முருகனின் இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கும்.

murugan manthiram
- Advertisement -

மனிதனின் முயற்சிக்கு அப்பாற்பட்டு நடக்கக்கூடிய செயல்தான் இறைவனின் அருள். ஒவ்வொரு தெய்வத்திற்கும் ஒவ்வொரு வகையான மந்திரங்கள் இருக்கும். அந்த மந்திரங்களை முறையாக நாம் உச்சரிக்கும் பொழுது அதற்குரிய பலன் நம்மை வந்து சேரும். இந்த மந்திரம் குறித்த பதிவில் முருகப்பெருமானின் மூல மந்திரத்தை எப்படி உச்சரித்தால் வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்கும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

முருகப் பெருமானுக்கு என்று பல மந்திரங்கள் இருக்கின்றன. பல சித்தர்கள் அவரை வணங்கும் பொழுது பல மந்திரங்களை உருவேற்றினார்கள். அந்த மந்திரங்களையும் அதன் பலன்களையும் பிற்கால சந்ததியினர் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்திருந்தார்கள்.

- Advertisement -

அப்படி பல மந்திரங்களை பெற்ற முருகப் பெருமானின் மூல மந்திரம் என்று நாம் கூறுவது “ஓம் சரவணபவ” இந்த மந்திரத்தை முறையாக கூறினால் இந்தப் பிறவி மட்டுமல்லாமல் நம்முடைய ஏழேழு பிறவிகளுக்கும் அதைத் தாண்டி இறைவனின் திருவடியை அடைவதற்கும் உதவி புரியும்.

மந்திரம்:

சரவணபவ – இந்த மந்திரத்தை உச்சரித்தால் சர்வமும் வசமாகும்.
ரவணபவச – இந்த மந்திரத்தை உச்சரித்தால் நம் வாழ்க்கைக்கு தேவையான அனைத்து பொருளும் நம்மை வந்து சேரும்.
வணபவசர – இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு தெரிந்த எதிரிகள் மற்றும் மறைமுகமாக நமக்கு இருக்கும் எதிரிகள் என்று அனைத்து வகையான எதிரிகளையும் நம்மால் வெல்ல முடியும்.
ணபவசரவ – இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு இருக்கக்கூடிய எப்பேற்பட்ட நோயாக இருந்தாலும் அந்த நோய்கள் அகன்று விடும்.
பவசரவண – இந்த மந்திரத்தை உச்சரித்தால் நாம் செய்யும் தொழிலில் நமக்கு சிறந்த ஞானத்தை முருகப்பெருமான் அருள்வார்.
வசரவணப – இந்த மந்திரத்தை உச்சரித்தால் நமக்கு முக்தி நிச்சயம் கிடைக்கும்.

- Advertisement -

மேற் சொன்ன இந்த மந்திரத்தை

“ஓம் சரவணபவ ரவணபவச வணபவசர ணபவசரவ பவசரவண வசரவணப”

என்று தினமும் குறைந்தது ஆறு முறை உச்சரிக்க வேண்டும். இவ்வாறு உச்சரிப்பதற்கு முன்பாக விநாயகப் பெருமானை வழிப்பட வேண்டும். பிறகு குருதட்சணையாக ஒரு ரூபாயை முருகப்பெருமானுக்கு அல்லது விநாயகப் பெருமானுக்கு எடுத்து வைத்து விட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு கூறும் பொழுது அந்த மந்திரத்திற்கு உரிய பலனை மட்டும் நாம் பெறாமல் முருகப் பெருமானின் அருளையும் பெற்று பிறவா நிலையை அடைவோம் என்பது சித்தர்களின் வாக்கு.

இதையும் படிக்கலாம்: வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு வழிவகை செய்யக்கூடிய வாய்ப்புகளை தரும் மந்திரம்.

நாளை முருகப்பெருமானின் ஆதிக்கம் நிறைந்த செவ்வாய்க்கிழமை அன்று முருகப் பெருமானுக்குரிய நட்சத்திரமான கிருத்திகை நட்சத்திரம் வருகிறது. இந்த அற்புதமான நாளை பயன்படுத்தி இந்த மந்திரத்தை உச்சரிக்க ஆரம்பித்தால் முருகப்பெருமானின் அருள் பரிபூரணமாக நமக்கும் நம் குடும்பத்திற்கும் கிடைக்கும்.

- Advertisement -