கூட இருந்தே குழி பறிக்கும் துரோகிகளை அழிக்க யாரை வணங்க வேண்டும் தெரியுமா? எப்பேர்பட்ட பகைவர்களையும் ஒழித்து ஒன்றும் இல்லாமல் செய்ய, கைவிடப்பட்ட நோய்களும் நீங்க இவரை வழிபட்டாலே போதும்! யார் இவர்?

- Advertisement -

தீராத பிணிகளையும், தீராத பகைகளையும் ஒழித்து கட்ட இவரை வழிபட்டாலே போதும். நம்முடன் இருந்து கொண்டே நமக்கான எதிரிகளை சிலர் உருவாக்கிக் கொண்டிருப்பார்கள். இத்தகைய பச்சை துரோகிகளை, அவ்வளவு எளிதாக நம்மால் இனம் கண்டு கொள்ளவும் முடியாது.

சுற்றி இருக்கும் பகைவர்களின் சூழ்ச்சிகளை ஒன்றும் இல்லாமல் செய்யவும், இனி அவ்வளவுதான் இந்த நோய் குணமாகாது என்று நினைப்பவர்களும் இவர் ஒருவரை வழிபட்டு வணங்கினாலே ஆச்சரியத்தை காணலாம். அத்தகைய தெய்வம் யார்? இவரை எப்படி வழிபட வேண்டும்? என்கிற ஆன்மீக குறிப்பு தகவல்களைத் தான் இந்த பதிவில் இனி தொடர்ந்து காண இருக்கிறோம்.

- Advertisement -

‘இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்’ என்று கூறிய பிரகலாதனின் பக்திக்காகவும், இரணியன் பெற்ற வரத்திற்காகவும் நரசிம்ம அவதாரம் எடுத்து வதம் செய்யப்பட்டார், இரணிய கசிபு. இந்த நரசிம்ம அவதாரத்தின் பொழுது இரணியன் என்னும் அரக்கனின் ரத்தத்தை உறிஞ்சி குடித்ததால் மிகுந்த ஆக்ரோஷத்தில் நரசிம்மர் இருந்தார். இவரை சாந்தப்படுத்த வேண்டிய தேவர்கள் பயந்து போய் அனைவரும் ஈசனை வேண்டி வணங்கி வழிபட்டனர்.

இதனால் ஈசன் சரபம் என்னும் பறவை ரூபம் எடுத்தார். சரபம் என்றால் எட்டு கால்கள் உடைய பறவை ஆகும், இரண்டு தலைகள் இதற்கு இருக்கும். இந்த வடிவம் சரபேஸ்வர வடிவம் ஆகும். சரபேஸ்வரர் அவதாரம் எடுத்து நரசிம்மரை சாந்தப்படுத்தியவர்.

- Advertisement -

சத்ருகளை அழிக்க இவரை வழிபடலாம். கூடவே இருந்து கொண்டு நமக்கு துரோகம் இழைப்பவர்கள், குழி பறிப்பவர்கள், சூழ்ச்சிகள் புரிபவர்களை எதிர்த்து துவம்சம் செய்ய சரபேஸ்வரர் வழிபாடு பெருந்துணை செய்யும். இனி கோவிலுக்கு சென்றால் சரபேஸ்வரரை வழிபடுவதற்கு மறவாதீர்கள். சரபேஸ்வரர் சிங்கமுகத்துடனும், மனித உடலுடனும், இறக்கைகளுடன், சிங்க கால்களுடன் ஆக்ரோஷமாக காட்சி அளிக்கின்றார்.

எந்த கஷ்டத்திற்கும் பரிகாரம் உண்டு ஆனால் சில கஷ்டங்களுக்கு பரிகாரம் செய்தால் கூட நிவர்த்தி கிடைக்காது அப்படிப்பட்டவர்களும், சரபேஸ்வரரை தொடர்ந்து வழிபட்டு வரலாம். டாக்டர்களால் கைவிடப்பட்ட தீராத நோய்களை கூட தீர்த்துவிடக் கூடிய அற்புத சக்தி இவருக்கு உண்டு. பில்லி, சூனியம், ஏவல் போன்ற எந்த விதமான பிரச்சனைகளுக்கும் சரபேஸ்வரர் வழிபாடு சிறந்த வழிபாடாக இருந்து வருகிறது.

- Advertisement -

குலதெய்வ அருள் நமக்கு இருந்தால் எப்படி நம் குலத்தை பத்திரமாக காப்பாற்றுவாரோ அதே போல சரபேஸ்வரரை சரணடைந்தவர்களை அவர் தன் குழந்தைகளாக பாவித்து பத்திரமாக எல்லா விதமான பிரச்சனைகளில் இருந்தும் விடுவித்து மகிழ்ச்சியை கொடுக்கக் கூடியவர்.

சரபேஸ்வரர் காயத்ரி மந்திரம்:
”ஓம் சாலுவேசாய வித்மஹே,
பக்ஷிராஜாய தீமஹி,
தந்நோ சரப ப்ரசோதயாத்!”

இதையும் படிக்கலாமே:
யார் நினைத்தாலும் உங்கள் வீட்டின் மீது கண் திருஷ்டியை வைக்க முடியாது. வரவேற்பறையில், தண்ணீரில் இந்த 3 பொருட்கள் இருந்தால்.

துர்க்கை அம்மனும், காளியும் சரபேஸ்வர உருவத்தில் உண்டு. இவரை வீட்டில் படமாக வைத்து வழிபட முடியாது. உக்கிர தெய்வம் என்பதால் கோவிலில் மட்டுமே வழிபட வேண்டும், இருப்பினும் இவருடைய மேற்க்கூரிய இந்த காயத்ரி மந்திரத்தை மனமார உச்சரித்து, மனதிலேயே சரபேஸ்வரரை வழிபடலாம். ஞாயிற்றுக் கிழமைகளில் வரக்கூடிய ராகு காலத்தில் சரபேஸ்வர சந்நிதிக்கு சென்று 11 விளக்குகள் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். இவ்வாறு வழிப்பட்டால் வேண்டிய வேண்டுதல் உடனே நடக்கும். மற்றவர்களால் உண்டாக கூடிய எவ்வகை கெடுதல்களையும் இவர் ஒருவரே தடுத்து நிறுத்தி பாதுகாப்பு தருவார்.

- Advertisement -