செலவு செய்த பணம் இரட்டிப்பாக திரும்ப வர

money cash in hand
- Advertisement -

பணம் சம்பாதிக்கவும் பணத்தை சேமிக்கவும் சேமித்த பணத்தை பல மடங்காக பெருக்கவும் அனுதினமும் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். அந்த பணத்தை நம்மால் சேமிக்க முடியாமல் செலவழிந்து கொண்டே இருந்தால் என்ன தான் செய்வது. ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் திரும்ப நம்மிடமே பல ஆயிரம் மாத திரும்ப வர ஒரு அற்புதமான ஸ்விட்ச் வேர்ட்டை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

செலவு செய்த பணம் திரும்ப வர

முதலில் நாம் பணத்தை செலவு செய்யும் போது எவ்வாறு செலவு செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் செலவு செய்யும் பணம் திரும்ப நமக்கே வரும். ஒருவர் பணத்தை செலவழிக்கும் போதே ஐயோ இந்த பணம் நம் கையை விட்டு போகிறதே என்ற எண்ணம் வரக்கூடாது.

- Advertisement -

இதுவும் எல்லா செலவுக்கு பொருந்தாது தான். நியாயமான செலவுகள் நம் குடும்பத் தேவைக்காக செலவு செய்வது, வீட்டில் குழந்தைகளுக்காக செலவு, செய்வது கல்வி திருமணம் போன்ற சுப காரியங்களுக்காக செலவு செய்யும் பொழுது சந்தோஷமான மனநிலையில் செலவு செய்ய வேண்டும். இந்த மனநிலையில் செலவு செய்யும் பணமே மறுபடியும் நம்மிடம் வருவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தும் என்று சொல்லப்படுகிறது.

இதைத் தவிர்த்து தேவையில்லாத வீண் செலவுகள் ஆரோக்கியக் கேடு, அவசிய செலவு வீட்டில் பொருள்கள் சேதாரம் இதற்கான செலவு செய்யும் போது வருத்தம் ஏற்படும் அதில் தவறு கிடையாது. ஆனால் நியாயமான செலவு செய்யும் போது சந்தோஷமாக செலவு செய்ய வேண்டும்.

- Advertisement -

ஆகவே அனைவரும் பணம் செலவழிகிறதே என்று நினைக்காமல் செலவழியும் பணம் எதற்காக என்று யோசித்து செலவு செய்யுங்கள். இந்த சுவிட்ச் வேர்ட்டை நீங்கள் உங்கள் கையில் இருந்து பணத்தை எப்போது செலவழித்தாலும் உபயோகப்படுத்தலாம். அது ஆன்லைன் பரிவர்த்தனையாக இருந்தாலும் சரி அல்லது பணமாக கொடுத்தாலும் பயன் படுத்தலாம்.

ஸ்ரீம் பீரீஸ் 520 (stream breeze 520) இந்த ஒரு வார்த்தையை சொன்ன பிறகு பணத்தை செலவழிங்கள். செலவு செய்யும் ஒவ்வொரு ரூபாயும் நிச்சயம் உங்களுக்கு நல்ல வழியில் திரும்ப கிடைக்கும். இந்த வார்த்தைக்கான அர்த்தமே நம்மிடம் இருந்து செல்லும் பணம் யாரிடம் செல்கிறதோ அவர்களுக்கு நல்ல வழியில் செலவு ஆக வேண்டும் என்பது தான்.

- Advertisement -

இந்த எண்ணமே நம் பணத்தை உங்களுக்கு திரும்ப கொண்டு வந்து சேர்க்கும் என்று நம்பப்படுகிறது. நம்முடைய எண்ணத்திற்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இதைத் தான் நம் முன்னோர்கள் எண்ணம் போல் வாழ்க்கை என்று ஒரே வார்த்தையில் சொல்லி வைத்தார்கள். அது போல தான் இந்த எண்ணத்துடன் செலவு செய்யும் உங்கள் பணமும் திரும்பவும் உங்களுக்கு திரும்ப வரும்.

இதையும் படிக்கலாமே: மார்கழியில் செய்ய வேண்டிய லட்சுமி குபேர பூஜை

நாம் செலவழிக்கும் பணத்தை நம்மிடமே கொண்டு வந்து சேர்க்கும் இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து நல்ல பலனை பெறலாம்.

- Advertisement -