வேலை கிடைப்பதில் இருக்கும் தாமதம் நீங்க பரிகாரம்

vinayagar prayer
- Advertisement -

படித்து முடித்துவிட்டு அந்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்க வேண்டும் என்று போராடும் இளைஞர்கள் பலர் இருக்கிறார்கள். ஒரு சிலரோ தங்களுக்கு என்ன வேலை கிடைக்கிறதோ அந்த வேலையில் சேர்ந்து விடுவோம் என்று நினைப்பார்கள். இன்னும் சிலரோ தாங்கள் ஆசைப்பட்ட வேலையில் தான் சேர வேண்டும் என்று போராடிக் கொண்டு இருப்பார்கள். எப்படி இருந்தாலும் நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று முயற்சி செய்வதில் எந்தவித தவறும் இல்லை. அப்படி விரும்பிய வேலை கிடைப்பதில் தாமதம் ஏற்படும் பொழுது விநாயகப் பெருமானை எப்படி வழிபட வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

தாங்கள் நினைத்த நிறுவனத்தில் நினைத்த வேலை கிடைக்க வேண்டும் என்பதற்காக எப்பொழுது அந்த வேலை காலியாகும் என்று பார்த்துக் கொண்டே இருந்து அந்த வேலைக்குரிய விண்ணப்பம் வரும்பொழுது விண்ணப்பித்து பிறகும் அதிலிருந்து நேர்காணல் வருவதற்கோ அல்லது எழுத்து தேர்வு வருவதற்கோ தாமதமாகிறது என்றாலும் அல்லது நேர்காணல் எழுத்து தேர்வு இவை அனைத்தும் முடிந்த பிறகு தேர்வு முடிவு வருவதற்கு தாமதமானாலும் தேர்வு முடிவே வந்தாலும் வேலையில் சேர்வதற்கு தாமதமானாலும் விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபட்டால் போதும்.

- Advertisement -

யாருக்கு வேலையில் தாமதம் இருக்கிறதோ அவர்களுடைய பிறந்த நட்சத்திர நாள் அன்று இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இதற்காக நமக்கு சுத்தமான சந்தன கட்டை வேண்டும். இந்த சந்தன கட்டையை நாமே நம் கைகளால் இளைக்க வேண்டும். அவ்வாறு இளைக்கும் போது தண்ணீர் ஊற்றாமல் காய்ச்சாத பசும்பாலை ஊற்றி இளைக்க வேண்டும். இப்படி இளைத்த இந்த சந்தனக்கூழை சேகரித்து அதை கொண்டு போய் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்தில் விநாயகருக்கு அபிஷேகம் செய்வதற்காக தர வேண்டும்.

இவ்வாறு நாம் அபிஷேகம் செய்யும் பொழுது தேங்காய் உடைக்கும் பழக்கம் இருக்கும் அல்லவா? அப்படி உடைத்த தேங்காயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி சிவப்பு நிற திரியை போட்டு தீபம் ஏற்ற வேண்டும். தீபம் ஏற்றுவதற்காக தனியாக தேங்காய் வாங்க கூடாது. அபிஷேகத்திற்கு கொடுக்கும் பொழுது அர்ச்சனை செய்வதற்காக தேங்காய் தருவோம் அல்லவா அந்த தேங்காயில் தான் தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

தீபம் கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். தீபம் ஏற்றி வைத்து விநாயகப் பெருமானை மனதார வழிபட வேண்டும். இப்படி வழிபடுவதன் மூலம் விநாயகப் பெருமானின் அருளால் வேலையில் இருக்கக்கூடிய தாமதங்கள் அனைத்தும் நீங்கி விரைவிலேயே வேலை கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணம் திரும்ப கிடைக்க தீப பரிகாரம்

நினைத்த வேலை கிடைப்பது என்பது ஒரு பெரிய வரம். அந்த வரத்தை விநாயகப் பெருமானின் அருளால் எந்தவித தாமதமும் இன்றி விரைவில் பெற முடியும்.

- Advertisement -