இன்று சனி பெயர்ச்சி! காகத்திற்கு உங்கள் கையால் இந்த உணவை வைத்துவிட்டால், இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் உங்களை எந்த ஒரு தோஷமும் தாக்காது.

sani-crow
- Advertisement -

சனிப்பெயர்ச்சி நடக்கப் போகிறது என்றதுமே எல்லோருடைய மனதிலும் ஒரு பயம். இனி வாழ்க்கையில் என்ன நடக்கப் போகிறதோ என்று. சனிபகவான் ஒரு நீதிமான். அவரைக் கண்டு நாம் பயப்பட வேண்டும் என்ற அவசியமே கிடையாது. நேர்மையோடு, அடுத்தவர்களுக்கு தீங்கு நினைக்காமல் வாழ்க்கையை நடத்துபவர்கள், இந்த சனி பெயர்ச்சியை கண்டு அஞ்சவே தேவை கிடையாது. குறுக்கு வழியில் பணம் சம்பாதிப்பவர்கள், அடுத்தவர்களை ஏமாற்றுபவர்கள், நேர்வழியில் நடக்காதவர்களுக்கு தான் சனிப்பெயர்ச்சியின் மூலம் பாதிப்புகள் ஏற்படும். நேர்மையாக இருப்பவர்களையும், உண்மையை நிலை நாட்டுபவர்களுக்கு சனி பகவான் எந்த வகையிலும் தீங்கு செய்ய மாட்டார் என்பதுதான் உண்மை.

ஆகவே நீங்கள் எந்த ராசியில், எந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும், சனி பெயர்ச்சியை நினைத்து பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது. இன்றைய தினம் அதாவது 17.1.2023 ஆம் தேதி இரவு 8:02 இரண்டு மணிக்கு சனிபகவான் மகர ராசியில் இருந்து, கும்ப ராசிக்கு பெயர்ச்சியாக இருக்கின்றார். இதன் மூலம் குடும்பத்திற்கும் குடும்பத்தில் இருப்பவர்களுக்கும் எந்த தோஷமும் வராமல் இருக்க இந்த சின்ன பரிகாரத்தை செய்தால் போதும்.

- Advertisement -

சனிப்பெயர்ச்சி அன்று செய்ய வேண்டிய பரிகாரம்:
இன்று மதியம் உங்களுடைய வீட்டில் சாதம் சமைப்பீர்கள் அல்லவா. அதை குளித்துவிட்டு சுத்தபட்டமாக செய்யுங்கள். வடித்த சாதத்தில் இருந்து சிறிதளவு எடுத்து அதில் கொஞ்சமாக தயிர், எள்ளு, விட்டு பிசைந்து அதை காகத்துக்கு வைத்து விட வேண்டும். இந்த சாதத்தை குடும்ப தலைவனின் கையால் காகத்திற்கு வைத்து விட வேண்டும். குடும்பத் தலைவன் வீட்டில் இல்லாத பட்சத்தில் குடும்பத் தலைவி இதை செய்யலாம்.

காகத்திற்கு இந்த உணவை வைப்பதற்கு முன்பு, குலதெய்வத்தையும் முன்னோர்களையும் சனி பகவானையும் மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் எங்களுடைய குடும்பத்திற்கும் வீட்டில் இருப்பவர்களுக்கும் எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது. பெரிய கஷ்டங்கள் வருவதாக இருந்தாலும் அதை சனி பகவான் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்று, சனிபகவானை நினைத்து பிரார்த்தனை செய்து கொண்டு காகத்திற்கு இந்த உணவை வைத்துவிட்டால், சனிபகவான் நமக்கு பெரிய பாதிப்புகளை கொடுக்கவே மாட்டார்.

- Advertisement -

இன்று மதியம் உங்களால் இந்த உணவை வைக்க முடியவில்லையா கவலைப்பட வேண்டாம். மறுநாள் இந்த பரிகாரத்தை செய்யலாம். வாரம் ஒரு முறை சனிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்யலாம். தொடர்ந்து வாழ்நாள் முழுவதும் காகத்திற்கு இந்த உணவை வைத்து வர உங்களுடைய குடும்பம் சனிபகவான் பார்வையில் இருந்து சுலபமாக தப்பித்துக் கொள்ளலாம். சனி பகவானின் ஆசிர்வாதத்தை சுலபமாக பெறுவதற்கு சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள எளிமையான பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

கடகம், சிம்மம், விருச்சிகம், மகரம், கும்பம், மீனம் இந்த ராசிக்காரர்கள் மட்டும் சனிப்பெயர்ச்சி முடிந்த பின்பு, உங்கள் வீட்டின் அருகில் இருக்கக்கூடிய நவகிரக சன்னிதானத்திற்கு சென்று சனி பகவானுக்கு ஒரு அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். உங்களுடைய பெயர் ராசி நட்சத்திரம் இவைகளை சொல்லி அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே: இனி நீங்கள் வேலையைத் தேடி அலைய வேண்டிய அவசியமே இல்லை, இந்த ஏஞ்சல் எண்ணை சரியாக பயன்படுத்தினால் போதும், நீங்கள் நினைத்த வேலை உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும்.

இதோடு சேர்த்து இந்த பிரபஞ்சம் சொல்லும் இன்னொரு விஷயத்தையும் நாம் இந்த இடத்தில் நினைவு கூற வேண்டும். நாம் எதை கொடுக்கின்றோமோ, அதுதான் நமக்கு திரும்பவும் கிடைக்கும். இதுதான் இந்த பிரபஞ்சத்தினுடைய நியதியும் கூட. நீங்கள் அடுத்தவர்களுக்கு நல்லது செய்தால், உங்களுக்கு நல்லது நடக்கும். கெடுதலை பற்றி நாம் பேச வேண்டாம். இதை புரிந்து கொண்டாலே ஒரு மனிதன் வாழ்வை வென்று, வாழ முடியும் என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -