விநாயகப் பெருமானை இந்த முறையில் வழிபட்டால் ஜாதகத்தில் இருக்கக்கூடிய கால சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் விலகும்.

sarba thosam vinayagar
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொருவருக்கும் அவர்கள் பிறந்த நேரத்தை பொருத்து ராசி, நட்சத்திரம், லக்னம் என்று பல இருக்கும். அப்படிப்பட்ட ஜாதகத்தில் அவர்களுக்கு என்று சில யோகங்களும் அதே சமயம் தோஷங்களும் இருக்கும். அதில் குறிப்பிடத்தக்க தோஷமாக கருதப்படுவது தான் கால சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் விநாயகப் பெருமானை எந்த முறையில் வழிபட்டால் கால சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் நிவர்த்தியாகும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.

ஒருவருடைய ஜாதகத்தில் கால சர்ப்ப தோஷம் மற்றும் நாக தோஷம் இருந்தால் அவர்களுடைய வாழ்க்கையில் நன்மைகள் அவ்வளவு எளிதில் நடைபெறாது. எந்த காரியத்தை செய்ய ஆரம்பித்தாலும் அதில் தடைகளும், தடங்கல்களும் ஏற்படும். மேலும் சுபகாரியங்கள் தடைகளாகவே வந்து சேரும். சில நேரங்களில் அவர்கள் எதற்காக வாழ்கிறோம் என்ற விரக்தியான எண்ணத்திற்கு கூட போவார்கள். சரியான தூக்கமின்மை, உடல் உபாதைகள் அடிக்கடி ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

- Advertisement -

கால சர்ப்ப தோஷத்தையும், நாக தோஷத்தையும் விலக்குவதற்கு விநாயகப் பெருமானை வழிபடும் முறையை பார்ப்போம். இந்த வழிபாட்டை நாம் வளர்பிறையில் வரக்கூடிய சுப முகூர்த்த நாள் அன்று ஆரம்பிக்க வேண்டும். அதுவும் திங்கட்கிழமையாக இருந்தால் மிகவும் விஷேசமாக இருக்கும்.

கால சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் அருகில் இருக்கும் விநாயகர் ஆலயத்திற்கு காலையில் சென்று விநாயகருக்கு செம்பருத்தி பூவை சாற்ற வேண்டும். பிறகு அருகம்புல் மாலையை நம் கையாலேயே கட்டி அவருக்கு தர வேண்டும். அடுத்ததாக அவருக்கு இரண்டு நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இவ்வாறு தொடர்ந்து 48 நாட்கள் செய்ய வேண்டும்.

- Advertisement -

பெண்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களால் தொடர்ந்து 48 நாட்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ள இயலாது. அப்படி தொடர்ந்து வழிபாட்டை மேற்கொள்ள முடியாதவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் விநாயகர் பெருமானுக்கு செம்பருத்தி பூ மற்றும் அருகம்புல் மாலையை சாற்றி இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைக்க வேண்டும். பிறகு ஒரு முழு தேங்காயை அவருக்கு நெய்வேத்தியமாக படைத்து ஒன்பது முறை சுற்றி வந்து அவரை வழிபட்டு வர வேண்டும்.

இப்படி தொடர்ந்து ஒன்பது வாரங்கள் நாம் விநாயகர் பெருமானே வழிபட்டோம் என்றால் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய எப்பேர்பட்ட நாக தோஷமாக இருந்தாலும் கால சர்ப்ப தோஷமாக இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கிவிடும்.

இதையும் படிக்கலாமே: திருமண யோகம் கை கூட இப்படி செய்தால் விரைவில் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.

இந்த எளிய வழிபாட்டு முறையை மேற்கொண்டு வாழ்க்கையில் இருக்கக் கூடிய தடைகள் அனைத்தையும் விலக்கி சுகமான வாழ்க்கையை மேற்கொள்ள விநாயகப் பெருமான் அருள் புரிவார்.

- Advertisement -