இந்த நாளில் ஒரே ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று வந்தால் போதும். மீண்டும் மீண்டும் டாக்டர்கிட்ட போக வேண்டிய அவசியமே இருக்காது. தீராத நோய் தீர நாம தெரிஞ்சுக்க வேண்டிய ஜோதிட ரகசியம் இது.

vibuthi
- Advertisement -

ஜோதிடத்தில் நமக்குத் தெரியாமல் எத்தனையோ விஷயங்கள் மறைந்திருக்கின்றது. ஜோதிடத்தில் நம் முன்னோர்கள் சொல்லி இருக்கும் சின்ன சின்ன விஷயங்களை பின்பற்றினால் கூட போதும். நம்முடைய வாழ்க்கையில் சீரும் சிறப்புமோடு வாழலாம். நம்பிக்கை இல்லாதவர்கள் ஆயிரம் பேசலாம். தலைவிதிபடி தான் நடக்கும். என்னதான் ஜோதிடம் பார்த்தாலும், நம்முடைய விதி மாறப்போகிறதா என்று, சில கேள்விகளை கேட்கலாம். ஆனால், நல்ல நேரம் இருந்தால் தான் இப்படிப்பட்ட நல்ல விஷயங்கள் நம் கண்களில் படும். சில நல்ல விஷயங்களை நாம் முயற்சி செய்யும் போது நம்முடைய வாழ்க்கையில் சில நன்மைகள் நடக்கும். அப்படி உங்களுக்கு ஒரு நன்மையை கொடுக்கக்கூடிய ஜோதிட தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

உங்களுடைய நல்ல நேரம் இந்த குறிப்பு உங்கள் கண்களில் பட்டது என்று வைத்துக் கொள்ளுங்கள். உங்களுடைய வீட்டில் யாருக்காவது அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் போகுதா. தொடர்ந்து மருந்து மாத்திரை சாப்பிட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறதா. நீங்கள் பின் சொல்ல கூடிய ஆன்மீகம் சொல்லும் வழிபாட்டையும், ஜோதிட குறிப்பையும் பின்பற்றினால் போதும். அடிக்கடி மருத்துவமனைக்கு போக வேண்டிய சூழ்நிலை ஏற்படாது. மருந்து மாத்திரை சாப்பிடக்கூடிய அந்த சூழ்நிலை படிப்படியாக குறையும். அது என்ன குறிப்பு என்று நம்பிக்கை உள்ளவர்கள் பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

நோய்நொடி தீர சிவன் வழிபாடு:
காலண்டரில் பாருங்க. என்றைக்கு திருவாதிரை நட்சத்திரம் வருது அப்படின்னு. நோட் பண்ணிக்கோங்க. ஹாஸ்பிடலுக்கு செக்கப் போகனும். மாதம் தோறும் போக வேண்டும். ஆரோக்கியத்தில் உங்களுக்கு அப்படி ஒரு பிரச்சனை இருக்குது. திருவாதிரை நட்சத்திரத்தன்று காலையில் எழுந்து சுத்தபத்தமாக குளித்துவிட்டு, சுத்தமான பசுஞ்சான விபூதியை கொண்டு போய் சிவன் கோவிலில் குருக்களிடம் தானமாக கொடுத்து விடுங்கள்.

அது கோவிலுக்காக கொடுக்கக்கூடிய தானம். உங்கள் பெயரைச் சொல்லி, சிவன் கோவிலில் ஒரு அர்ச்சனை செஞ்சுக்கோங்க. முடிஞ்சா தேங்காய் பூ பழம் வாங்கி கொடுத்து அர்ச்சனை செஞ்சுக்கோங்க. சிவபெருமானிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ளுங்கள். உங்கள் உடல் ரீதியான அந்த ஆரோக்கிய பிரச்சனை தீர வேண்டும் என்று. இந்த வழிபாட்டை முடித்துவிட்டு வீட்டிற்கு வரலாம் தவறு கிடையாது. முடிந்தால் அப்படியே ஹாஸ்பிடலுக்கு போங்க. உங்க செக்கப்பை திருவாதிரை நட்சத்திரன்று செய்யுங்கள்.

- Advertisement -

திருவாதிரை நட்சத்திரம் அன்று புதுசாக மருந்து மாத்திரை சாப்பிட தொடங்குங்கள். உங்கள் வியாதி எதுவாக இருந்தாலும் படிப்படியாக குறைய தொடங்கும். பிறகு நீங்கள் ஆரோக்கியமானவர்களாக மாறுவதற்கு நிறைவே வாய்ப்புகள் உள்ளது. திரும்பத் திரும்ப ஹாஸ்பிடலுக்கு போகக்கூடிய சூழ்நிலை தவிர்க்கப்படும். ஒரு கட்டத்தில் நீங்கள் ஹாஸ்பிடலுக்கே போகாத சூழ்நிலைக்கு கொண்டு வந்து விடக்கூடிய பவர் இந்த பரிகாரத்திற்கு உண்டு.(உதாரணத்திற்கு நிறைய குழந்தைகளுக்கு இன்றைக்கு மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கு. அவர்களை ஆரோக்கிய ரீதியாக மேம்படுத்த இதை நீங்கள் முயற்சி செய்து பார்க்கலாம்).

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை வீட்டில் இந்த திசையில் தீபத்தை ஏற்றினால், வாழ்க்கையில் நீங்க நம்பி ஏமாந்த பணம், பொருள், சொத்து, வாழ்க்கை என இழந்த அனைத்தும் மீண்டும் உங்களை நிச்சயம் வந்தடையும்.

நம்பிக்கை உள்ளவர்கள் நோய்நொடி பிரச்சனையால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள அரிய ஜோதிட தகவல் இது. அந்த எம்பெருமானின் மீது பாரத்தை போட்டுவிட்டு இந்த ஒரு விஷயத்தை மட்டும் செய்து பாருங்கள். நல்லது நடந்தால் நமக்கு லாபம் தான். இதில் நஷ்டமடைய நம்மிடம் எதுவுமே கிடையாது.

- Advertisement -