சனிப்பெயர்ச்சியை கண்டு அச்சமா ? இதோ எளிய பரிகாரம்

elarai-sani
- Advertisement -

ஏழரைச் சனி, அஷ்டமச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, கண்டச் சனி என்று சனிபகவான் பல வகைகளிலும் தொல்லை கொடுப்பார் என்று ஒரு நம்பிக்கை இருக்கிறது. இதனால்தான் சனிப்பெயர்ச்சியை நினைத்து, ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ள பலரும் பயப்படுவார்கள். ஆனால், அப்படி பயப்படத் தேவையில்லை என்கிறார், ஜோதிடர் ஆஸ்ட்ரோ கிருஷ்ணன். அது பற்றி அவர் நம்மிடம் கூறிய விவரங்கள் இங்கே.

sani-bagavaan

“சனீஸ்வரன் பெயரைக் கேட்டாலே மனதில் ஒருவித பயம், கலக்கம் தன் எதிர்காலத்தைப் பற்றிய கவலை, இதெல்லாம் மனதில் தோன்றுகிறது.  இது சரியா, தவறா என்று கேட்டால், தவறு என்றுதான் சொல்லவேண்டும். உண்மையும் அதுதான். சனிபகவான் ஜாதகத்தில் எங்கு நின்றாலும், அந்த இடத்தை – பாவத்தைத் தூய்மைப்படுத்தவே நிலைபெறுகிறாரே தவிர, நாம் நினைப்பதுபோல் நம்மைச் சோதிப்பதற்கு அல்ல. ஒரு தொழிற்சாலையில் உள்ள இயந்திரங்களுக்கு ‘ஹாலிடே பீரியட்’ என்று ஒன்று இருக்கும். அதாவது தொடர்ச்சியாக ஓடிக்கொண்டிருக்கும் அவற்றுக்கு ஒய்வுகொடுத்து, சரி செய்தபிறகு மீண்டும் இயக்குவார்கள்.  அதைப்போலத்தான் நம் மனித உடம்பும். அதைச் சரி செய்வதே சனீஸ்வரன்தான். இதைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

- Advertisement -

சனிபகவானுக்கு சுபத்தன்மை உண்டா, இல்லையா என்று கேட்டால்,  நிச்சயமாக உண்டு.  சூரியனின் புதல்வனான அவர் தன் தந்தையின் குணத்துக்கு எதிராக, எப்படிச் செயல்படுவார்?! வானியல் ஆய்வுகளின்படி சூரியனில் இருப்பது, ஹைட்ரஜன் வாயு. சனியில் இருப்பதும் இதேதான். ஆனால், சற்றுக் குறைவு. அத்துடன் ஹீலியம் வாயுவும் உண்டு. இவை இரண்டும்தான் ஓர் அணு உருவாகக் காரணிகள். ஆகவேதான், சனியின் தன்மை  செயல்களுக்கான (கர்மா) காரணியாக இருந்து கர்மகாரகனாக இருக்கிறார். அவர்  தயவு இல்லாமல், ஒரு செயலும் நடைபெறாது.

sani bagavaan

அவரவர்களின் கர்ம வினைகளுக்கேற்பத்தான் பலன்களைத் தருவார், செய்வார். சனி, நல்லது செய்ய வேண்டும் என்றால், அதை குருவின் மூலமாகவோ அல்லது லக்ன சுபர் மூலமாகவோத்தான் செய்வார். சனீஸ்வரனுக்கு ‘வேலைக்காரன்’ என்ற பெயரும் உண்டு. ஒரு ஜாதகருக்கு வேலையை ஏற்படுத்தித் தருவதே இவர்தான். என்னதான் ஜாதகத்தில் 10-ம் இடம் (பத்தாம் பாவம்) ஒருவரின் தொழிலைப் பற்றி தெரிந்து கொள்வது என்றாலும், அந்தத் தொழிலில் அவர் எப்படி செயல்படுவார் என்பதை சனியின் இருப்பிடத்தை வைத்துத்தான் தெரிந்து கொள்ளவேண்டும். ஒரு ஜாதகத்தில் சனீஸ்வரன் பலம் பெற்றாலும் சரி, அல்லது பலம் பெறாவிட்டாலும் சரி, அவர் தன் நிலையில் இருந்து சற்றும் விலகாமல் அவரவர் கர்ம வினைக்கேற்ப பலா பலன்களை எவ்வாறு தரவேண்டுமோ அவ்வாறு தருவார்.

- Advertisement -

sani-bagavaan

சனிப் பெயர்ச்சி காலங்களில் மனம் தளராமல் தன் வேலைகளை நன்றாகச் செய்து வந்தால் அதுவே சிறப்பைக் கொண்டு வரும்.

சனிபகவானுக்கு உரிய பரிகாரங்கள்:

- Advertisement -

கோள் சார ரீதியாக சனிப் பெயர்ச்சி அவரவர் லக்னத்துக்கோ, ராசிக்கோ பாதகமான இடத்தில் சஞ்சரித்தாலும் அவரவர் ஜாதக ரீதியாக தசா புத்திகள் நன்றாக நடந்தால், பாதகப் பலன்கள் குறைவாகத்தான் இருக்கும். தசா புத்தி சரியாக இல்லாதவர்களுக்கு சற்று பாதக பலன்கள் ஏற்படலாம்.

குளிகன்

ஆகவே பொதுவான பரிகாரமாக  மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது.  தன்னை விட பொருளாதார ரீதியாக தாழ்ந்த நிலையில் இருப்பவர்களுக்கு உதவி செய்வது.  வாரம் தவறாமல் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது.  நள புராணம் வாசிப்பது, கேட்பது,  தினம் 108 முறை சனீஸ்வரன் காயத்திரி மந்திரம் ஜபிப்பது.  ஹனுமன் ஸ்லோகம் சொல்வது. வெளியில் சென்று வரும் போது காலை நன்கு கழுவிக் கொள்வது, குரங்குகளுக்கு வாழைப் பழம் வாங்கி தருவது ஆகியவை சனிபகவானைக் குளிரச்செய்யும் சிறந்த பரிகாரங்கள்.

sani bagavan

பொதுவாக, ஜன்மச் சனி நடப்பவர்கள் திருக்கொள்ளிக்காடு, திருநள்ளாறு சனீஸ்வரன் கோயில், சுசீந்திரம் ஆஞ்சநேயர் கோயில்  ஆகிய இடங்களுக்குச் சென்று ஜன்ம நட்சத்திர நாளில் வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன்கள் கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே:
ஏழரை சனி தோஷத்தை ஏழரை நாழிகையில் நீக்கும் அற்புத கோவில்

சனீஸ்வரனைப் போல் கொடுப்பார் இல்லை. கால புருஷனின் ஜீவனாதிபதி லாபாதிபதி ஆவார். சகல சங்கடங்களையும் போக்கவேண்டும் என்று வேண்டி பிராயச்சித்தம் செய்தால், சனி பகவான் நன்மையே செய்வார்” என்று கூறினார்.

- Advertisement -