திருமண யோகம் கை கூட இப்படி செய்தால் விரைவில் விரும்பிய வாழ்க்கை கிடைக்கும்.

sivan parvathi marriage
- Advertisement -

நம்முடைய கலாச்சாரத்தில் திருமணம் என்பது மிகப்பெரிய புனிதபந்தம். ஆகையால் தான் மற்ற எந்த உறவுகளுக்கும் இல்லாத தனி சிறப்புகள் இந்த உறவிற்கு உண்டு. இன்றளவும் பலரும் இந்த திருமண யோகம் கிடைக்காமல் இருக்கிறார்கள். அப்படியானவர்கள் விரைவில் விரும்பிய வாழ்க்கை அமைய எளிமையான இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம் என்று ஆன்மீகம் சொல்கிறது.

விரைவில் திருமணம் கைகூட

இந்த வழிபாட்டை நீங்கள் எந்த நாளில் வேண்டுமானாலும் தொடங்கலாம். இதற்கு சிவன் பார்வதி ஒன்றாக இருக்கும் திருவுருவப்படம் நிச்சயம் தேவை. அத்துடன் ருத்ராட்ச மாலை அல்லது வேறு ஏதேனும் மாலை ஒன்றை வாங்கிக் கொள்ளுங்கள். நீங்கள் அமர்ந்து மந்திரத்தை சொல்ல ஒரு மனையும் வாங்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த மந்திர வழிபாட்டை 48 நாட்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். இதை தொடங்குவதற்கு முதல் நாளை வீட்டில் பூஜை அறைகளை சுத்தம் செய்து படத்திற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து பூஜைக்கான அனைத்து வேலைகளையும் முடித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை முதல் நாள் எந்த நேரத்தில் தொடங்குகிறீர்களோ 48 நாளும் அதே நேரத்தில் செய்ய வேண்டும்.

இப்போது பூஜை அறையில் சிவன் பார்வதி படத்திற்கு முன்பாக ஒரு தீபம் ஏற்றி வைத்து விடுங்கள். அதற்கு முன்பாக நீங்கள் வாங்கி இருக்கும் மனையை போட்டு அமர்ந்து கொள்ளுங்கள். அது இல்லையெனில் ஒரு துணியாவது போட்ட அமருங்கள். வெறும் தரையில் அமரக் கூடாது. அதன் பிறகு இந்த மந்திரத்தை சொல்ல ஆரம்பியுங்கள்.

- Advertisement -

காமேச பக்த மாங்கல்ய ஸுத்ர சோபித காந்தாரா

என்ற இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். இதை சொல்லும் போது கையில் ஜெபமாலையை வைத்து கொள்ளுங்கள். இந்த வழிபாட்டை செய்து முடித்த கடைசி நாள் மூன்று சுமங்கலி பெண்களுக்கு வெற்றிலை பாக்கு தாம்பூலங்களை கொடுத்து அவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கி கொள்ளுங்கள்.

அதே போல் இந்த 48 நாட்களில் வரும் வெள்ளிக்கிழமைகளில் இதே போல் சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்து ஆசீர்வாதம் வாங்குவது சிறந்தது. அதுமட்டுமின்றி இந்த வழிபாட்டை யாருக்கு திருமணம் ஆகவில்லையோ அவர்கள் தான் செய்ய வேண்டும் அப்போது தான் முழு பலன் கிட்டும்.

இதையும் படிக்கலாமே: வீடு எந்நேரமும் வற்றாத பணவரவுடன் இருக்க வீட்டின் தென்கிழக்கு மூலையில் இதை வைத்தால் போதும்.

திருமண பந்தம் என்பது மிகப்பெரிய வரம். அந்த வரம் அவ்வளவு எளிதில் அனைவருக்கும் கிடைத்து விடுவதில்லை. இந்த மந்திரத்துடன் கூடிய வழிபாட்டை நம்பிக்கையுடன் தொடர்ந்து செய்து வரும் போது திருமண யோகம் விரைவில் அமையும். நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -