வீட்டில் பொன் பொருள் கொழித்து செல்வம் நிலையாக நிலைக்க சமையலறையில் இருக்கும் இந்த பொருளை உடனே மாற்றி வைத்து விடுங்கள். இதனால் நம் வீட்டிற்கு வரக் கூடிய ஐஸ்வர்யம் தடைபடும்.

- Advertisement -

வீட்டில் செல்வ கடாட்சம் பெருகுவதும் தரித்திரம் சூழ்வதும், வீட்டில் இருப்பவர்களின் கையில் தான் உள்ளது. ஒரு சில விஷயங்களை சரிவர கடைபிடிக்கும் போது நம்முடைய வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். அதன்படி வாழ்க்கையில் நல்ல செல்வ நிலையான வாழ்வை வாழ என்னென்ன மாதிரியான விஷயங்களை நாம் கடைபிடிக்க வேண்டும் என சாஸ்திரம் சிலவற்றை வகுத்துக் கொடுத்திருக்கிறது. அதைப்பற்றியதொரு தகவலை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

வீட்டில் செல்வம் நிலைத்திருக்க செய்ய வேண்டியது
முதலில் பிரம்ம முகூர்த்த வேளையில் விளக்கு ஏற்றுவதை வழக்கமாக கொள்ள வேண்டும். மற்ற நேரங்களை காட்டிலும் இந்த நேரத்தில் நாம் செய்யும் ஒவ்வொரு பூஜையும் பல வகையில் பலனை தரக்கூடியது. அதை செய்ய முடியாதவர்கள் அந்தந்த நாளும் கூறிய விசேஷமான ஹேரையில் பூஜை செய்வது மிகவும் சிறப்பு. ஹேரையை சரியாக பயன்படுத்த தெரிந்தவன் வாழ்வில் சோறை போக மாட்டான் என்ற பழமொழியே உண்டு.

- Advertisement -

பூஜை அறை எப்போதும் சுத்தமாகவும், வாசனையாகவும் இருக்க வேண்டும். நாம் கடவுளுக்கு வாசனை மிக்க மலர்களாக சாற்ற வேண்டும். அத்துடன் ஒற்றை இதழ் செம்பருத்தி மலரை வைக்கும் பொழுது தன ஆகர்ஷணம் அதிகமாக இருக்கும்.  பூஜை அறையில் எந்த காரணத்திற்காகவும் சில்வர் பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பூஜை அறையில் வைக்கும் பாத்திரங்கள் செம்பு, பித்தளை, வெள்ளி இவற்றில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்துவது சிறப்பு.

தினமும் எந்த நெய்வேத்தியம் செய்தாலும் செய்யவில்லை என்றாலும் ஒரு செம்பு பாத்திரத்தில் நிறைவாக தண்ணீர் வைத்து அதில் துளசி, பச்சைக் கற்பூரம், ஏலக்காய் சேர்த்து தீர்த்தமாக வைத்து அதை தினந்தோறும் உங்களுடைய வேண்டுதலை சொன்ன பிறகு அருந்தி வர வேண்டுதல்கள் சீக்கிரம் நிறைவேறுவதற்கான யோகம் கிடைக்கும். அது மட்டும் இன்றி இந்த தண்ணீர் நம்முடைய தேக ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

- Advertisement -

நம் வீட்டு சமையல் அறையில் எப்பொழுதும் சல்லடை இருக்க வேண்டும். அரிசி சலிக்க கொஞ்சம் பெரிய பெரிய துளைகள் இட்ட சல்லடை இருக்கும். இந்த சல்லடை முடிந்த வரை அது பித்தளையில் வாங்கி வைக்க பாருங்கள். அதே போல் அரிசி பானையை சமையலறையில் வைக்க கூடாது என்று சொல்லப்படுகிறது. அரிசி சந்திரனின் அம்சமாக பார்க்கப்படுகிறது இது சமையலறையில் வைக்கும் போது நமக்கு அந்தளவுக்கு ஐஸ்வர்யத்தை தராது என்றும் சொல்லப்படுகிறது.

அதே போல் இந்த அரிசி பானையில் சில்வர் டம்ளர், பிளாஸ்டிக் கப்பு போன்றவை பயன்படுத்தாமல், ஆழாக்கை பயன்படுத்துவது சிறந்தது. அதை போல் ஆழாக்கில் அளந்து எடுக்கும் போது முடிந்த வரையில் நிறைவாக அளந்து எடுத்து போடுங்கள் இது எல்லாம் நம் குடும்பம் மேலும் மேலும் ஐஸ்வர்யாத்தை பெருக்க உதவி செய்யும்.

இதையும் படிக்கலாமே: உங்க வீட்டில் மாமரம் இப்படி இருந்தால் கஷ்டம் தான் வரும் தெரியுமா? மாமரம் வீட்டில் இருக்கக் கூடாத இடம் என்ன?

நம் வீட்டில் செய்யும் இந்த சின்ன சின்ன மாற்றங்கள் நம்முடைய வாழ்க்கையில் பெரிய பெரிய விஷயங்களை சாதிக்க உதவும். இதில் கூறப்பட்ட தகவல் அனைத்தும் நம் முன்னோர்களால் பின்பற்றப்பட்டது தான். இந்த மாறுதல்கள் எல்லாம் ஏற்றுக் கொள்ளக் கூடிய மாறுதல்கள் தான் இதனால் எந்த வித பாதிப்பும் யாருக்கும் கிடையாது. இதை சரிவர செய்து நம்முடைய குடும்பத்தை செல்வ நிலைக்கு கொண்டு செல்ல முயல்வோம் என்ற கருத்தோடு பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.

- Advertisement -