பொதுவாக பலர் சனியை கண்டு மிகவும் அஞ்சுவதுண்டு. ஆனால் உண்மை என்னவென்றால், ஒருவருக்கு சனி பகவான் உதவ வேண்டும் என்று முடிவெடுத்துவிட்டால் அந்த நபர் தன்னுடைய வாழ்வில் பன்மடங்கு முன்னேற்றம் அடைவார். அதே போல சனிபகவான் ஒருவரை தண்டிக்கவேண்டும் என்று நினைத்தால் அந்த தண்டனையும் கடுமையாக தான் இருக்கும். இதனால் தான் “சனியைப் போல கொடுப்பாரும் இல்லை, கெடுப்பாரும் இல்லை” என்று கூறப்படுகிறது. சனிபகவானின் தண்டனையில் இருந்து விடுபட அவரிடம் மனமுருகி வேண்டி கீழே உள்ள மந்திரத்தை சனிக்கிழமை அன்று ஜபித்து வாருங்கள். இதோ அந்த மந்திரம்.
சனிபகவானுக்குரிய தமிழ் மந்திரம்:
சங்கடம் தீர்க்கும் சனி பகவானே
மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
சச்சரவின்றி சாகா நெறியில்
இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
சனிக்கிழமைகளில் சிவன் கோயிலிற்கு சென்று நவகிரக சந்நிதியில் இந்த மந்திரத்தை ஜபித்து மனதார வேண்டிக்கொண்டால் சனியின் உக்கிரம் குறையும். அதோடு உங்களால் முடிந்தவரை ஏழை எளியோருக்கு உதவுங்கள். நாம் பிறருக்கு உதவினால் நிச்சயம் இறைவன் நம்மை தேடி வந்து நமக்கு உதவுவார்.
சனி மூல மந்திரம்:
ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ
இதையும் படிக்கலாமே:
போகி அன்று கூறவேண்டிய மந்திரம்
சனிபகவான் மூல மந்திரத்தை 40 நாட்களில் 19000 முறை ஜபித்தால் நிச்சயம் சனிபகவானின் கோவத்தில் இருந்து விடுபடலாம்.