உங்கள் வாழ்க்கையில் ஏற்படும் கடும் துன்பத்திற்கு இவர் தான் காரணமாம்! கஷ்டம் நீங்கி மகிழ்ச்சி பெருக தவறாமல் செய்ய வேண்டிய 5 விஷயங்கள் என்னென்ன?

ulunthu-sani-bagavan
- Advertisement -

ஒரு மனிதன் உச்சகட்ட கொடுமையை அனுபவிப்பதற்கும், கடும் துன்பத்தில் வாடி வதங்குவதற்கும் காரணம் ஒருவரே! அதே சமயத்தில் ஒருவர் செல்வாதிபதியாகவும், சர்வாதிகாரியாகவும் திகழ்வதற்கு காரணமும் இவரே ஆவார். ஒருவர் நன்றாக வாழ்வதற்கும், நலிந்த நிலையில் வாழ்வதற்கும் காரணமாக இருக்கும் இவரின் பிடியிலிருந்து எளிதாக தப்பிக்கும் 5 வழிகள் என்னென்ன? என்பதை தான் இந்த பதிவின் மூலம் ஆன்மீக தகவலாக நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

நவகிரகங்கள் ஒரு மனிதனை ஆட்டி படைத்து கொண்டிருக்கின்றன. அதில் சனி கிரகம் ரொம்பவும் மோசமானது என்று கருதுகிறோம். சனி கிரகம் நம்முடைய பாவ கணக்குகளையும், புண்ணிய கணக்குகளையும் தெரிந்து வைத்துக் கொண்டு அதற்கு ஏற்ப நம்மை பொம்மை போல இயக்கிக் கொண்டிருக்கும் நியாயமான ஒரு கிரகம் ஆகும். எனவே நாம் செய்யும் செயல்களுக்கு தான் தண்டனை அனுபவித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, செய்யாத தவறுக்கு கிடையாது.

- Advertisement -

சனி பகவான் நியாயம், நீதி தவறாமல் நடந்து கொள்பவர் ஆவார். எனவே அவருக்கு நாம் செய்யும் தவறுகள் எவ்வளவு முக்கியமோ, அதே போல செய்யும் புண்ணியங்களும் அவ்வளவு முக்கியம். புண்ணியங்களுக்கு ஏற்ப நம்மை மகிழ்ச்சியில் திக்கு முக்காடவும் வைத்து விடுவார். ஒரு முறை ஒரு ராசியை சுற்றி வர முப்பது ஆண்டுகள் இவர் எடுத்துக் கொள்கிறார். எனவே 30 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் துன்பத்தையோ அல்லது மகிழ்ச்சியையோ நிரந்தரமாக அனுபவிப்பது கிடையாது.

சனி பகவான் ஆணும் அல்லாமல், பெண்ணும் அல்லாமல் அலியாக இருக்கக் கூடியவர் எனவே இவரின் பிடியிலிருந்து நீங்கள் தப்பிக்க வேண்டும் என்றால் கஷ்டத்தில் இருக்கும் திருநங்கை போன்றவர்களை நாடி சென்று அவர்களுடைய துன்பம் அறிந்து அவர்களுக்கு தேவையான உதவியை செய்தால் சனி பகவானின் அருளை பெறலாம்.

- Advertisement -

காக்கையை வாகனமாகக் கொண்டவர் சனி பகவான் என்பதால் நல்ல நாள், விசேஷம், அமாவாசை போன்ற நாட்கள் மட்டும் அல்லாமல் தினமும் நீங்கள் சாப்பிடுவதற்கு முன்னர் ஒரு கைப்பிடி சோறை காகத்திற்கு வைத்து விட்ட பின்னால் சாப்பிட்டு பாருங்கள், துன்பங்கள் குறைய ஆரம்பிப்பதை உணரலாம்.

சனி பகவானை முடவன், மந்தன், நொண்டி என்றெல்லாம் கூறப்படுவது உண்டு. அவர் இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளானதும் உண்டு. மேலும் இவர் கருப்பு நிறமாக இருப்பதால் பலமுறை வருத்தப்பட்டது உண்டு. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்வது, அவர்களுக்கு உதவக்கூடிய பொருட்களை வாங்கி கொடுப்பது போன்றவற்றை செய்வதால் சனிபகவான் மனம் மகிழ்வார். அது மட்டும் அல்லாமல் யாரையும் இழிவாக பார்க்காமல் இருப்பதும், சனி பகவானுக்கு பிடித்த குணமாக உள்ளது. ஒருவருடைய நிறம் அல்லது அங்கஹீனத்தை கிண்டல் செய்பவர்களை கண்டிப்பாக சனி பகவான் விட்டு வைப்பது கிடையாது.

சனிக்கிழமைகளில் காலையில் எழுந்து குளித்து முடித்து சுத்தபத்தமாக சனி பகவான் கோவிலுக்கு சென்று எள் முடிச்சு கொண்டு தீபம் ஏற்றி சனி பகவானை மனதார வழிபட வேண்டும். மேலும் அங்கு வரும் பக்தர்களுக்கு உளுந்தை தானமாக வழங்க வேண்டும். இவருக்கு உகந்த தானியம் உளுந்து என்பதால் உளுந்தால் செய்யப்பட்ட பிரசாதம் ரொம்பவும் முக்கியமானது. எனவே உளுந்து கொண்டு செய்யப்பட்ட பிரசாதத்தை நைவேத்தியமாக படைத்து பக்தர்களுக்கு வழங்கலாம். இதனாலும் சனி பகவான் மகிழ்ச்சி கொள்வார்.

கடினமாக உழைக்கக்கூடிய உழைப்பாளிகள், பாரம் அதிகமாக தூக்குபவர்கள், துப்புரவு தொழிலாளர்கள் போன்றவர்களை மரியாதை உடன் நடத்த வேண்டும். அது மட்டும் அல்லாமல் அவர்களுக்கு தாமாகவே முன்வந்து உதவுபவர்களை சனி பகவான் துன்புறுத்துவதில்லை. இன்றும் நம்மில் பலரும் இவர்களை கண்டால் இழிவாக நினைப்பது உண்டு. இப்படி நினைப்பவர்களுக்கு சனி பகவான் தகுந்த தண்டனையை கொடுப்பார். இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும் நம்மால் ஆன உதவியை செய்து வருவதும், எவரையும் மட்டம் தட்டாமல் அனைவரும் சமம் என்று நினைப்பதும் சனி பகவானின் பிடியிலிருந்து நாம் தப்பிப்பதற்கு சிறந்த வழியாகும்.

- Advertisement -