பல வருடங்களாக தீராத வியாதியால் படுத்த படுக்கையில் இருப்பவர்கள் நோயிலின் பிடியில் இருந்து விரைவில் மீண்டு வர செய்ய வேண்டிய எளிய பரிகாரம்.

bhairavar oil sad man
- Advertisement -

மனித வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனை இருக்கத் தான் செய்யும் ஆனால் ஒரு சிலருக்கு எல்லாமே பிரச்சினையாக இருக்கும். ஒரு புறம் வியாதியால் அவதிப்படுவார்கள். இதானால் வீட்டில் எப்பொழுதும் பிரச்சனையாக இருக்கும் குடும்பத்திலும் நிம்மதியே இருக்காது. இவையெல்லாம் சரியாக ஒரு எளிய பரிகார முறையை தான் இந்த ஆன்மீகம் குறித்து பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

தீராத வியாதியிலிருந்து விடுபட பரிகாரம்
ஒரு சிலருக்கு உடம்பில் எப்போதும் ஏதாவது வியாதி இருந்து கொண்டே இருக்கும். ஒன்று போனால் ஒன்று வந்து கொண்டே இருக்கும். இந்த வியாதிகளுக்கு எத்தனை மருந்து மாத்திரை எடுத்துக் கொண்டாலும் சரியாகாமல் தொடர்ந்து கொண்டே செல்லும். இப்படியானவர்கள் இந்த கடுகு எண்ணெய் பரிகாரத்தை செய்யும் போது வியாதியின் தாக்கத்திலிருந்து விடுபடலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதை குறித்து இப்போது தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை யார் வியாதியால் அவதிப்படுகிறார்களே செய்து கொள்ள முடிந்தால் நல்லது. அவர்கள் செய்து கொள்ள முடியாத சூழ்நிலையில் இருக்கும் பட்சத்தில் பிறர் செய்யலாம். இந்த பரிகாரத்தை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம்.

நோய்வாய்பட்டவர்கள் முதலில் கிழக்கு முகமாக அமர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கையில் ஒரு சிறிய கிண்ணத்தில் கொஞ்சமாக கடுகு எண்ணெயை வைத்துக் கொண்டு ஓம் பைரவாய நமக என்று இந்த மந்திரத்தை 108 முறை சொல்ல வேண்டும். அதன் பிறகு கையில் இருக்கும் கடுகு எண்ணெயை உங்கள் தலை முதல் பாதம் வரை ஏழு முறை கிளாக் வைசில் சுற்றிய பிறகு வெளியில் சென்று கால் படாத இடத்தில் ஊற்றி விடுங்கள்.

- Advertisement -

இதை தற்காலிகமாக ஏதேனும் சிறு சிறு வியாதிகளால் துன்பப்படுபவர்கள். இதை ஒரு முறை மட்டும் செய்தால் போதும். ஒரு வேளை நாட்பட்ட வியாதி சரியாகாமல் எந்த மருந்து மாத்திரை எடுத்தும் பயனளிக்காமல் இருப்பவர்கள் இதே போன்று 7 நாட்கள் தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும்.

இந்த பரிகாரம் நோய் வாய் பட்டவர் மட்டுமின்றி வீட்டில் கணவன் மனைவிக்குள் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டு கொண்டே இருந்தால் அவர்களும் இதே சுற்றுப் போடும் முறையை பயன்படுத்தினால் நிச்சயம் அவர்களுக்குள் இருக்கும் கருத்து வேறுபாடு நீங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: வற்றாத செல்வத்தை தரும் ஒரே ஒரு சுருக்குப்பை. இந்த பை உங்கள் வீட்டில் இருந்தால், ஊற்றெடுக்கும் நீர் போல, பணம் சுரந்து கொண்டே இருக்கும்.

நம் வாழ்வில் தொடரும் எந்த ஒரு பிரச்சனைக்கும் நிச்சயம் ஒரு தீர்வு இருக்கும். அதே போலத் தான் ஆன்மீகத்திலும் நம் வாழ்வில் நடக்கும் ஒவ்வொரு பிரச்சனைக்கும் ஒவ்வொரு எளிய பரிகார முறைகளை நமக்கு தந்திருக்கிறது. அந்த வகையில் நோயின் தாக்குதிலிருந்து வெளி வர இந்த எளிய பரிகாரத்தை செய்து பலன் அடையலாம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -