கண்ணுக்குத் தெரியாத தோஷத்தை கூட நிவர்த்தி செய்யும் பரிகாரம்!

Sivan
- Advertisement -

திடீரென்று வாழ்க்கையில் எதனால் கஷ்டம் வருகிறது, என்றே சிலருக்கு தெரியாது. திடீர் ஏமாற்றங்கள், திடீர் இழப்புகள், எதிர்பாராத தொடர் துர்மரணங்கள் கூட சிலரை கஷ்டப்படுத்தும். அதாவது நம்மைச் சேர்ந்தவர்கள், நமக்கு பிடித்தவர்கள் நம்மை விட்டு, திரும்பி வர முடியாத தொலைவிற்கு சென்று இருப்பார்கள். இப்படி பல வகைப்பட்ட மனக்கஷ்டங்கள் ஒரு பக்கம் இருக்க, ஒரு சில பேருக்கு, பணக் கஷ்டம் வந்து வாட்டி வதைக்கும். தொழில் அதிக லாபத்தை கொட்டி கொடுத்துக் கொண்டே இருக்கும. திடீரென்று, அதே தொழில், சில நாட்களிலேயே நஷ்டத்தில் முடிந்திருக்கும். சிலபேருக்கு வாழ்க்கையில் எதிர்பாராத சமயங்களில், எதிர்பாராத அடி விழுந்து விடும். அடி என்றால் எடுத்து அடிப்பது கிடையாது, தாங்க முடியாத துயரம் ஏற்பட்டிருக்கும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் எதனால் ஏற்படுகிறது?

sad

இப்படிப்பட்ட பெரிய பெரிய பிரச்சனைகள் எப்போது வரும் என்பதை, சில ஜோதிடர்கள் ஜாதகத்தை வைத்து கணித்து விடுவார்கள். உங்களுக்கு இந்த வருடத்தில், இந்த வயதில் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள்! அந்த சம்பவம் நடக்க, அவர்கள் ஜாதகத்தில் இருக்கும் பித்ரு தோஷம், பிரம்மஹத்தி தோஷம், களஸ்திர தோஷம், இப்படி பலவகைப்பட்ட தோஷங்கள் காரணமாக இருக்கலாம்.

- Advertisement -

நமக்கு கண்ணுக்குத் தெரிந்த தோஷங்கள் சிலவகை தான். அதற்கான பரிகாரத்தை செய்து விடுவோம். ஆனால், கண்ணுக்கே தெரியாத பல தோஷங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதன் மூலம், பாதிப்புகளும் அதிகமாகத்தான் இருக்கிறது. அதை குறைக்க என்ன செய்ய வேண்டும். சர்வ தோஷமும் நிவர்த்தி ஆக உங்களுக்கான பரிகாரம் இதோ!

nayuruvi-kuchu

நாயுருவி குச்சி என்று நாட்டு மருந்து கடைகளில் கேட்டுப்பாருங்கள் கிடைக்கும். இது பொதுவாகவே எல்லா இடங்களிலும் வளரக்கூடியது தான். அந்தக் குச்சியில் முள்ளிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், அதை உங்களுக்கு சரியான முறையில் பார்த்து, அடையாளம் கண்டுபிடித்து, எடுக்க முடியாது என்பதால் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து வாங்கிக் கொள்வது நல்லது.

- Advertisement -

அந்த குச்சியை வாங்கி சிறிய துண்டு, இரண்டு இன்ச் அளவு உடைத்து, மஞ்சள் நிறத் துணியில் வைத்து, ஐந்து வண்ண நூலை கொண்டு கட்ட வேண்டும். எப்படி வேண்டும் என்றாலும் உங்கள் சௌகரியத்துக்கு கட்டிக்கொள்ளுங்கள். ஆனால், நிறம் மட்டும் மஞ்சள் நிறத் துணி, நூல் ஐந்து வண்ண நூல். வர்ணம் உங்க இஷ்டம் தான்! ஒரு கருப்பு நிற நூல் மட்டும் கட்டாயம் இருக்க வேண்டும். மற்ற நான்கு நிறங்கள் வேறு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இந்த முடிச்சை கட்டி தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட்டு, ஒரு தீபம் ஏற்றி பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்! உங்களுக்கான மந்திரம் இதோ!

ஓம் ஹரி ஹரி சிவ சிவா
ஹரி ஓம் சிவா!

- Advertisement -

avinashi_sivan-temple

அதன் பின்பாக, இந்த முடிச்சை உங்கள் பாக்கெட்டிலோ அல்லது பார்சிலோனா வைத்துக்கொள்ளலாம். சிறிய அளவில் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 48 நாட்கள் இதை உங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டிருந்தால், கண்ணுக்குத் தெரியாத எந்த தோஷமாக இருந்தாலும் அது நிவர்த்தி ஆகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

skin-problem

சிலபேருக்கெல்லாம், தோஷங்களினால் தோல் பிரச்சினை வருவதற்கு கூட வாய்ப்பு இருக்கும். மருத்துவரிடம் சென்று சிகிச்சை எடுத்துக் கொண்டிருப்பார்கள். ஆனால் சரியாகவே ஆகாது. அப்படியே விட்டுவிடுவார்கள், அந்த தோல் பிரச்சனை நாளடைவில் காணாமல் போய்விடும். இப்படிப்பட்ட பிரச்சனைகள் கூட கண்ணுக்கு தெரியாத தோஷங்களினால் மூலம் ஏற்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

happy-friends

உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்குக் காரண காரியம் தெரியவில்லை ஆனால், பிரச்சனை மட்டும் வந்துகொண்டே இருக்கின்றது என்ற மனக்குழப்பத்தில் நீங்கள், இருப்பவர்களாக இருந்தால், வரக்கூடிய பிரச்சினைகள் எல்லாம், ஏதோ ஒரு தோஷம் தான் காரணமாக இருக்கும் என்ற எண்ணம் உங்களிடத்தில் இருந்தால், இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். எந்த தோஷமும் இல்லை என்றாலும், இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது என்ற ஒரு கருத்தை முன்வைத்து இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
உங்களுடைய செருப்பு தொலைந்து போய் இருக்கிறதா? செருப்பு தொலைந்து போனால் நல்லதா? கெட்டதா?

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English Overview:
Here we have Dosham in Tamil. Dosham Neenga Pariharam. Dosham Tamil. Sarva Dosha Nivarana Mantra

- Advertisement -