செய்வினையை செயலிழக்க செய்யும் பரிகாரம்

sivan2
- Advertisement -

வாழ்க்கையில் அடுத்தடுத்த சோதனைகள் வந்து கொண்டே இருந்தால் நமக்கு வரக்கூடிய முதல் சந்தேகம், நமக்கு யாரேனும் செய்வினை வைத்திருப்பார்களோ, நமக்கு யாராவது மருந்து வைத்திருக்கிறார்களோ, எதிரிகள் ஏதாவது நமக்கு தெரியாமல் சூனியம் வைத்து விட்டார்களோ என்று பயப்படுவோம். அதிலும் குடும்பத்தில் வழக்கத்துக்கு மாறாக ஒரு சம்பவம் நடந்து விட்டால் போதும்.

பயம் நம்மை நிரந்தரமாக தொற்றிக் கொள்ளும். இந்த பயத்திலிருந்து வெளிவர நாம் பல தேடல்களை தேடி ஓடுவோம். மந்திரவாதிகள், சாமியார், ஜோதிடம் என்று பல வகையில் பிரச்சனையை கண்டுபிடிக்க முயற்சி செய்வோம். உங்களுக்கு இருக்கும் எந்த பிரச்சினையாக இருந்தாலும் சரி, அதை சரி செய்ய எம்பெருமானின் மேல் பாரத்தை போட்டு இந்த ஒரு பரிகாரத்தை மட்டும் செய்யுங்கள் போதும்.

- Advertisement -

செய்வினை பிரச்சனையில் இருந்து தப்பிக்க பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு ஒரு ருத்ராட்சம் தேவை. சிவனடியார்களிடம் கேட்டாலே இந்த ருத்ராட்சத்தை கொடுப்பார்கள். அதை வாங்கி ஒரு நூலில் கோர்த்துக் கொள்ளுங்கள். சிவன் கோவிலுக்கு செல்லுங்கள். அங்கு இந்த ருத்ராட்சத்தை சிவன் பாதங்களில் வைக்கலாம். அப்படி இல்லை என்றால் நால்வர் பெருமான் இருப்பார்கள்.

அவர்களுடைய கழுத்தில் இந்த ருத்ராட்சத்தை போட்டு வைக்கலாம். ஒரு நாள் இரவு அந்த ருத்ராட்சம் கோவிலிலேயே இருக்கட்டும். பிறகு அந்த ருத்ராட்சத்தை வாங்கி யாருக்கு பிரச்சனையோ அவர்களுடைய கழுத்தில் கட்டிக் கொள்ளுங்கள். சிவசிவ மந்திரத்தை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். எந்த தீவினையும் எந்த செய்வினையும் உங்களை அண்டாது.

- Advertisement -

உங்கள் உடம்பில் ஏதாவது கெட்ட சக்தி இருந்தால் கூட அலறி அடித்து வெளியே ஓடிவிடும். ருத்ராட்சத்தை போட்டுக்கொண்டு கணவன் மனைவி இல்லறம் நடத்தலாமா, அசைவம் சாப்பிடலாமா, தீட்டு வீட்டுக்கு செல்லலாமா, என்ற எந்த சந்தேகமும் உங்களுக்கு வேண்டாம். சிவனின் மேல் பாரத்தை போட்டு இந்த ருத்ராட்சத்தை போட்டுக்கோங்க எல்லாம் நல்லதாகவே நடக்கும்.

அசைவம் சாப்பிடுவதாலோ, இறப்பு வீட்டிற்கு போவதாலோ, அல்லது கணவன் மனைவி இல்லற வாழ்க்கையாலோ ருத்ராட்சத்திற்கு எந்த தீட்டும் படாது. அந்த திருநீரும் ருத்ராட்சமும் சிவனும் உங்களுக்கு பாதுகாப்பு கவசமாக இருப்பார்கள் என்பது மட்டும்தான் நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: கேது பகவான் தாக்கம் குறைய ஜீவசமாதி வழிபாடு.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவன் கோவிலுக்கு செல்லுங்கள் அந்த கோவிலில் சிறிது நேரம் அமர்ந்து சிவசிவ மந்திரத்தை சொல்லி தியானம் செய்யுங்கள் எல்லாம் கெட்டதும் ஓடிப்போய் விடும். ஆன்மீகம் சார்ந்த இந்த எளிமையான பரிகாரமே போதும் வாழ்க்கையில் நீங்கள் எந்த துன்பத்திலிருந்தும் தப்பித்துக் கொள்ளலாம். சிவசிவ மந்திரம், திருநீறு, ருத்ராட்சம் உங்களுக்கு பாதுகாப்பு கவசம். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -