குடும்பத்தில் சந்தோஷம் பால் போல் பொங்கி வழிய வெள்ளிக்கிழமை இந்த மரத்துக்கு அடியில் வெறும் 6 சொட்டு பால் விட்டாலே போதும்.

siva-lingam-abishegam
- Advertisement -

ஆயிரம் வருஷமாகங்க வாழ போறோம். நாம வாழப் போறது எழுவதிலிருந்து, என்பது வருடத்திற்குள் தான். சில பேருக்கு அவ்வளவு நாள் கூட ஆயுள் நீடிப்பது கிடையாது. இதில் பாதி நேரம் இரவு தூக்கத்திலேயே முடிந்து விடுகிறது. கிட்டத்தட்ட கணக்கு போட்டு பார்த்தால் வாழ்க்கை என்பது முழுமையாக 40 வருடங்கள் கூட இருப்பது கிடையாது. இந்த வாழ்க்கையை வாழ்வதற்கு எத்தனை போராட்டங்கள். இந்தப் போராட்டத்தில் இருக்கும் கொஞ்சம் நஞ்ச சந்தோஷத்தை கூட சுத்தமாக இழுந்து விடுகின்றோம். நம்மால் அனுபவிக்க முடிந்த ஒரே விஷயம் சந்தோசம், சாப்பாடு, இந்த இரண்டும் மட்டும்தான். அது தவிர இருப்பதற்கு ஒரு வீடு தேவை.

வாழ்வதற்கு இவை இருந்தால் போதுமா? இந்த வாழ்க்கையை வாழ தேவையானது கொஞ்சம் பணம் கட்டாயம். பணம் இல்லை என்றால் இந்த கலியுகத்தில், இந்த பூமியில் வாழ்க்கை நடத்த முடியாது தான். இருப்பினும் பணத்தை மட்டுமே வைத்து எல்லாவற்றையும் வாங்கி விட முடியாது. சந்தோஷம், மன நிறைவு, நிம்மதி, ஆரோக்கியம், இவைகள் எல்லாம் இறைவன் கொடுத்த வரம். இவைகளை எல்லாம் இழந்து விட்டு பணத்தை மட்டும் தேடி ஓடாதீங்க என்ற ஒரு தகவலையும் இந்த இடத்தில் பதிவு செய்யது கொள்ள வேண்டியது மிக மிக அவசியம்.

- Advertisement -

எந்த காரணத்தைக் கொண்டும் சின்ன சின்ன அளவில் கிடைக்கக்கூடிய சந்தோஷத்தை கூட நாமும் நம்முடைய குடும்பமும் இழந்து விடக்கூடாது. அதற்கு என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள். ஆனால் சில பேர் சூழ்நிலை காரணமாக, குடும்பத்தை பிரிந்து, சந்தோஷத்தை இழந்து, தூரமாக இருக்க வேண்டிய சூழ்நிலை. அவர்களையும் நம் குறை சொல்ல முடியாது. அடுத்தவர்கள் உங்களுக்கு தீங்கு செய்தாலும், அவர்களுக்கு பதிலுக்கு நீங்க நன்மைதான் செய்ய வேண்டும்.

குடும்பத்தில் சந்தோஷம் பொங்கி வழிய பால் பரிகாரம்:
சரிங்க, என்னதான் சொன்னாலும் ஒரு பரிகாரத்தை செய்து விட்டால் மனது நிம்மதி அடையும். குடும்பம் சந்தோஷமாக இருக்க குடும்பத்தில் சந்தோஷம் பால் போல பொங்கிவாடிய செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் இதோ உங்களுக்காக. வெள்ளிக்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் வீட்டின் அருகில் இருக்கும் ஏதாவது சிவன் கோவிலுக்கு செல்லுங்கள்.

- Advertisement -

சிவன் கோவிலில் கண்டிப்பாக வில்வமரம் இருக்கும். நந்தி தேவர், சிவனை தரிசனம் செய்யுங்கள். கோயிலை சுற்றி உள்ள மற்ற தெய்வங்களை எல்லாம் முறையாக வழிபட்டு விட்டு ஒரு ஆறு சொட்டு பச்சை பசும்பாலை அந்த வில்வ மரத்துக்கு அடியில் ஊற்றிவிட்டு, வில்வ மரத்தை தொட்டு வணங்கி முடிந்தால் மூன்று முறை வலம் வாருங்கள். குடும்பம் எப்போதும் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்று வேண்டுதலை மனப்பூர்வமாக வையுங்கள்.

பிறகு சிவன் கோவிலிலேயே ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்து மனதை அமைதிப்படுத்தி விட்டு வீடு திரும்பி தினசரி வேலையை தொடங்க வேண்டும். வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்து வர வேண்டும். தொடர்ந்து ஆறு வாரம் இந்த பரிகாரத்தை செய்யும் போதே உங்களுடைய வாழ்க்கையில் ஏற்படும் நல்ல மாற்றங்களை உணர முடியும். நிஜமான சந்தோஷத்தை இதுவரைக்கும் நீங்கள் அனுபவித்ததில்லை என்றால், இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள் சந்தோஷம் நிச்சயம் உங்கள் இல்லம் தேடி வரும்.

இதையும் படிக்கலாமே: பணம் கொட்டோ கொட்டென கொட்ட கொட்டாங்குச்சியில் இதை போட்டு வையுங்கள். அடுத்தடுத்து நடக்கக்கூடிய நல்லதை விரல் விட்டு எண்ண கூட நேரம் இருக்காது.

கோடி ரூபாய் கொடுத்தால் கூட ஐந்து நிமிட சந்தோஷத்தை வாங்க முடியாதுங்க. சந்தோஷத்தை நாமே உருவாக்கிக் கொண்டால் தான் உண்டு. உங்களுடைய குடும்பம், உங்களுடைய மனைவி, தாய், தந்தை, குழந்தை, உறவுகள் நண்பர்கள் என்று நேரத்தை அவர்களுடன் அமர்ந்து செலவழித்து பாருங்கள். அதில் இருக்கும் சந்தோஷமும் மன நிறைவும் வேறு எதிலும் முழுமையாக கிடைப்பது கிடையாது என்ற இந்த தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -