செலவை குறைக்க அஷ்டமி பரிகாரம்

bairavar1
- Advertisement -

பணத்தை சம்பாதிப்பது தான் பெரிய கஷ்டம் என்று நாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம். ஆனால்,  சம்பாதித்ததை விட கைக்கு வந்த பணத்தை எப்படி சேமிக்க வேண்டும் என்பதில்தான் சூட்சமமே அடங்கியிருக்கிறது. வரக்கூடிய வருமானம் எல்லாம் தண்ணீர் போல செலவாகிக் கொண்டே இருந்தால், எப்படி சேமிப்பது. எப்படி பணக்காரர் ஆவது.

ஆகவே முதலில் நாம் செய்ய வேண்டியது வீண் விரைய செலவை குறைக்கணும். அதற்கு என்னென்ன வழிமுறைகள் எல்லாம் இருக்கிறதோ அதை எல்லாம் பின்பற்றுங்கள். அனாவசியமாக, வருமானத்திற்கு அதிகமாக, கடன் வாங்கி ஆடம்பரப் பொருட்களை வாங்கக்கூடாது. அவசியமான பொருட்களை தேவைக்கு ஏற்ப வாங்கி பலன் பெறனும்.

- Advertisement -

இதோடு சேர்த்து இன்று வந்திருக்கக்கூடிய வளர்பிறை அஷ்டமி அன்று பைரவரை நினைத்து இந்த தாந்திரீக பரிகாரத்தையும் செய்யுங்கள். இது தாந்த்ரீக பரிகாரமாக இருந்தாலும், பைரவரை நினைத்து செய்வதால் ஆன்மீகம் சார்ந்த பரிகாரம் தான். ஆகவே யாரும் பயப்படாமல் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

செலவை குறைக்க பரிகாரம்

தண்ணீர் போல பணம் செலவாகுது என்ற பேச்சு வழக்கு நம்முடைய முன்னோர்களித்தில் உள்ளது. ஆகவே தண்ணீர் போல செலவாகும் பணத்தை, தண்ணீரை வைத்து தடுத்து நிறுத்தப் போகின்றோம். இதற்கு பின்னாடி ஒரு ஜோதிட சூட்சமும் மறைந்திருக்கிறது. அதை எல்லாம் விரிவாக நாம் தெரிந்து கொள்ள வேண்டாம். பரிகாரத்தை மட்டும் பார்ப்போம். இன்று ஒரு உருளியில் சுத்தமான நல்ல தண்ணீரை ஊற்றி, அதில் இரண்டு துளசி இலைகளை முதலில் போடுங்கள்.

- Advertisement -

தண்ணீரில் ஏதாவது தோஷம் இருந்தால் அது விலகி விடும். கட்டாத செவ்வரளி பூக்களை அந்த தண்ணீரில் மிதக்க விட வேண்டும். இப்படி அந்த தண்ணீரில் செவ்வரளி பூக்களை போடும்போது ‘ஓம் பைரவாய போற்றி’ என்ற நாமத்தை சொல்லுங்கள். இதை அப்படியே பூஜை அறைக்கு பக்கத்தில் வையுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி பைரவரை மனதார வேண்டிக்கொண்டு செலவு குறையனும். வருமானம் பெருகனும். சேமிப்பு இரட்டிப்பாகனும்.

கடன் பிரச்சனையிலிருந்து வெளிவர வேண்டும் என்று வேண்டுதலை வையுங்கள். தண்ணீர் போல செலவாகும் பணத்தை இந்த செவ்வரளி பூ அப்படியே தடுத்து நிறுத்தி விடும். உங்களால் முடிந்தால் இந்த தண்ணீரில் ஒரு சொட்டு புனுகு கரைத்து விடலாம். செவ்வரளி பூவும் புனுகு இது இரண்டும் பைரவருக்கு ரொம்ப ரொம்ப உகந்தது.

- Advertisement -

இந்த பரிகாரத்தை இன்று இரவு 9 மணி வரை எந்த நேரத்தில் வேண்டுமென்றாலும் செய்யலாம். உருளி இல்லை என்றால் அகலமான ஒரு சில்வர் கிண்ணத்தில் தண்ணீரை ஊற்றி செவ்வரளி பூ போட்டு பூஜை அறையில் வைத்து விளக்கு ஏற்றி பைரவரை வணங்கிக் கொள்ளுங்கள். வேண்டுதல் வையுங்கள். நிச்சயம் உங்களுடைய வேண்டுதல் பலிக்கும்.

இதையும் படிக்கலாமே: தீராத நோய் தீரவும் வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமி வழிபாடு

தண்ணீரில் போட புனுகு இல்லை. துளசி இல்லை என்றாலும் பரவாயில்லை. வெறும் செவ்வரளி பூவை மட்டும் தண்ணீரில் போட்டு இந்த வழிபாடு செய்யலாம். இந்த புதுமையான எளிமையான பரிகாரம் எல்லோருக்கும் வளமான வாழ்வை கொடுக்கும் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -