வீண் விரைய செலவுகளை குறைக்கும் பரிகாரம்

bairavar
- Advertisement -

நிறைய பணம் சம்பாதிக்கிறோம். வருமானம் இருக்கிறது. ஆனால், வந்த பணம் வீட்டில் நிலையாக தங்குவதில்லை. பணத்தை சேமிக்க முடியவில்லை. பணம் வரும் வழியும் தெரியவில்லை, பணம் வீட்டை விட்டு வெளியே செல்லும் வழியும் தெரியவில்லை. செலவு செலவு செலவு. அதுவும் எல்லாம் வீண் விரைய செலவுகள். தேவையில்லாத மருத்துவ செலவுகள்.

தேவையில்லாமல் வீட்டில் இருக்கும் பொருட்கள் பழுதாகிறது. தேவையில்லாமல் பணத்தை வாரி இறைக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. இந்த பணத்தை சேமிக்க என்ன தான் வழி. இருக்குங்க, இந்த வீண் விரைய செலவுகளை உடனடியாக குறைக்க நீங்கள் வழிபட வேண்டிய தெய்வம் பைரவர். பைரவர் என்றாலே நம் வீதிகளில் சுற்றி திரியும் நாய்கள்தான்.

- Advertisement -

அந்த நாய்களின் ரூபத்தில் நாம் பைரவரை காணலாம். அந்த நாய்களுக்கு சனிக்கிழமை தோறும் இந்த தானத்தை மட்டும் செய்து பாருங்கள். உங்கள் வீண் விரைய செலவு அப்படியே பிரேக் போட்ட மாதிரி உடனடியாக நிற்கும்.

வீண் விரய செலவை குறைக்கும் பரிகாரம்

வீண் விரைய செலவு குறைய வேண்டும் என்றால் நேராக சிவன் கோவிலில் இருக்கும் பைரவர் பாதங்களை பிடித்துக் கொள்ளுங்கள். சனிக்கிழமை ஒரு பைரவர் கோவிலுக்கு சென்று, மாலை 6:30 மணிக்கு மேல் விளக்கு ஏற்ற வேண்டும். காலையில் 6:00 மணிக்கு முன்பு விளக்கு ஏற்ற உங்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் இன்னும் சிறப்பு அந்த நேரத்திலும் விளக்கு வைக்கலாம். உங்கள் சௌகரியம் தான்.

- Advertisement -

நெய் விளக்கு, நல்லெண்ணெய் விளக்கு, எது வேண்டும் என்றாலும் ஏற்றலாம். பைரவருக்கு செவ்வல்லி பூக்களை வாங்கி கொடுத்து பைரவரின் சன்னிதானத்தில் சிறிது நேரம் அமர்ந்து, வீண் விரைய செலவு குறைய, வருமானம் பெருக, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரக்கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். கூடவே உங்களுக்கு கடன் இருந்தால் அதை திருப்பி தரக்கூடிய வாய்ப்புகளை கொடு பைரவா என்றும் வேண்டுதல் வைக்கவும்.

வாரம் தோறும் சனிக்கிழமை என்றால் உங்கள் வீதியில் சுற்றி திரியும் தெரு நாய்களுக்கு பசும்பால் வையுங்க. ஆமாங்க, சனிக்கிழமை உங்கள் கைகளால் பசும்பாலை பைரவரது வாகனமான நாய்களுக்கு கொடுக்கும் போது, உங்கள் கர்ம வினைகள் அப்படியே குறைந்து, வீண் விரைய செலவும் கட்டுப்படும்.

- Advertisement -

தெரு நாய்களுக்கு தான் இந்த தானம் செய்ய வேண்டும் வீட்டில் வளர்க்கும் உங்க நாய்க்கு கொடுத்தால் அது பரிகாரம் இல்லை. வாரம் தோறும் சனிக்கிழமை தவறாமல் மேல் சொன்ன வழிபாட்டை செய்பவர்களுடைய வீட்டில் செல்வம் கொழிக்கும். உங்களுக்கு வசதி வாய்ப்பு இருக்கிறது தினமும் 1/4 லிட்டர் பால் வாங்கி ஒரு நாய்க்கு வைக்க முடியும் என்றால் தினமும் வைக்கலாம். அதில் எந்த தவறும் கிடையாது.

அதிலும் குறிப்பாக நம்முடைய வீதிகளில் சில நாய்கள் குட்டி போட்டு அப்படியே அந்த குட்டிகளை விட்டு விட்டு சென்றுவிடும். இந்த குட்டி நாய்கள் சாப்பிட உணவு இல்லாமல் வீடு வீடாக சென்று தவித்து வரும். அந்த குட்டி நாய்களுக்கு பசும்பால் வாங்கி குடிக்க கொடுக்கும்போது, அத்தனை புண்ணியம். ஒரு சின்ன கொட்டாங்குச்சியில் காய்ச்சிய பாலில் கொஞ்சம் சர்க்கரை போட்டு வைத்து விடுங்கள். அதுவே தானாக வந்து தினமும் குடித்துக் கொள்ளும். உங்கள் குடும்பத்திற்கே அந்த புண்ணியம் வந்து சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: இழந்த பணம் நகை சொத்து திரும்ப பெற வழிபாடு

இப்போதெல்லாம், ஒரு நாளைக்கு நாய்க்கு உணவு வைத்தால், தினமும் அந்த நாய் வீட்டு வாசலில் வந்து தொல்லை செய்கிறது என்று, அந்த நாயை விரட்டி அடிக்கக்கூடிய மனிதர்களைத்தான் நாம் பார்க்கின்றோம். அந்த தப்பு செய்யாதீங்க. மேல் சொன்ன வழிபாட்டு முறைகள் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் பின்பற்றி வாருங்கள். நிச்சயம் பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து குடும்பத்தில் நிம்மதி பிறக்கும் என்ற தகவலோடு ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -