செவ்வாய்க்கிழமையில் இந்த அற்புதமான பரிகாரத்தை செய்தால் கடன் முழுவதுமாக அடைவதுடன் பணம் தாராளமாக புழங்கி உங்க பேங்க் பேலன்சும் பல மடங்கு அதிகரிக்கும்.

murugan cash deposit
- Advertisement -

ஒரு மனிதன் நல்ல செல்வ செழிப்புடன் வாழ்கிறான் என்பதை இன்றைய காலக்கட்டத்தில் மூன்று விஷயங்களை வைத்து தீர்மானிக்கப்படுகிறது. ஒன்று அவர்கள் வாழும் வீடு, நிலம், அடுத்து அவர்களுடைய வேலை மூன்றாவதாக வங்கி இருப்பு. இந்த வகையில் மற்றவை எல்லாம் பிறருக்கு தெரியும் படியாக இருந்தாலும் இந்த வங்கி இருப்பில் இருக்கும் சேமிப்பு பெரும்பாலும் யாருக்கும் தெரியாது. ஒருவருடைய வங்கிக் கணக்கில் இருப்பு அதிகரித்து இருக்குமேயானால் அதுவே அவர்களுக்கு பெரிய ஒரு தன்னம்பிக்கை தரும். அப்படி அதிகரிப்பதற்கான ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் இப்பொழுது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

கடன் அடைந்து பணம் சேர பரிகாரம்
இந்த பரிகாரத்தை நாம் செவ்வாய்க்கிழமை அன்று தான் தொடங்க வேண்டும். ஏனெனில் முருகருக்கு விஷமான இந்த நாளில் கடன் அடையவும், பணம் சேரவும் செவ்வாய்க்கிழமை சிறந்த நாளாக சொல்லப்படுகிறது. நம்மில் பெரும்பாலானோர் செவ்வாய்க்கிழமை அதிக அளவில் பயன்படுத்துவது கிடையாது ஆனால் செவ்வாய்க்கிழமை என்பது வருவாய் கொடுக்கக் கூடிய ஒரு நாளாக சொல்லப்படுகிறது. இந்த நாளில் தொடங்கும் அனைத்தும் நல்லதாகவே முடியும் என்றும் சொல்லப்பட்டிருக்கிறது.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நாம் முதலில் செய்ய வேண்டியது தீபம் எற்றும் வழிபாடு. இந்த தீபத்தை நாம் காலையில் ஆறு மணி முதல் ஏழு அல்லது இரவு எட்டு மணி முதல் 9 வரையிலான இந்த இரண்டு நேரங்களிலும் ஏற்ற வேண்டும். இதற்கு ஆறு வெற்றிலை எடுத்துக் கொள்ளுங்கள். அதே போல் ஆறு அகல் விளக்கை இந்த வெற்றிலை மேல் வைத்து நெய் ஊற்றி ஏற்ற வேண்டும்.

அடுத்து கடைப்பிடிக்க வேண்டியது வங்கி கணக்கை தொடங்குவது. அதாவது ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு வங்கியானது உயர்வை கொடுக்கும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. இதை நீங்கள் தெரிந்து கொள்ள உங்களுடைய ஜாதகத்தை இந்த விஷயத்தில் நன்கு தேர்ந்த ஒருவரை இடம் காட்டி உங்களுடைய ஜாதகத்திற்கு எந்த வங்கியில் கணக்கு ஆரம்பிக்க வேண்டும் என்பதை முதலில் தெரிந்து கொள்ளுங்கள். இதை படிக்கும் பொழுது இப்படி எல்லாம் கூட இருக்கிறதா என்று உங்களுக்கு தோன்றலாம். இது பலரும் பின்பற்றும் முறை தான்

- Advertisement -

அடுத்து இந்த வங்கி கணக்கில் நாம் பணம் போட்டு துவங்கும் நாளானதும் செவ்வாய்க்கிழமையாகவே இருக்க வேண்டும் .அதுவும் மதியம் 12ல் இருந்து 1:30 மணிக்குள்ளான இந்த நேரத்தில் துவங்க வேண்டும். இப்படி துவங்கிய வங்கி கணக்கில் யில் இதே போல் தொடர்ந்து செவ்வாய்க்கிழமையில் இந்த நேரத்தில் நீங்கள் பணத்தை செலுத்தி வந்தால் அந்தப் பணம் பல மடங்கு சேர கூடிய வாய்ப்பு உண்டு என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் இருக்கும் தங்க நகைகள் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும், மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். கெட்ட நேரங்கள் அனைத்தும் நல்ல நேரங்களாக மாறிவிடும்.

செவ்வாய்க்கிழமையில் நீங்கள் ஏற்றும் இந்த தீபத்துடன் இந்த முறையில் வங்கி கணக்கையும் தொடங்கி பணத்தை போட்டு வரும் போது கடன் அடைந்து பணம் கையில் தாராளமாக பெருகி வங்கியில் இருப்பும் அதிகரிப்பதற்கான பரிகாரமாக இது அமையும். இந்த ஒரு எளிய பரிகாரத்தின் மூலம் இத்தனை விஷயங்கள் நமக்கு கிடைப்பது பெரிய ஆச்சரியம் தான். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -