எவ்வளவுதான் உழைத்து வேலை செய்தாலும், கடைசியில் நல்ல பெயரை மட்டும் அடுத்தவன் தட்டிச் செல்கின்றானா? சனிக்கிழமை இந்த மரத்தை ஒரு முறை சுற்றுங்கள். பெயர், புகழ், பதவி, அந்தஸ்து எல்லாம் உங்கள் பின்னால் வரும்.

vanni-maram-tree
- Advertisement -

விழுந்து விழுந்து கஷ்டப்பட்டு வேலை செய்பவன் ஒருத்தன். அதற்கான பெயர், புகழை தட்டி செல்பவன் இன்னொருத்தன். உதாரணத்திற்கு வேலை செய்யும் இடத்தில் பத்து பேர் இருக்கிறார்கள். அதில் ஒருத்தர் டீம் லீடர் என்று வைத்துக் கொள்வோம். அந்த டீம் லீடருக்கு கீழே 10 பேர் வேலை செய்கிறார்கள். இந்த டீமுக்கு ஒரு ப்ராஜெக்ட் கிடைக்குது. ஆனால், அந்த வேலையில் டீம் லீடர் ஆர்வம் காட்டவில்லை. ஆனால், அந்த டீமில் இருக்கும் பத்து பேரில் ஒருத்தன் சூப்பராக வேலை செய்து அந்த ப்ராஜெக்ட் சரியாக முடித்துக் கொடுத்து விட்டான். இந்த டீம் லீடர் நோகாமல் அந்த ப்ராஜெக்டை கொண்டு போய் மேனேஜர் இடம் கொடுத்து நல்ல பெயர் வாங்கிக் கொள்வான். வேலை செய்தது என்னமோ அந்த டீமில் இருக்கும் ஒரு பையன் தான். ஆனால் பெயர் புகழ் போனது யாருக்கு அந்த டீம் லீடருக்கு.

இப்படி நிறைய இடங்களில் தவறு நடக்கின்றது. கஷ்டப்படுபவன் ஒருவனாக இருப்பான். அதற்கான பெயர் புகழும் கிடைப்பது இன்னொருத்தனுக்கு. உங்களுடைய வேலை செய்யும் இடத்திலும், தொழில் செய்யும் இடத்திலும் கூட உங்களுக்கு இப்படிப்பட்ட அனுபவங்கள் நடந்திருக்கிறதா, நீங்கள் செய்த வேலைக்கு இன்னொருவர் பெயரை சம்பாதித்துக் கொண்டு சென்றால் எப்படி இருக்கும். கஷ்டப்பட்டதற்கெல்லாம் பலனே இல்லாமல் போய்விடும் அல்லவா. எவ்வளவு உழைத்தாலும் உயர் பதவி கிடைக்கவில்லை. எவ்வளவு உழைத்தாலும் சம்பளம் நமக்கு உயர்வாக கிடைக்கவில்லை. எவ்வளவு உழைத்தாலும் பெயரும் புகழும் நம்மை விட்டு தூரம் தான் தள்ளி நின்று பார்க்கிறது, என்று கஷ்டப்படுபவர்களுக்காக இந்த பதிவு. இது ஒரு வன்னி மர பரிகாரம்.

- Advertisement -

பெயர் புகழ் அந்தஸ்தை உயர்த்தும் வன்னி மர பரிகாரம்:
பொதுவாக வீட்டில் வன்னி மரம் வைத்து வளர்க்கலாமா என்ற சந்தேகம் சில பேருக்கு இருக்கிறது. வீட்டில் சுத்தபத்தமாக வன்னி மரத்தை வைத்து வளர்க்கக்கூடிய வாய்ப்பு கிடைத்தவர்கள் வீட்டில் வன்னி மரத்தை வைத்து வழிபாடு செய்யலாம். குறிப்பாக இதை வடகிழக்கு மூலையில் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது சிறப்பான பலனைத் தரும்.

அதெல்லாம் எங்களால முடியாது. வீட்டில் வன்னி மரம் வைப்பதற்கு வசதி இல்லை என்பவர்கள் வன்னி மரம் இருக்கும் கோவிலுக்கு சென்று இந்த பரிகாரத்தை செய்யலாம். பெரும்பாலும் நிறைய சிவன் கோவில்களில் வன்னி மரம் இருக்கும். அல்லது மற்ற கோவில்களில் வன்னி மரம் இருந்தாலும் அந்த மரத்தை நீங்கள் இந்த பரிகாரம் செய்ய பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு கிடையாது. நமக்குத் தேவை ஒரு வன்னி மரம்.

- Advertisement -

சனிக்கிழமை மாலை 5 மணிக்கு முன்பாக உங்களுக்கு நேரம் கிடைக்கும் போது இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். உள்ளங்கையில் 11 மிளகு, 11 உளுந்தை வைத்துக் கொண்டு, வன்னி மரத்திற்கு கீழே நின்று மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். நீங்கள் வாழ்க்கையில் எவ்வளவு உயர்ந்த மனிதர்களாக மாற வேண்டும் என்பதை அந்த மரத்திடம் மனம் உருகி சொல்லுங்கள். அந்த வன்னி மரம் நீங்கள் சொல்வதை எல்லாம் நிச்சயம் கேட்கும். என்ன பதவி உங்களுக்கு வேண்டும், என்ன வருமானம் உங்களுக்கு வேண்டும், நீங்கள் எப்படி எல்லாம் வாழ்க்கையில் உயர வேண்டும் என்று நினைக்கிறீர்கள் என்பதை நண்பரிடம் சொல்லுவது போல அந்த மரத்திடம் சொல்லலாம்.

பிறகு கையில் இருக்கும் உளுந்து மிளகை வன்னி மரத்திற்கு கீழே போட்டுவிட்டு, அந்த வன்னி மரத்தை 21 முறை சுற்றி விட்டு நமஸ்காரம் செய்து கொண்டு வீடு திரும்பவும் அவ்வளவுதான். இந்த பரிகாரத்தை தொடர்ந்து 21 நாள் விடாமல் செய்து வந்தால் உங்களுக்கான வெற்றி உங்களைத் தேடி வரும். பெயர் புகழ் பதவி எல்லாம் உங்களைத் தேடி வரும். ஆண்கள் பெண்கள் இருவரும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

இதையும் படிக்கலாமே: இந்த நாளில் ஒரே ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்தால் போதும். மீண்டும் மீண்டும் டாக்டர்கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது. தீராத நோய் தீர நாம தெரிஞ்சுக்க வேண்டிய ஜோதிட ரகசியம் இது.

குறிப்பாக சினிமாவில் சேர வேண்டும். அரசியலில் சேர வேண்டும். பாடகராக வேண்டும், இசையமைப்பாளராக வேண்டும், ஊடகங்களில் பிரபல்யமாக வளம் வர வேண்டும் இப்படி புகழின் உச்சிக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பரிகாரத்தை செய்யலாம். வாழ்க்கையில் எப்படியாவது ஜெயித்து உயர்ந்த பதவியில், வேலை செய்யும் இடத்தில் அமர வேண்டும். நாம் சொல்லுவதை நமக்கு கீழே 50 பேராவது கேட்க வேண்டும் என்று உங்களுக்கு ஆசை இருந்தாலும் இதை செய்யலாம். உங்களுக்கான வாய்ப்புகள் உங்களைத் தேடி சீக்கிரம் வரும். இந்த உலகமே உங்களைத் திருப்பிப் பார்க்கும் அளவுக்கு நீங்கள் உயர்ந்த இடத்திற்கு சென்று விடுவீர்கள். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் பரிகாரத்தை செய்து பலன் பெறலாம்.

- Advertisement -