பணம் கொழிக்க சாம்பிராணி தூபம் போடும் முறை

dhupam2
- Advertisement -

இறையருள் நிலையாக வீட்டில் நிலைத்திருக்க வேண்டும், வீட்டில் இருக்கும் துஷ்ட சக்திகள் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட வேண்டும், என்பதற்காகத்தான் அந்த காலம் தொட்டே நம்முடைய முன்னோர்கள் சாம்பிராணி புகையை போடும் வழக்கத்தை வைத்துள்ளார்கள். அதிலும் வெள்ளிக்கிழமை செவ்வாய்க்கிழமை என்றால் கட்டாயம் வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டு விளக்கு ஏற்றி இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த வழிபாட்டை மேற்கொள்பவர்கள் வீட்டில் நிச்சயம் தரித்திரம் தங்காது. இதேபோல வியாழக்கிழமை இந்த புகையை உங்க வீட்டில் போடுங்க. உங்க வீட்டில் இருக்கும் பணக்கஷ்டமும் வறுமையும் வெளியே செல்லும். வீட்டிற்குள் செல்வ மழை பொழிய தொடங்கும்.

- Advertisement -

செல்வம் கொழிக்க சாம்பிராணி தூபம் போடும் முறை

வழக்கம் போல நெருப்பு மூட்டிக்கோங்க. அதில் சாம்பிராணி தூளை தூவி விடுங்கள். அதிலிருந்து நல்ல வாசம் நிறைந்த புகை உங்களுக்கு கிடைக்கும். கூடவே சேர்த்து அந்த நெருப்பில் ஒரு சின்ன துண்டு பட்டை, ஒரே ஒரு ஏலக்காய், ஒரு சின்ன துண்டு பச்சை கற்பூரத்தை தூள் செய்து தூவி விடுங்கள், இறுதியாக 1 ஸ்பூன் சர்க்கரையை எடுத்து அந்த தூபத்தில் தூவி விடுங்கள்.

சர்க்கரையை போட்டு வீட்டில் சாம்பிராணி தூபம் போட்டால் செல்வம் கொழிக்கும் என்பது நம்பிக்கை. வெள்ளை நிற சர்க்கரை சுக்கிர பகவானுக்கு உரியது. இந்த சர்க்கரை அந்த நெருப்பில் உருகி வரும்போது லேசான இனிப்பு வாசம் வீசும் பாருங்க. சர்க்கரை பாகு வாசம். அந்த வாசம் உங்கள் வீடு முழுவதும் பரவி இருக்க வேண்டும். இந்த வாசத்திற்கு வீட்டில் இருக்கும் வறுமை வெளியே சென்று விடும். வீட்டிற்குள் செல்வ வளம் பெருகும்.

- Advertisement -

வியாழக்கிழமை மாலை 5:00 மணியிலிருந்து 8:00 மணி வரை குபேர நேரம் என்று சொல்லுவார்கள். அந்த நேரத்தில் வீட்டில் பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, குபேரரை நினைத்து இந்த தூபத்தை போட்டு பாருங்கள். தொடர்ந்து 5 வாரம் வியாழக்கிழமை மேல் சொன்ன முறைப்படி புகை போடுங்கள்.

ஆறாவது வாரம் வியாழக்கிழமை நீங்கள் நம்பவே முடியாத ஒரு நல்லது நிச்சயம் நடக்கும். அது பணம் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம், வேலை சம்பந்தப்பட்ட விஷயம், தொழில் சம்பந்தப்பட்ட விஷயம், கடன் சம்பந்தப்பட்ட விஷயம், இப்படி பொருளாதாரத்தில் உங்களுக்கு எந்த பிரச்சனை இருந்தாலும் அதை சரி செய்து தரக்கூடிய சக்தி வாய்ந்த பரிகார முறை இது. ரொம்ப ரொம்ப எளிமையான முறையில் எல்லோராலும் இதை செய்ய முடியும்.

- Advertisement -

முதலில் பூஜை அறையில் இந்த புகையை போடுங்கள். பிறகு அந்த புகையை வீடு முழுவதும் காண்பித்து விட்டு, கொண்டு வந்து பூஜை அறையில் வைக்கவும். இந்த புகையை எல்லா இடத்திலும் காட்டும் போது மனதிற்குள் உங்களுடைய பணம் பல மடங்கு பெருக வேண்டும் என்று வேண்டுதலை நம்பிக்கையாக வையுங்கள்.

இதையும் படிக்கலாமே: நினைத்த காரியம் நல்லபடியாக நடந்து முடிய பரிகாரம்

குறிப்பாக உங்கள் பணம் வைக்கும் பெட்டிக்குள் இந்த புகை போகும் படி பார்த்துக் கொள்ளுங்கள். ஜாக்கிரதையாக பீரொவில் இந்த புகையை கொண்டு போய் காண்பியுங்கள். ஏனென்றால் நெருப்பு சம்பந்தப்பட்ட விஷயம். பீரோவில் துணி பணமெல்லாம் வச்சிருப்பீங்க. ஜாக்கிரதையா பரிகாரத்தை செய்யுங்கள். நிச்சயம் நல்லது நடக்கும் என்ற நம்பிக்கையில் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -