நிகழவிருக்கும் சனி பெயர்ச்சி எந்தெந்த ராசிக்காரர்களை ஆட்டி படைக்க இருக்கிறது? எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்!

sani-astro-wheel
- Advertisement -

பொதுவாக சனி இருக்கும் இடத்தை விட, சனி பார்க்கும் இடம் அதிக பாதிப்புகள் ஏற்படும் என்பது ஜோதிட கணிப்பாகும். ஜனவரி மாதத்தின் தொடக்க காலத்திலேயே அதாவது வருகின்ற 17ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று நடைபெற இருக்கும் சனி பெயர்ச்சியால் சுப, அசுப பலன்களை பெற இருக்கும் ராசிக்காரர்கள் யாரெல்லாம்? 2023 இல் சனி ஆட்டி படைக்க இருக்கும் ராசிக்காரர்கள் பட்டியலை தான் இந்த ஜோதிடம் சார்ந்த பதிவின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

மற்ற கிரகங்களை காட்டிலும் சனி பகவான் ஒருவரே மிக மெதுவாக நகரக்கூடிய கிரகமாக இருக்கிறார். இதனால் தான் இவரை மந்தன் என்று அழைக்கிறோம். ஒரு ராசியில் ரெண்டரை வருட காலம் தன்னுடைய பாதத்தை பதிக்கும் சனி பகவான், அவர் இருக்கும் ராசியில் இருந்து அடுத்து இருக்கும் ராசிக்கும் அதிக விளைவுகளை ஏற்படுத்துகிறார். இதுவரை தன் சொந்த வீடான மகரத்தில் வசித்து வந்த சனி பகவான் 17ஆம் தேதிக்கு பிறகு தன்னுடைய இன்னொரு சொந்த வீடான கும்ப ராசிக்கு இடம் பெயர இருக்கிறார்.

- Advertisement -

இதனால் மீன ராசிக்கு அடுத்த இரண்டரை வருட காலம் சனி ஆட்டி படைக்கும் காலமாக இருக்கப் போகிறது. மேலும் மிதுனம், துலாம் ஆகிய ராசிக்காரர்களுக்கு சனி பகவான் விடுதலை கொடுக்க இருக்கிறார். அதன் பிறகு கடகம் மற்றும் விருச்சிகத்தை பிடித்துக் கொள்ளப் போகிறார். எனவே கடகம் மற்றும் விருச்சிகமும் இவ்வாண்டு சில சங்கடங்களை சந்திக்க நேரும்.

கடகம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்களுக்கு இவ்வாண்டு சனி பெயர்ச்சிக்கு பிறகு திடீர் திடீரென பிரச்சனைகள் பல வழிகளில் இருந்து வரக்கூடும். குறிப்பாக பணம் தொடர்பான விஷயங்களில் இழப்புகளும், நஷ்டங்களும் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. சனி பகவான் கொடுத்தால் ஒரேடியாக அள்ளிக் கொடுக்கக் கூடியவர். அதே போல கெடுத்தால் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு கெடுதலையும் ஏற்படுத்துவார். அவமானங்களையும், பொருள் இழப்பையும் ஏற்படுத்தக் கூடிய வகையில் உங்களுக்கு அமைந்திருக்கிறது எனவே நீங்கள் எச்சரிக்கையாகவும், சனி பகவான் வழிபாடு செய்து வருவதும் அவசியமாகும். சனி வழிபாடு செய்வதுடன் ஆஞ்சநேயரை வழிபட்டு ஹனுமன் சாலிசா, சுந்தரகாண்டம், ஸ்ரீ ராமஜெயம் போன்றவற்றை வாசியுங்கள். இதனால் சனி பாதிப்புகள் குறையும் என்பது ஐதீகம்.

- Advertisement -

மீன ராசியில் உள்ளவர்களுக்கு ஏழரை சனி ஆரம்பமாகிறது. இதனால் கடும் சோதனைகளை கொடுக்க இருக்கிறார். நீங்கள் செய்யும் செயலில் தடைகளும், தோல்விகளும் ஏற்படலாம். உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்காமல் போராட வேண்டி வரும். உங்கள் சக்திக்கு மீறிய உழைப்பை கொடுக்க வேண்டி இருக்கும். அயராத உழைப்பு உங்களை உயர்நிலைக்கு கொண்டு செல்லும் என்பதால் அடுத்த இரண்டரை வருடத்திற்கு சோம்பலை துரத்தி விடுங்கள். உடல் நிலையில் இதுவரை இல்லாத கூடுதல் கவனத்தை செலுத்துங்கள்.

இதையும் படிக்கலாமே:
வீட்டில் எந்த பொருட்கள் அதிகமாக இருக்க வேண்டும் தெரியுமா? இந்தப் பொருட்கள் இருந்தால் குரு அருள் கிடைக்குமாம்!

தனுசு ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி முடிய இருக்கிறது. இனி அவர்களுக்கு இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும். திடீர் அதிர்ஷ்டம் வரும். மிதுன ராசிக்காரர்களுக்கு அஷ்டம சனி முடிய இருக்கிறது, இவர்களுக்கும் இனி யோக காலம் தான். கடக ராசிக்காரர்கள் அஷ்டம சனியிலும், விருச்சிக ராசிக்காரர்கள் அர்த்தாஷ்டம சனியிலும், சிம்ம ராசிக்கு கண்டக சனி ஆரம்பத்திலும், மீனத்திற்கு ஏழரை சனி தொடக்கத்திலும், கும்பத்திற்கு ஜென்ம ராசியில் சனியின் சஞ்சாரமும் நடைபெற இருக்கிறது.

- Advertisement -