சமையல் கட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நம்முடைய முகத்தில் முகப்பரு, கருவளையம், தழும்புகள் ஆகியவற்றை எப்படி ஒரே நாளில் ஓட ஓட விரட்டுவது?

face-pack-kitchen
- Advertisement -

நம் வீட்டில் இருக்கும் சமையல் கட்டிலேயே ஏராளமான அழகு சாதன பொருட்கள் இயற்கையாகவே ஒளிந்து கொண்டு இருக்கின்றன. இவற்றை விடுத்து ஆயிரக்கணக்கில் செலவு செய்துதான் நம் முகத்தை ஜொலிக்க செய்ய வேண்டும் என்கிற அவசியம் இல்லை! ரொம்ப சுலபமாக முகப்பரு, கருவளையம், தழும்புகள் போன்ற ஆபத்தான சரும பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு நம்முடைய முகம் பளிங்கு போல ஜொலிக்க நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத்தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தொடர்ந்து அறிந்து கொள்ள இருக்கிறோம்.

முகத்தில் இருக்கக்கூடிய சிறு சிறு துவாரங்கள் வழியே அழுக்குகள், மாசுகள் நுழைந்து கிருமிகளை உருவாக்குகிறது. இதனால் முகப்பருக்கள் தோன்றுகிறது. முகப்பருக்களில் இருந்து தழும்புகளும் உருவாகிறது. சருமத்திற்கு போதிய பராமரிப்பு இல்லாததால் கருமை படர்ந்து, கண்ணுக்கு கீழே கருவளையம் சுற்றிக் கொள்கிறது. இப்படி நம் சருமத்தை கண்டு கொள்ளாமல் விட்டு விடுவதால் முகம் பொழிவிழந்து பார்ப்பதற்கு நோயாளி போல தோற்றம் அளித்து வருகிறோம்.

- Advertisement -

இயற்கையான பொருட்கள் மற்றும் சுலபமாக நம் வீட்டிலேயே இருக்கக்கூடிய பொருட்களை வைத்து எப்படி இந்த இழந்த பொலிவை மீட்டு எடுப்பது? முகத்தை மாசு, மருவின்றி ஜொலிக்க செய்வது? என்பதை இனி தொடர்ந்து பார்ப்போம். முதலில் ஒரு சிறிய பவுல் ஒன்றை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் கெட்டியான தயிர் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு விதைகள் இல்லாமல் சேர்த்து கலந்து விடுங்கள். அடுத்து ஒரு ஸ்பூன் தேன் சேர்த்துக் கொள்ளுங்கள். ஒரு ஸ்பூன் கடலை மாவு போட்டு, ஒரு ஸ்பூன் பன்னீர் சேர்த்து கலந்து விடுங்கள். கடைசியாக அரை ஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ளுங்கள். கஸ்தூரி மஞ்சள், குண்டு மஞ்சள் எந்த தூளாக இருந்தாலும் பரவாயில்லை. இவற்றையெல்லாம் சேர்த்த பின்பு நன்கு ஒரு பேஸ்ட் போல கரைத்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இந்த பேஸ்டை நீங்கள் முகத்தில் கீழிருந்து மேலாக மசாஜ் செய்தபடி மென்மையாக தடவி கொள்ள வேண்டும். கீழிருந்து மேலாக தடவி மசாஜ் செய்யும் பொழுது இறந்த செல்கள் அனைத்தும் வெளியில் வரும். முகம் நல்ல ஒரு புத்துணர்ச்சி அடையும், எனவே ஒரு 15 இல் இருந்து 20 நிமிடம் தொடர்ந்து இதுபோல இந்த பேஸ்ட்டை வைத்து முகம் முழுவதும் கீழிருந்து மேல் புறமாக மென்மையாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். கழுத்து மற்றும் கழுத்தை சுற்றி இருக்கும் பகுதிகளிலும் இது போல மசாஜ் செய்தால் கழுத்து கருமை எளிதாக நீங்கும்.

இதையும் படிக்கலாமே:
தலை முடி வளர்ச்சி தாறுமாறாக இருக்க வேண்டுமா? யோசிக்காமல் இந்த ஒரு பேக்கை ரெடி பண்ணிடுங்க.

சிறிது நேரம் மசாஜ் செய்துவிட்ட பின்பு அப்படியே உலர விட்டு விடுங்கள். ஒரு மணி நேரம் நன்கு உலர்ந்ததும் குளிர்ந்த நீரினால் முகத்தை அலம்பிக் கொள்ளுங்கள். இது போல தினமும் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, வாரம் ஒரு முறை நீங்கள் செய்தாலே அந்த வாரம் முழுவதும் நல்ல ஒரு புத்துணர்வோடு சருமம் ஜொலிக்கும். தழும்புகள் மெல்ல மெல்ல மறைய ஆரம்பிக்கும். கருவளையம் விரைவாக மறைவதை நீங்கள் காண முடியும். முகப்பருக்கள் இருந்த இடம் தெரியாமல் மாயமாய் போய்விடும். ஒருமுறை செய்யும் பொழுதே நல்ல ரிசல்ட் நீங்கள் பார்க்க முடியும். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது அதற்குரிய மாற்றத்தை நீங்கள் ஒரே மாதத்தில் காணலாம், ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -