சாஸ்திரப்படி வீட்டு பெண்கள் இந்த தவறை செய்தால் குடும்பத்திற்கு ஆகாது. பெண்கள் செய்யக்கூடாத 5 தவறுகள்.

women3
- Advertisement -

என்ன இது! எப்போது பார்த்தாலும் பெண்கள் இதை செய்யக் கூடாது. அதை செய்யக் கூடாது என்று சொல்லிக் கொண்டே இருக்கிறீர்கள். சுதந்திரம் என்பது ஆண்களுக்கு மட்டும் தானா, பெண்களுக்கு கிடையாதா? எதற்காக பெண்களுக்கு மட்டும் இத்தனை கட்டுப்பாடுகள்? பெண்களை இன்னும் அடிமை கோலத்தில் நடத்துகிறீர்களா? என்று நிறைய பேருக்கு கோபம் வரலாம். அப்படி கிடையாது. ஒரு வீட்டினுடைய தூணாக நிற்பது பெண்கள் தான். அந்த பெண்களுக்கும், அந்த குடும்பத்திற்கும் எந்த பாதிப்பும் வந்து விடக்கூடாது என்பதற்காகத் தான் நம்முடைய முன்னோர்கள் சில விஷயங்களை சாஸ்திர சம்பிரதாயத்தில் ஒளித்து வைத்து நமக்கு சொல்லிக் கொடுத்து இருக்கிறார்கள்.

women1

யாரையும் யாரும் அடிமைப்படுத்த வேண்டிய நோக்கத்தோடு சம்பிரதாயங்களைசொல்லி கொடுக்கவில்லை. காலப்போக்கில் நாம் தான் எல்லாவற்றையும் தவறாக புரிந்து இருக்கின்றோம். இதற்காக ஒரு சிறிய எடுத்துக்காட்டு. பெண்கள் எப்போதும் கால் மேல் கால் போட்டு உட்காரக்கூடாது என்று சொல்லுவார்கள். அது என்ன மரியாதை கெட்ட தனம் என்று கூட சிலர் கேட்பார்கள்.

- Advertisement -

இதற்கு என்ன காரணம் தெரியுமா. பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரும்போது கால் பகுதியிலும், அடிவயிற்றுப் பகுதியிலும் ரத்த ஓட்டம் சீராக இருக்காது. தொடர்ந்து இந்தப் பழக்கத்தை பெண்கள் செய்தால், அதாவது தினம் தினம் நீண்ட நேரம் கால் மேல் கால் போட்டு அமர்ந்தால், கால் பகுதியில் வெரிகோஸ் வெயின் என்று சொல்லப்படும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை வருவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

women1

இதோடு மட்டுமல்லாமல் கர்ப்பப்பை சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளதாக அறிவியல் ரீதியாக மருத்துவர்களால் சொல்லப்பட்டுள்ளது. கால் மேல் கால் போட்டால் மட்டும் தான் இந்த பிரச்சனை வருகிறதா? என்றால் நிச்சயம் இல்லை. மிகவும் இறுக்கமான ஆடைகளை பெண்கள் அணிந்தாலும் இப்படிப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இப்போது புரிகிறதா? நம்முடைய முன்னோர்கள் நமக்காக சொல்லி வைத்திருக்கக்கூடிய கட்டுப்பாடுகளில் நமக்கு நன்மைதான் கிடைக்கும் என்று. இப்படிப்பட்ட இன்னும் ஒரு சில விஷயங்களை தான் இன்றைக்கு நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

- Advertisement -

பெண்கள் தங்களுடைய கால் கட்டை விரலை கொண்டு நிலத்தை அழுத்தம் கொடுக்கக்கூடாது. கட்டை விரலில் கோலம் போடுவது என்று சொல்வார்கள் அல்லவா அதுபோல செய்யக்கூடாது.

women1

பெண்கள் நிலை வாசலுக்கு நேராக படுக்க கூடாது. தண்ணீரில் பெண்கள் தங்களுடைய நிழலை பார்க்கக்கூடாது. தலைக்கு குளிப்பதற்கு முன்பு தலையில் எண்ணெய் வைத்து இருந்தால், அந்த முடியை கொண்டை போட்டோ அல்லது ஒரு ரப்பர் பேண்ட் போட்டு கட்டிக்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்த தலை முடியுடன் தலைவிரி கோலத்தோடு பெண்கள் இருக்கக்கூடாது.

hair1

தலைக்கு குளிப்பதற்காக தலையில் எண்ணெய் வைத்து விட்டு, அப்படி யாரையும் வழி அனுப்பி வைக்கக்கூடாது.

உங்கள் வீட்டில் யாரேனும் சாப்பிட்டுக் கொண்டிருந்தால் அந்த சமயத்தில் விளக்கை போய் அணைக்கக் கூடாது. உங்கள் வீட்டில் இருப்பவர்கள் வெளியூருக்கு சென்று இருக்கும் சமயத்தில் பெண்கள் தலைக்கு எண்ணெய் வைத்து தலை முழுக கூடாது.

- Advertisement -