இன்று மாலைக்குள் இந்த இரண்டு தீபத்தை ஏற்றி விட்டால், மூன்று கோடி ஏகாதசிகள் வணங்கிய பலனை பெறுவதோடு, வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் என்பது வந்தே தீரும்.

- Advertisement -

மார்கழி மாதம் முழுவதுமே பெருமாளுக்கு உரிய மாதமாக கருதப்படுகிறது. இந்த மாதத்தில் வரும் வளர்பிறை பதினோராம் நாள் வைகுண்ட ஏகாதசியாக நாம் வணங்கி வருகிறோம். இந்த நாளில் விரதம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் விழித்திருந்து பெருமாளை வணங்கி வழிபடுவது நம் வழக்கம். இந்த விரதத்தை மேற் கொண்டால் மறு பிறவி என்பதே இல்லாமல், நம் பாவங்கள் அனைத்தும் நீங்கி சொர்க்கத்தை சென்றடைவோம். அது மட்டுமின்றி தீராத நோய்கள் தீருவதோடு, சகல செல்வங்களும் கிடைக்கும்.

இத்தகைய பலன்களை கொண்ட இந்த வைகுண்ட ஏகாதசி விரத நாளில் நாம் ஏற்றும் இந்த தீபமானது, மூன்று கோடி ஏகாதசிகள் பெருமாளை வணங்கிய பலனை தருவதோடு, செல்வ வளத்தையும் வாரி வழங்கும் என்று சொல்லப்படுகிறது. அது என்ன தீபம் எப்படி ஏற்ற வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

செல்வம் பெருக ஏகாதசி வழிபாடு
உங்கள் வீட்டில் பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பு இந்த தீபத்தை ஏற்ற வேண்டும். பெருமாள் படம் இல்லாதவர்கள் லட்சுமி தாயார் படத்திற்கு முன்பாகவும் ஏற்றலாம். இந்த தீபம் ஏற்ற இரண்டு அகல் விளக்கு எடுத்துக் கொள்ளுங்கள். அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி ஒவ்வொரு விளக்கிலும் இரண்டு பஞ்சுத் திரிகளை போட்டு, அத்துடன் ஒரு கிராம்பு, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் மூன்றையும் ஒன்றாக இடித்து பவுடராக்கி, அதை இந்த தேங்காய் எண்ணெயில் போட்டுக் கொள்ளுங்கள். இந்த விளக்கின் மீது துளசி இலையை வைத்து விடுங்கள்.

இந்த தீபம் ஏற்றும் போது நெய்வேத்தியமாக கொஞ்சம் அவல் எடுத்து அதில் வெல்லம் கலந்து அதையும் இந்த தீபத்தின் முன் வைத்து விடுங்கள். இவையெல்லாம் தயார் செய்து வைத்த பிறகு இந்த இரண்டு அகல் விளக்கையும் ஏற்றி உங்கள் குறைகள் யாவும் நீங்க வேண்டும் என மனதார வேண்டிக் கொள்ளுங்கள். இந்த ஒரு நாளில் ஏற்றும் இந்த இரண்டு தீபமானது, நீங்கள் மூன்று கோடி ஏகாதசிகள் பெருமாளை வணங்கிய பலனை கொடுக்கும்.

- Advertisement -

இதே தீபத்தை 43 நாட்கள் தொடர்ந்து ஏற்றி வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் பணக்கஷ்டம் நீங்கி வீட்டில் லட்சுமி கடாட்சம் என்பது வந்தே தீரும் என்று சொல்லப்படுகிறது. லட்சுமி தேவி ஆனாவர் பெருமாளின் மார்பில் குடியிருப்பவர். இந்த தீபத்தை பெருமாளுக்கு ஏற்றி வழிபடும் போது பெருமாளின் அனுகிரகத்தோடு லட்சுமி தாயாரின் அருளும் உங்களுக்கு கட்டாயம் கிடைத்தே தீரும். இந்த தீபம் ஏற்றி வணங்குபவர்கள் பெருமாளின் ஆசியை பரிபூரணமாக பெற்று கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பீரோவில் இந்த 1 பொருள் மட்டும் இருந்தால், உங்கள் வீட்டில் பணம் காசு இல்லை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது. கட்டு கட்டாக பணம் பீரோவில் கொட்டும்.

இதே தீபத்தை பண வரவிற்காக ஏற்ற வேண்டும் என்ற நினைப்பவர்கள் 43 நாட்கள் இதே போல் தினமும் இரண்டு தீபம் ஏற்றி அவல் நெய்வேத்தியம் படைத்தது, துளசி இலையை வைத்து வணங்கி வாருங்கள். நிச்சயம் உங்கள் வாழ்வில் உள்ள கஷ்டங்கள் எல்லாமே நீங்கி பண வரவு அதிகரித்து, நல்லதொரு செழிப்பான வாழ்வை வாழ இந்த தீபம் வழி காட்டும்.

- Advertisement -