தீராத நோய் தீரவும் வறுமை நீங்க வளர்பிறை அஷ்டமி வழிபாடு

bhairavar dheepam
- Advertisement -

சிவனின் மறு உருவம் தான் இந்த பைரவர். ஆகையால் தான் அனைத்து சிவாலயத்திலும் பைரவர் வீட்டிருப்பார். அங்கு அவருக்கென தனியாக அபிஷேகங்களும் ஆராதனைகளும் கட்டாயமாக நடைபெறும். அத்தகைய சக்தி வாய்ந்த பைரவரை நாம் வணங்க உகந்த நாள் அஷ்டமி இந்த. அஷ்டமி ஆனது மாதத்தில் இரண்டு முறை வரும் ஒன்று வளர்பிறை அஷ்டமி அடுத்து தேய்பிறை அஷ்டமி.

கடன் தொல்லை தீரவும் வாழ்க்கையில் உள்ள துன்பங்கள் தீரவும் தேய்பிறை அஷ்டமியில் வழிபாடு செய்வது உகந்தது. அதே போல செல்வ வளத்தை பெருக்கவும் பணவரவு அதிகரித்துக் கொள்ளவும் வளர்பிறை அஷ்டமி உகந்தது. நாளைய தினம் தை மாதம் வரக்கூடிய இந்த அஷ்டமி நாளில் பைரவரை இப்படி வழிபாடு செய்வதன் மூலம் அனைத்து நலன்களையும் பெறலாம். அது என்ன வழிபாடு எப்படி வணங்க வேண்டும் என்பது ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

சகல துன்பங்களும் தீர வளர்பிறை அஷ்டமி வழிபாடு

நம்முடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து இன்னல்களையும் தீர்க்கும் அதிசக்தி வாய்ந்த தெய்வம் இந்த பைரவர். ஒவ்வொரு பிரச்சனைக்கும் பைரவரை வணங்கினால் தீர்வு நிச்சயம். பைரவருக்கு செவ்வரளி பூக்களால் அர்ச்சனை செய்து வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும்.

அதே போல் பைரவருக்கு ஞாயிற்றுக்கிழமை அல்லது ராகு கால பூஜையில் கலந்து கொண்டு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்யும் போது எதிரி தொல்லை, மரண பயம் நீங்கி நிம்மதியாக வாழலாம். அது மட்டும்மின்றி பைரவருக்கு மஞ்சள் மற்றும் சந்தனத்தால் அபிஷேகம் செய்யும் போது தீராத நோய் தீரும்.

- Advertisement -

இன்று தை மாத வளர்பிறை அஷ்டமி இன்றைய தினத்தில் பைரவரை நினைத்து வீட்டில் நாம் செய்யும் இந்த ஒரு எளிய பூஜை நம்முடைய வாழ்க்கையில் உள்ள அனைத்து இன்னல்களையும் தீர்க்கும் இன்றைய தினம் பைரவர் வழிபாடு செய்ய நினைப்பவர்கள் கட்டாயமாக அசைவத்தை தவிர்த்து விட வேண்டும்.

பைரவரை வழிபாடு மாலை நேரத்தில் செய்வது சிறப்பு வாய்ந்ததாக இருக்கும். ஆகையால் மாலை 6 மணிக்கு பூஜை அறையில் பைரவரை நினைத்து ஒரு தீபத்தை ஏற்று வைத்து விடுங்கள். இந்த தீபமானது கிழக்கு முகமாக எரிய வேண்டும். அடுத்து ஒரு சிறிய கண்ணாடி பவுலில் சுத்தமான தண்ணீர் ஊற்றி அதில் ஒரே ஒரு வில்வ இலையை போட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்த வில்வ இலையை போடும் போது பைரவருக்கு அபிஷேகம் செய்வதாக மனதுக்குள் நினைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு நீங்கள் அந்த தீபத்திற்கு முன் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து ஓம் பைரவாய நமக என்ற நாமத்தை குறைந்தது 27 முறை சொல்லுங்கள். அதிகபட்சமாக உங்களால் எத்தனை முறை சொல்லுங்கள்.

ஒவ்வொரு முறை இந்த மந்திரத்தை சொல்லும் போதும் வில்வத்தை நீங்கள் பைரவருக்கு அர்ச்சனை செய்வது போல மனதிற்கு நினைக்க வேண்டும். இந்த வேண்டுதலின் போது உங்களுடைய மன குறைகளையும் பைரவரிடம் சொல்லுங்கள். இந்த வழிபாடுகள் அனைத்தையும் முழு நம்பிக்கையுடனும், பைரவர் மீது முழு பக்தியுடன் செய்ய வேண்டியது அவசியம்.

அபிஷேகம் செய்த இந்த தண்ணீரை வீட்டில் முழுவதும் தெளிக்கும் போது வீட்டில் உள்ள எதிர்மறை சக்திகள் நீங்கி நேர்மறை ஆற்றல் உருவாகும். கடன் தொல்லை நீங்கி பணவரவு அதிகரிக்கும். தீராத வியாதியினால் துன்பப்படுபவர்களுக்கு இந்த நீரை அருந்த கொடுத்தால் வியாதியின் தாக்கம் குறையும்.

இதையும் படிக்கலாமே: கோடீஸ்வரனாக தாந்த்ரீக பரிகாரம்

நம்முடைய அனைத்து இன்னல்களையும் தீர்க்கக் கூடிய இந்த ஒரு எளிய வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள். இந்த ஒரு எளிய வழிபாட்டு முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையுங்கள்.

- Advertisement -