வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகி செல்வ மழை பொழிய வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் இதை மட்டும் மறக்காமல் செய்து விடுங்கள். இதை செய்பவர்கள் வீட்டை விட்டு மகாலட்சுமி தாயார் செல்லவே மாட்டார்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

ஒரு வீடு சுபிட்சமாக இருக்க வேண்டும் என்றால் நிச்சயமாக அந்த வீட்டில் மகாலட்சுமி தாயாரின் பரிபூரண அருள் இருக்க வேண்டும். மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு பல வழிமுறைகள் இருந்தாலும் அதில் முக்கியமான ஒன்றாக இதை செய்தால் போதும் என்று நம்பப்படுகிறது. அது என்ன என்பதை பற்றி இப்போது இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் லட்சுமி கடாட்சத்தை அதிகரிக்க வைக்கும் ஆற்றல் கல் உப்பிற்கு அதிகமாகவே உள்ளது. ஏனென்றால் மகாலட்சுமி தாயாரின் பிறந்த வீடான கடலில் தோன்றிய இந்த உப்பு, மகாலட்சுமி தாயாரின் அம்சமாகவே பார்க்கப்படுகிறது. அந்த கல்லுப்பை நாம் சரியான முறையில் பயன்படுத்தும் போது நிச்சயம் அந்த இடத்தில் தாயாரின் அனுகிரகம் இருக்கும் என்று நம்பப்படுகிறது.

- Advertisement -

வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருக செய்ய வேண்டியது:
இப்போது இந்த பரிகாரத்தை நாம் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஓரைகள் அதாவது ஆறு முதல் ஏழு மணிக்குள்ளாக செய்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்கு ஒரு கல் உப்பு பாக்கெட்டை வாங்கிக் கொள்ளுங்கள். இதை முடிந்த அளவு அந்த நேரத்திலே (சுக்கிர ஓரையிலே) சென்று வாங்கி வந்து செய்தால் மிகவும் சிறப்பு. ஒருவேளை உங்களுக்கு அப்படி வாங்க முடியாது என்றால் முதல் நாள் இரவே வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.

இப்படி வாங்கிய கல் உப்பை வெள்ளிக்கிழமை காலை பூஜை அறையில் வைத்து பூஜை செய்த பிறகு அந்த உப்பை எடுத்து ஜாடியில் நிரப்பி வைத்துக் கொள்ளுங்கள். அப்படி நிரப்பும் போது ஜாடியின் அருகில் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் இடம் வசதி வாய்ப்புகள் அதிகமாக இருந்தால் ஒரு ரூபாய் நாணயத்திற்கு பதில் ஒரு சின்ன வெள்ளி நாணயத்தையும் வைக்கலாம். அது இன்னும் சிறப்பு மிக்கதாக இருக்கும்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் செய்யலாம் அல்லது பௌர்ணமி நாளில் செய்யலாம். இந்த இரண்டு தினங்களில் உங்களால் எந்த நேரத்தில் செய்ய முடிந்தாலும் செய்து கொள்ளுங்கள்.

வெள்ளிக் கிழமை சுக்கிர பகவானுக்கு உரிய நாள், உப்பும் சுக்கிரனை குறிக்கும். அதே போல் வெள்ளி நாணயத்திற்கும் சுக்கிர பகவான் அனுகிரகம் உண்டு. வெள்ளிக்கிழமை மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் பெற்ற நாள் இப்படி செல்வத்தை ஈர்க்க கூடிய அனைத்தும் ஒன்றாக சேர்க்கும் இந்த நாளில் இந்த தாந்த்ரீக பரிகாரத்தை செய்யும் போது அதற்கான பலன் உங்களுக்கு விரைவில் கிடைக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பண பற்றாக்குறை என்பதே உங்களுக்கு வராது என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: இந்த 1 பொருள் இல்லாமல் வெள்ளிக்கிழமை பூஜை செய்தால் எந்த பலனும் கிடைக்காது. வெள்ளிக்கிழமை பூஜையில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டிய அந்த பொருள் என்னவாக இருக்கும்.

எந்த பரிகாரத்தை செய்வதற்கும் நம்பிக்கை மிகவும் அவசியம். நம்பிக்கை உள்ளவர்கள் உங்கள் வாழ்க்கையின் செல்வ வளத்தை மேம்படுத்திக் கொள்ள, இந்த ஒரு எளிய தாந்த்ரீக பரிகாரத்தை செய்து பயனடையலாம் என்ற தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -