வறுமை நீங்க தீபம்

varumai neenga
- Advertisement -

வீட்டில் தரித்திரம் குடி கொண்டு விட்டால் அந்த வீட்டில் இருக்கும் நிம்மதி சந்தோஷம் எல்லாம் வெளியேறி விடும். ஆகையால் தான் நம் முன்னோர் காலத்தில் முதலே வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். வீட்டில் இறைவழிபாட்டை தொடர்ந்து செய்ய வேண்டும்.

தீபம் ஏற்ற வேண்டும் போன்றவற்றையெல்லாம் முறையாக கடைப்பிடித்து வந்தார்கள். இன்றைய அவசர காலக்கட்டத்தில் நாம் இவையெல்லாம் சரிவர செய்வது கிடையாது. வீட்டில் தரித்திரம் சூழ முதல் காரணமே நம்முடைய சோம்பேறித்தனம் தான் முக்கிய காரணம் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -

இந்த சோம்பேறித்தனம் குடி கொண்டாலே சனியன் ஆதிக்கம் அதிகரித்து விடும் என்றும் சொல்லப்படுகிறது. இவற்றிலிருந்து வெளிவர ஒரு அற்புதமான தீப வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

வறுமை நீங்க தீபம்
இந்த தீப வழிபாட்டை சனியின் தாக்கத்தினால் துன்பப்படுபவர்கள் ஏற்றலாம். வீட்டில் வறுமை, பணத்தடை, ஆரோக்கிய கேடு இப்படியான சூழ்நிலையில் உள்ளவர்களும் இந்த தீபத்தை ஏற்றலாம். சனிபகவானவனுக்கு வியர்வை வாடையே பிடிக்காது என்று சொல்வார்கள். இதற்கு என்ன பொருள் என்றால் நன்றாக உழைப்பவர்களை சனி பகவான் கூட ஒன்றும் செய்ய மாட்டார் என்பது தான்.

- Advertisement -

அப்படியானால் முதலில் நாம் இந்த பிரச்சனைகள் நம்மை தாக்காம இருக்க நல்ல முறையில் உழைக்க வேண்டும் எவர் ஒருவர் உழைப்பின் மீது நம்பிக்கை வைத்து அதிகமாக வியர்வை சிந்தி உழைக்கிறார்களோ அவர்கள் நிச்சயம் நல்ல நிலை அடைவார்கள். ஆனால் சில கிரக சூழ்நிலைகள் காரணமாக நம் நினைத்தாலும் இதை செய்ய முடியாத சோம்பேறித்தனமும் சூழ்நிலை உருவாகும்
அதை சரி செய்யத்தான் இந்த தீப வழிபாடு.

இந்த தீபத்தை பைரவருக்கு தான் ஏற்ற வேண்டும். ஆனால் சிவன் ஆலயத்தில் இருக்கும் பைரவருக்கு மட்டுமே ஏற்ற வேண்டும் மற்ற இடங்களில் ஏற்றக் கூடாது. இந்த தீபத்தை சனிக்கிழமைகளில் மாலை வேளையில் ஏற்ற வேண்டும் ஒரு அகல் விளக்கில் சிறிதளவு எள்ளை கருப்பு நிற துணியில் மூட்டையாக கட்டி நல்லெண்ணெய் ஊற்றி தீபம் பைரவருக்கு முன்பாக தீபம் ஏற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த வழிபாட்டை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய குடும்பத்தில் இருக்கும் வறுமை நிலை மாறுவதற்கான அனைத்து வாய்ப்புகளும் உருவாகும். ஏனெனில் பைரவர் ஆனவர் சனி பகவானுக்கு அதிபதி தெய்வமென சொல்லப்படுகிறது. இவரை சரணடைந்தால் சனியின் தாக்கமும் இதனால் ஏற்படக் கூடிய வறுமை பீடை தரித்திரம் ஆரோக்கிய கேடு அனைத்தும் நிவர்த்தியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை நீக்கும் நரசிம்மர் தீப வழிபாடு

எந்த ஒரு வழிபாட்டையும் நம்பிக்கையுடன் செய்யும் பொழுது நிச்சயம் அதற்கான நல்ல பலன் கிடைக்கும். உங்களுடைய நல்ல முயற்சி உழைப்புடன் சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்யுங்கள் எந்த சூழ்நிலையிலும் எதுவும் உங்களை தாக்காமல் செல்வ வளத்துடன் வாழக்கூடிய யோகத்தை பெறலாம்.

- Advertisement -