக்தி வாய்ந்த வழிபாட்டை மேற்கொண்டால், நம் வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்பட்டு, நன்மைகள் பல உண்டாக்கும்.

- Advertisement -